என் மலர்

    நீங்கள் தேடியது "festival"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நரிக்குடி அருகே அம்மன் கோவில் திருவிழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
    • இரு தரப்பினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் அழகிய மீனாள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக பள்ளப்பட்டி கிராமத்தினருக்கும், நரிக்குடியில் ஒரு பிரிவை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் பள்ளப்பட்டி கிராமத்தினர் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக திருச்சுழி வட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து வட்டாட்சியர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். 2 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி கோவில் திருவிழாவை நடத்திக் கொள்வதும் என்றும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப் படவும் முடிவு செய்யப் பட்டது.

    வருகிற 3-ந் தேதி மாலை 4 மணிக்கு கோவிலில் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த 5 பேர் மட்டும் பொங்கல் வைத்து சாமி கும்பிட வேண்டும். முக்கிய நிகழ்ச்சிகளின்போது மேள தாளம் இன்றி அமைதியான முறையில் வழிபாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந் தனைகள் விதிக்கப்பட்டது. இதற்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

    மேலும் புரட்டாசி மாத திருவிழா வழக்கமான நடைமுறைகளுடன் நடக்கும் எனவும், வைகாசி மாதத்தில் கோவில் திருவிழாவை அனைத்து ஊர் மக்களும் ஒன்று சேர்ந்து வழக்கமான நடைமுறையை பின்பற்றி நடத்துவது எனவும் கூட்டத் தில் முடிவு செய்யப் பட்டது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

    கூட்டம் முடிந்த பின் நேற்று மாலை பள்ளப்பட்டி கிராம மக்கள் கோவில் முன்பு காப்பு கட்டும் விழாவுக்காக வேப்பிலை கட்ட முயன்றனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வேப்பிலை தோரணத்தை கட்ட அனுமதி அளித்தனர். இதையடுத்து பள்ளப்பட்டி கிராம மக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

    இதில் பெண்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு கோவில் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கரூர் எம்.குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் சங்கத்தின் தொடக்க விழா

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் எம்.குமாரசாமி என்ஜீனியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் சங்கத்தின் தொடக்க விழா சர்.சி.வி.ராமன் அரங்கத்தில் நடைபெற்றது.

    துறைத் தலைவர் மோகன்பிரசாத் வரவேற்றார். கரூர் எம்.குமாரசாமி என்ஜீனியரிங் கல்லூரி செயலாளர் கே.ராமகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் பி.எஸ்.முருகன், சிறப்புரை யாற்றினார். சிறப்பு விருந்தினராக, சென்னை எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட். லிமிடெட் திட்டம் மற்றும் திட்டமிடல் தலைவர் இளங்கோ கலந்து கொண்டு மெக்கானிக்கல் என்ஜீனியரிங் சங்க விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.பின்னர் எலக்ட்ரிக் வாகனம் 2025 மற்றும் அதன் பாரத் ஸ்டேஜ் விதிமுறைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.சங்க ஆலோசகர் வினோத்குமார், 2023-24 கல்வியாண்டின் சங்க அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் தற்காலிக செயல்பாடுகளை அறிவித்தார். முடிவில் சங்க செயலாளரும் , இறுதியாண்டு பி.இ. மெக்கானிக்கல் என்ஜீனியரிங் மாணவருமான பாலமுருகன் நன்றி கூறினார் .

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் வெற்றி விழா கொண்டாட்டஆர். விஜயாலயன் தலைமையில் நடந்தது
    • 23 ஆயிரம் பேர் பல்வேறு அரசு துறைகளில் இன்றைக்கு பணியாற்றி வருகிறார்கள்

    திருச்சி 

    திருச்சி ராம்ஜி நகர் கே கள்ளிக்குடியில் அமைந்துள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் இன்று 43 -வது வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அகாடமி இயக்குனர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார். இதில் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற மாணவி அகானா பேசும்போது,

    விஜயாலயன் சார் மாதிரி வரலாறு மற்றும் பொருளாதார பாட வகுப்புகள் யாராலும் எடுக்க இயலாது. எப்போதும் வகுப்பில் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பார்.

    அதே போன்று படித்ததை திரும்ப திரும்ப படிக்க சொல்லுவார். அவரது வழிகாட்டுதல் எனது வெற்றிக்கு காரணமாக இருந்தது என்றார்.

    அவரது மாமா நாகராஜன் பேசும்போது,

    இந்த அகாடமியில் படித்த 23 ஆயிரம் பேர் பல்வேறு அரசு துறைகளில் இன்றைக்கு பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். புதியவற்றை கற்றுக் கொண்டே மாணவர்களுக்கு வகுப்பு நடத்துவதால் மிகுந்த உபயோகமாக இருக்கிறது. எங்களைப் போன்று நீங்களும் தேர்தல் வெற்றி பெற்று உங்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் அவர்களின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பணியாற்றும் இடங்களில் கையூட்டு பெற மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பலூர் அருகே எளம்பலூர் கோயிலில் சிறப்பு பூஜை
    • மெய்யன்பர்கள் சிறப்பு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அமைந்துள்ள காகன்னைஈஸ்வரர் ஆலயத்திலும், ஸ்ரீலஸ்ரீ அன்னை சித்தர் அதிஷ்டான சமாதி மணிமண்டபத்தில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் சிங்கப்பூர்,

    ஆத்ம ஞான அன்பு இல்லத்தை சேர்ந்த ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி ஆலய அமைப்பு மெய்யன்பர்கள் சிறப்பு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    நிகழ்ச்சியில் மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் மாதாஜி ரோகிணி, தவயோகி தவசிநாதன் சுவாமிகள், ராதா மாதாஜி, சிங்கப்பூர் பாரி சுவாமிகள், ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆலய குருசுவாமி ராகவேந்திர, தலைவர் பாரதி மற்றும் மெய்யன்பர்கள் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 191-வது வைகுண்டர் ஆண்டு 24-வது தேர்த்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.

    கோவை,

    கோவை அருகே வரதய்யங்கார்பாளையத்தில் ஆதிமூலப்பதி அய்யா வைகுண்ட சிவபதி உள்ளது. இங்கு 191-வது வைகுண்டர் ஆண்டு 24-வது தேர்த்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று காலை 6.30 மணிக்கு நாதஸ்வர வாத்தியம், செண்டை வாத்தியம் முழங்க சிறப்பு பணிவிடையுடன் கொடியேற்றம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து உகப்படிப்பு, அன்னதர்மம், உச்சிபடிப்பு, பணிவிடை, திருஏடு வாசிப்பு, இரவு 7.30 மணிக்கு அய்யா தொட்டியில் வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    23-ந் தேதி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உகப்படிப்பு, அன்னதர்மம், உச்சிப்படிப்பு, ஏடுவாசிப்பு, இரவு 7.30 மணிக்கு அய்யா மயில் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 24-ந் தேதி இரவு 8 மணிக்கு அன்னவாகனம், 25-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தொட்டில் வாகனம், 26-ந் தேதி இரவு 7.30 மணிக்கு பூஞ்சரப்ப வாகனம், 27-ந் தேதி சர்ப்ப வாகனம், 28-ந் தேதி இரவு 8.30 மணிக்கு கருடவாகனம் ஆகிய வாகனங்களில் அய்யா எழுந்தருளி பதிவலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அய்யா வெள்ளைக் குதிரை வாகனம் 30-ந் தேதி இரவு 9.30 மணிக்கு ஆஞ்சநேயர் வாகனம், அடுத்த மாதம் (அக்டோபர் 1-ந் தேதி) இரவு இந்திர வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதிவலம் வருதல் நடைபெறுகிறது.

    2-ந் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
    • கொடியேற்றத்தையொட்டி மாலை 6 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் சப்பரம் பவனியாக எடுத்து வரப்பட்டது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி மாலை 6 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் சப்பரம் பவனியாக எடுத்து வரப்பட்டது. பின்னர் புனித மிக்கேல் அதிதூதர் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை கோவில் தர்மகர்த்தா சேவியர் ஜமிலா கோவில் உள்ளிருந்து எடுத்து வந்தார்.

    இந்த புனித கொடியை குருவானவர்கள் ஜெபநாதன், லாரன்ஸ், பங்கு தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை ஜாண் ரோஸ் ஆகியோர் ஜெபம் செய்து அர்ச்சித்தனர். பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. பின்னர் அசன விருந்து வழங்கப்பட்டது.

    தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படு கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை, மன்றாட்டு மாலை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. ஒவ்வொரு திருவிழா நாட்களையும் அன்பியங்களை சேர்ந்த இறைமக்கள் சிறப்பிக்கிறார்கள். வருகிற 28-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படு கிறது.

    அன்று மாலை 7 மணிக்கு பாதிரியார் நெல்சன் பால்ராஜ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், அதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு புனிதரின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெறுகிறது. திராளான பக்தர்கள் இப்பவனியில் பங்கேற்று உப்பு, மிளகு, பூமாலை காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள்.

    29-ந்தேதி (வெள்ளிக்கி ழமை) 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் பாதிரியார் சகாயம் தலைமை யில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு புனிதரின் அலங்கார தேர்ப்பவனி நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு பவுர்ணமி மரிவல வழிபாடும், அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. இரவு அசனவிருந்து வழங்கப்படு கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சேவியர் ஜமிலா தலைமையில் விழாக்கு ழுவினர் செய்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருச்சி குணசீலம்பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ இன்று தொடங்குகிறது

    திருச்சி,  

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ உற்சவம் இன்று( ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

    முதல் நிகழ்வாக இன்று இரவு 7:15 மணிக்கு புண்யாக வசனம் மற்றும் அங்குரார் பணம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெறுகிறது. 2-வது நாள் நிகழ்வாக நாளை(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு புண்யாக வசனம், பேரீ தாடனம் நடக்கிறது. மேலும் இரவு 7.30 மணிக்கு ஸ்வர்ண கம்ச வாகன சேவை மற்றும் கண்ணாடி அறை சேவை நடக்கிறது. வருகிற 19ம் தேதி ஸ்வர்ண சிம்க வாகன சேவையும், 20ம் தேதி அனுமந்த வாகன சேவையும், 21ம் தேதி கருட சேவையும், 22 ம் தேதி சேஷ வாகன சேவையும், 23ம் தேதி கஜ வாகன சேவையும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவ விழா வருகிற 24-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை)மாலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக மாலை 6 மணிக்கு ஸ்ரீ பெருமாள் உபய நாச்சியாருடன் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளுகிறார். பின்னர் திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு திருவாராதனம், நெல் அளவை ஆகிய நிகழ்ச்சிகளும், இரவு 9:30 மணிக்கு புஷ்ப விமான புறப்பாடும், தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்னர் 25ம் தேதி அஸ்வ வாகன சேவை நடக்கிறது.

    வருகிற 26ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதை யடுத்து காலை 5 மணிக்கு திருவாராதன நிகழ்வும்,காலை 5.30 மணிக்கு ஸ்ரீ பெருமாள் உபய நாச்சியாருடன் தேர்தட்டில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் சரியாக காலை 8.30 மணிக்கு திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கிறார்கள். விழாவில் அரசு உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அதன் பின்னர் மாலை 4:30 மணிக்கு காவேரி தீரம் எழுந்தருளல், 5 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், 5.30 மணிக்கு தீர்த்தவாரி, மாலை 6.30 மணிக்கு ஏகாந்த மண்டப கும்ப தீபாராதனை, 6. 45 மணிக்கு பரம்பரை டிரஸ்டிகள் மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

    மேலும் வருகிற 27 ம் தேதி இரவு 8:30 மணிக்கு உத்வாசன பிரபந்தம் சமர்ப்பித்தல் நிகழ்ச்சியும், 28ம் தேதி

    இரவு 9:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு புறப்பாடு, இரவு 10மணிக்கு ஏகாந்த மண்டப கும்ப தீபாராதனை, இரவு 10.30 மணிக்கு கண்ணாடி அறை சேவை ஆகியவையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை சஷ்டிகள் சார்பில் கே ஆர்.பிச்சுமணி ஐயங்கார் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆலங்குடி ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி பெஞ்ச், டெஸ்க் வழங்கும் விழா நடைபெற்றது
    • சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளிக்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் மதிப்பில் பெஞ்ச் , டெஸ்க் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம. சுப்புராம் தலைமை வகித்து டெஸ்க் பெஞ்ச்களை வழங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பன்னீர்செல்வம் , தனராஜ் , செல்வராஜ், ஆலங்குடி நகர தலைவர் அரங்குளவன் மற்றும் காங்கிரஸ் கட்சி நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 18-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 வரை கணபதி ஹோமம், அபிஷேகம் நடைப்பெற்று ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துப்படி நடைப்பெற உள்ளது.
    • இரவு 8 மணியளவில் தினமும் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடு நடைப்பெறும்.

    சேலம்:

    சேலம் ராஜகணபதி கோவிலில் வருகிற 18-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. 18-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 வரை கணபதி ஹோமம், அபிஷேகம் நடைப்பெற்று ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துப்படி நடைப்பெற உள்ளது.

    இந்த விழாவை முன்னிட்டு 18-ந் தேதி முதல் 12 நாட்களுக்கு காலை, மாலையில் மூலமந்திர ஹோமம், லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 12 மணி வரை மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற உள்ளது.

    இரவு 8 மணியளவில் தினமும் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடு நடைப்பெறும். மேலும் மாலை வேலையில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளது.

    12-ம் நாள் காலை 7 மணி முதல் 10 மணி வரை மஞ்சள் நீராட்டு, வசந்த உற்சவமும், காலை 10 மணி முதல் 12.30 மணி வரை உற்சவ ஆஸ்தான பூஜைகள், 1008 லிட்டர் பால் அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து புஷ்பாஞ்சலி மற்றும் அன்னதானம் நடைப்பெற உள்ளது.

    எனவே அனைத்து பக்கதர்கள், பொதுமக்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று இறைவன் அருள் பெற வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா, அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியில் மாணவர்கள் வரவேற்பு விழா
    • பருத்தி ஆராய்ச்சி நிறுவன பயிரில் துறை தலைவர் சோமசுந்தரம் கலந்து கொண்டு பேசினார்

    பெரம்பலூர்,  

    பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வல்லபுரம் பிரிவு அருகே உள்ள தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான 16வது ஆண்டு வகுப்புகள் தொடக்க விழாவும் புதிய மாணவர்கள் வரவேற்பு விழாவும் நடைபெற்றது

    விழாவிற்கு தந்தை ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிறுவன பயிரில் துறை தலைவர் சோமசுந்தரம் கலந்து கொண்டு பேசினார்

    கல்லூரி முதல்வர் வஹாப் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் சக்திஸ்வரன் ஆகியோர் பேசினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் ஜெயசீலன் அலுவலக மேலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் செய்திருந்தனர்.

    முன்னதாக ஆசிரியர் அப்துல் ரகுமான் வரவேற்றார் முடிவில் முதலாம் ஆண்டு வகுப்பு ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo