search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srivaikundam"

    • வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.
    • பயணிகளுக்கு ரெயில்வே சார்பில் உணவு மற்றும் வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், சாலை எங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதில், திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்க வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் இரண்டு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு, ரெயிலில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம் வந்தடைந்தனர்.

    ரெயில் நிலையத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் வல்லூரில் இருந்து பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

    வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் மூலம் பயணிகள் அழைத்து வரப்படுகின்றனர். இந்த சிறப்பு ரெயில் நாளை காலை சென்னை வந்தடையும்.

    சிறப்பு ரெயிலானது சற்று நேரத்தில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.

    பயணிகள் அனைவருக்கும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும், ரெயில்வே சார்பில் உணவு மற்றும் வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    • ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவு.

    திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட விரைவு ரெயில் வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

    ஸ்ரீவைகுண்டத்தில் ரெயிலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

    டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் ரெயில்வே அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல். முருகன் ஆகியோர் கேட்டறிந்தனர்.

    ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    • ஸ்ரீவைகுண்டம் யூனியனில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் நடைபெற்றது.
    • ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசந்தா மணி, ஒன்றிய துணைத்தலைவர் விஜயன் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்று நடவு பணியை தொடங்கி வைத்தனர்.

    தென்திருப்பேரை:

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், கால நிலை மாற்றத்தை வலி யுறுத்தியும் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவ ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்ட மைப்பு) மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான தாமோதரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசந்தா மணி, ஒன்றிய துணைத் தலைவர் விஜயன் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்று நடவு பணியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி தன லட்சுமி மரக்கன்றுகள் நடவுப்பணியை மேற்கொண்டனர்.

    பின்னர் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் கூறியதாவது, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நாட்டின் பசுமைப் போர்வையை மேம்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் முழு வதும் 10 ஆயிரம் மரக்க ன்றுகள் பாதுகாப்பான இடங்களில் எங்களது தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

    • ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவோண நட்சத்திர நாளன்று வருஷாபிஷேகம் நடப்பது வழக்கம்.
    • சுவாமி கள்ளப்பிரான் கருட வாகனத்தில் காட்சி தந்தார்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான ஸ்ரீவை குண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கருடசேவை நடந்தது.

    ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவோண நட்சத்திர நாளன்று வருஷாபி ஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம், 8.30 மணிக்கு கும்பம் வைத்து ஹோமம் நடந்தது. 10 மணிக்கு பூர்ணாகுதி, 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 11 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்யப்பிர பந்தம், 12 மணிக்கு சாத்து முறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை, 7 மணிக்கு சுவாமி கள்ளப்பிரான் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். 9 மணிக்கு கருட வாகனத்தில் காட்சி தந்தார். பின்னர் வீதி உலா நடந்தது.

    நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு, நாராயணன், ராமானுஜன், சீனு, ஸ்தல த்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், கண்ணன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி, மண்டகபடிதாரர் வக்கீல் பிரகாஷ், சீனிவாச அறக்க ட்டளை பத்மநாபன் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள நத்தம் பகுதியில் பிரபு பாண்டியன் என்பவரது தோட்டத்தில் 12 அடி நீளம் உள்ள மலை பாம்பு புகுந்தது.
    • வனத்துறை அதிகாரிகள் தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பை வல்லநாடு மலைப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள நத்தம் பகுதியில் பிரபு பாண்டியன் என்பவரது தோட்டத்தில் 12 அடி நீளம் உள்ள மலை பாம்பு புகுந்தது. விவசாயிகளான பேரூர் முத்துராமலிங்கம், வசவபுரம் முத்து, கார்த்திக், சவுந்தர்பாண்டி, சங்கர் ஆகியோர் மலைபாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    ஸ்ரீவைகுண்டம் வன சரகர் பிருந்தா உத்தரவின்பேரில், வனத்துறை அதிகாரிகள் வெள்ளபாண்டி, கந்தசாமி, காசிராஜன் ஆகியோர் தோட்டத்தில் பிடிபட்ட மலைபாம்பை வல்லநாடு மலைப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

    • கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்
    • தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் இறங்கி வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவபெருமாள். (வயது 39). கூலி வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை.

    இந்நிலையில் சிவபெருமாள் நேற்று காலை கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பததால் அவரது குடும்பத்தினர் சிவபெருமாளை தேடி யுள்ளனர். இதற்கிடையில் நீண்ட நேரமாக கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஒரு பைக் நிற்பதாக அப்பகுதி மக்கள் செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து அங்கு விரைந்த ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை, செய்துங்கநல்லூர் உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது சிவ பெருமாளின் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்துள்ளதால் சிவபெருமாள் ஆற்றில் குளித்தபோது நீரில் இழுத்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதி ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத் துறை யினருக்கு போலீசார் தகவல் அளித்தனர்.

    தேடும் பணி தீவிரம்

    இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் இறங்கி சிவபெருமாளை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை பின்னர் வெளிச்சம் இல்லாத காரணத்தால் தேடுதல் முயற்சி கைவிடப்பட்டது.

    2-வது நாளான இன்று 10-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் கருங்குளம் தாமிரபரணி ஆற்று பாலத்தின் கீழ்ப்பகுதியில் இறங்கி சிவபெருமாளை தேடும் பணியில் ஈடு பட்டனர்.

    நேற்றை விட இன்று காலை ஆற்றில் தண்ணீர் குறைந்து ள்ளதால் தேடும் பணியில் முடுக்கிவிடப்பட்டது.

    இந்நிலையில் இன்று பிற்பகல் சகதிக்குள் சிக்கிய சிவபெருமாளை சடலமாக மீட்டனர்.

    • தேவர் சிலைக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சங்கர் உள்ளிட்ட காங்கிரசார் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜையை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முத்துராமலிங்க தேவரின் முழு உருவ வெண்கல சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் மாவட்ட தலைவர் சங்கர், காங்கிரஸ் பொருளாளர் எடிசன், எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லக்கண்ணு, கருங்குளம் வட்டார தலைவர் புங்கன், ஆழ்வார் திருநகரி வட்டார தலைவர் கோதண்டராமன், நகர தலைவர் கருப்பசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் அலங்கார பாண்டியன், சிவகளை பிச்சையா, மாவட்ட செயலாளர் சீனி ராஜேந்திரன், மங்களசெல்வி, மாரியம்மாள், பிரகாசி வட்டாரப் பொருளாளர் சந்திரன், மாவட்ட பேச்சாளர் ராஜவேல், நகரத் தலைவர் கருப்புசாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பாலசுப்பிரமணியன், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தேவர் உருவப்படத்திற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • 1985-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகில் சிலை அமைக்கப்பட்டது.
    • கருப்பசாமிபாண்டியன் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலை, மண்டபத்தை திறந்து வைத்தார்.

    தென்திருப்பேரை:

    ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகில் கடந்த 1985-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு கெட்டியம்மாள்புரம் ராமையா தேவரால் சிலை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலையை பராமரித்து வந்தனர்.

    இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 38ஆண்டு கால பழமையான சிமென்ட் சிலையை அகற்றி, அதற்கு பதிலாக புதியதாக முழுஉருவ வெண்கல சிலையையும், மணிமண்டபத்தையும், அதே இடத்தில் புதுப்பித்து அமைத்திட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

    முதன்முதலில் சிலை அமைத்து கொடுத்த ராமையா தேவரின் மகன்களும், தொழிலதிபர்களுமான ஏ.ஆர்.காசிப்பாண்டியன், ஏ.ஆர்.ராமசுப்பிரமணியன் ஆகியோர் வெண்கல சிலை அமைப்பதற்கும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் முத்துராமலிங்கத்தேவருக்கு கற்களால் மணிமண்டபம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    மேலும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினரின் தொடர் முயற்சிகளால் முத்துராமலிங்கத்தேவருக்கு கற்களால் மணிமண்டபமும், புதிய வெண்கல சிலையும் அமைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை திறப்பு விழா நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நடைபெற்றது.

    விழாவிற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ் தேவர் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் ஏ.ஆர்.காசிப்பாண்டியன், ஏ.ஆர்.ராமசுப்பிரமணியன் வெள்ளூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் எஸ்.ஆர்.முத்தையா, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் காசிராஜன், வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், பார்வர்டு பிளாக் மூத்த உறுப்பினர்கள் ஆறுமுகம் என்ற மருதுபாண்டியன், கால்வாய் முத்துபாண்டியன், மாவட்ட தலைவர் சிவராமன்கார்த்திக், மாநில மாணவரணி செயலாளர் கொம்பையாபாண்டியன், தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கால்வாய் முத்துராமலிங்கம், மாவட்ட பொருளாளர் துரைசரவணன், ஒன்றிய செயலாளர் சகாயம், நகர செயலாளர் விஜயன், நேதாஜி இளைஞர் படை தலைவர் ராமசாமி மற்றும் துரையப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பாற்கடல் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமிபாண்டியன், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ்தேவர் ஆகியோர் முன்னிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வெண்கல சிலை, மண்டபத்தை திறந்து வைத்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    விழாவில் முன்னாள் அமைச்சர்களும் மாநில அமைப்பு செயலாளர் களுமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., கடம்பூர்ராஜூ எம்.எல்.ஏ., இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர்கள் என்.சின்னத்துரை, சுதா பரமசிவம், முருகையாபாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர்முத்தையா, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    விழாவில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், பார்வர்டு பிளாக் நிர்வாகிகள், தொண்டர்கள், அகில இந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அனைத்து சமுதாய பிரமுகர்கள், வணிகர் சங்கத்தினர், தொழில்அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் ஸ்ரீவைகுண்டம் நகர அ.தி.மு.க. செயலாளர் காசிராஜன் நன்றி கூறினார்.

    • முத்துமாரியம்மன் தசரா குழுவினர் 38 வருடமாக தசரா திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
    • 7ம் திருவிழாவை முன்னிட்டு தசரா கூடம் முன்பு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே சேரகுளம் அருகே உள்ள சின்னார்குளம் கிராமத்தில் முத்துமாரியம்மன் தசரா குழுவினர் 38 வருடமாக தசரா திருவிழாவை நடத்தி வருகின்றனர். இங்கு வருடம் தோறும் தசரா திருவிழா மற்றும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி மற்றும் தசரா திருவிழா கால் நாட்டுடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினம் தோறும் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடந்தது. 7ம் திருவிழாவை முன்னிட்டு தசரா கூடம் முன்பு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திருமணமான பெண்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடை முத்துமாரியம்மன் தசரா குழுவினர் செய்திருந்தனர்.

    • தாமிரபரணி ஆற்று பாசனத்தில் மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் என நான்கு வாய்க்கால்கள் மூலமாக 53 குளங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • வடகால் பாசன வாய்க்கால் மூலம் 7 குளங்கள் தண்ணீர் வரத்து பெறுகின்றன. இந்த வடக்கு பிரதான கால்வாய் மூலம் 12,800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    தென்திருப்பேரை:

    தாமிரபரணி ஆற்று பாசனத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் இரண்டு அணைக்கட்டுகளும், மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் என நான்கு வாய்க்கால்கள் மூலமாக 53 குளங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் இடது புறத்திலிருந்து வடகால் பாசன வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வடகால் பாசன வாய்க்காலின் மொத்த நீளம் 19.25 கி.மீ. ஆகும். வடகால் பாசன வாய்க்கால் மூலம் 7 குளங்கள் தண்ணீர் வரத்து பெறுகின்றன. இந்த வடக்கு பிரதான கால்வாய் மூலம் 12,800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த வடகால் வாய்க்காலில் எல்.எஸ்.0 மீட்டர்முதல் 15 கிமீ வரை மண் திட்டுக்களும் காட்டுச்செடிகளும் அதிகளவில் காணப்படுவதால் தண்ணீர் செல்வது இடையூறாக இருந்து வருகிறது.

    ஸ்ரீவைகுண்டம் பகுதி பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் வடகால் வாய்க்காலை தூர் வாரி சீரமைத்து தரவேண்டும் என்று ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தமிழக அரசுக்கு வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தாமிரபரணி பாசன அமைப்பில் சிறப்பு தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

    இதன்படி ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன வாய்க்கால் 25 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணி தொடக்க விழா ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள மங்களகுறிச்சியில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, தாமிரபரணி நீர்வளத்துறை கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ஏரல் தாசில்தார் கண்ணன், பஞ்சாயத்து தலைவர் பேச்சியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு தூர் வாரும் பணிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் ஸ்ரீவைகுண்டம், வரதராஜபுரம், கீழ்பிடாகை கஸ்பா, மங்கலகுறிச்சி, சிறுத்தொண்டநல்லூர், கொட்டாரக்குறிச்சி, இருவப்பபுரம், ஆறுமுகமங்கலம், பழையகாயல், அகரம், மஞ்சள் நீர்க்காயல், கொற்கை, வாழவல்லான், சாயர்புரம், திருப்பணி செட்டிக்குளம், சேர்வைக்காரன்மடம், குலையன்கரிசல், அத்திமரப்பட்டி மற்றும் கோரம்பள்ளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம், உதவி பொறியாளர் பாஸ்டிங் வினு, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் அலங்காரபாண்டியன், சிவகளை பிச்சையா, ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லக்கண்ணு, நகர தலைவர் கருப்பசாமி, வட்டார செயலாளர் நிலமுடையான், வட்டார துணைத்தலைவர் அமச்சார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சொரிமுத்து, ஊடக பிரிவு பொறுப்பாளர் மரியராஜ், திருப்பணிசெட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், மற்றும் நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் வட்டார அளவிலான போட்டிகள் ஸ்ரீவைகுண்டம் ஆதிகுமரகுருபரசுவாமிகள் அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்றது.
    • 6 முதல் 8-ம் வகுப்பு, 9 முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்ட பள்ளிக்கல்விதுறை சார்பாக செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் வட்டார அளவிலான போட்டிகள் ஸ்ரீவைகுண்டம் ஆதிகுமரகுருபரசுவாமிகள் அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்றது.

    6 முதல் 8-ம் வகுப்பு, 9 முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற வீரர்கள் தூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவி சினேகவள்ளி பாலமுருகன், துணைத்தலைவர் கண்ணியம்மாள், பேரூராட்சி உறுப்பினர் பிரேம்குமார் சமூகஆர்வலர் சந்துரூ, வக்கீல் அமிர்தவள்ளி மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் செல்வகுமார், மரீயஜெபசீலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் இக்னேஷ்யல் சுமதி வரவேற்றார். போட்டியில் 252 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாட்டார்குளத்தில் புனித சூசையப்பர் ஆலயம் திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.
    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாட்டார்குளத்தில் புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் மே மாதம் திருவிழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 14 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவை முன்னிட்டு தினம் தோறும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பரபவனி நடந்தது. இதற்காக காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதனை சாத்தான்குளம் மறைமாவட்ட ரவிபாலன் நடத்தினார்.

    அதனை தொடர்ந்து சப்பர பவனி நடந்தது. இதில் மிக்கெல் சம்மன்ஸ், பரமோலாக மாதா, சூசையப்பர் என மூன்று சப்பரம் பவனி வந்தது. இந்த சப்பரம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் முன்பு வந்து நிறைவடைந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்குளம் பங்கைச் சேர்ந்த மக்கள் செய்திருந்தனர்.
    ×