search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவைகுண்டத்தில் தேவர் சிலைக்கு காங்கிரசார் மரியாதை- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்
    X

    தேவர் சிலைக்கு மாலை அணிவித்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.வை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ் தேவர் வரவேற்ற காட்சி.


    ஸ்ரீவைகுண்டத்தில் தேவர் சிலைக்கு காங்கிரசார் மரியாதை- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்

    • தேவர் சிலைக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சங்கர் உள்ளிட்ட காங்கிரசார் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜையை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முத்துராமலிங்க தேவரின் முழு உருவ வெண்கல சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் மாவட்ட தலைவர் சங்கர், காங்கிரஸ் பொருளாளர் எடிசன், எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லக்கண்ணு, கருங்குளம் வட்டார தலைவர் புங்கன், ஆழ்வார் திருநகரி வட்டார தலைவர் கோதண்டராமன், நகர தலைவர் கருப்பசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் அலங்கார பாண்டியன், சிவகளை பிச்சையா, மாவட்ட செயலாளர் சீனி ராஜேந்திரன், மங்களசெல்வி, மாரியம்மாள், பிரகாசி வட்டாரப் பொருளாளர் சந்திரன், மாவட்ட பேச்சாளர் ராஜவேல், நகரத் தலைவர் கருப்புசாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பாலசுப்பிரமணியன், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தேவர் உருவப்படத்திற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    Next Story
    ×