search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallapiran Temple"

    • ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் ஆண்டுதோறும் பவுத்ரோத்ஸவம் நடைபெறுவது வழக்கம் உண்டு.
    • இறுதி நாளான நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் ஆண்டுதோறும் பவுத்ரோத்ஸவம் நடைபெறுவது வழக்கம் உண்டு. கோவில்களில் தினசரி நடைபெறும் பூஜை முறைகளில் ஏதாவது விடுதல்கள் இருப்பின் அதற்கு பரிகாரங்களாக பவுத்ரோத்ஸவம் நடத்துவதும் வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பவுத்ரோத்ஸவம் கடந்த 3 நாட்கள் நடந்தது.

    இறுதி நாளான நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு சிறப்பு ஹோமம், 11 மணிக்கு பூர்ணாகுதி, நாலாயிர திவ்யப்பிரபந்தம் நடந்தது. மதியம் 12 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை, 6.30 மணிக்கு ஹோமம், 7.30 மணிக்கு தங்க தோளுக்கினியானில் சுவாமி கள்ளப்பிரான் தாயார்களுடன் புறப்பாடு நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், நாராயணன், வாசு, ராமானுஜன், சீனு, ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், திருவேங் கடத்தான், அத்யாபகர்கள் சீனிவாசன், பார்த்தசாரதி, சீனிவாசதாத்தம், நம்பி, கண்ணன், வைகுண்ட ராமன் சத்யநாராயண், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜித் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 6.30 மணிக்கு திருமஞ்சனம்,7 மணிக்கு தீபாராதனை, 7.30 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடந்தது.
    • மூலவர் பிரகாரத்தில் உற்சவர் கள்ளப்பிரான் நடை பாவாடை விரிக்கப்பட்டு கைத்தலத்தில் கர்ப்ப கிரகத்திற்குள் எழுந்தருளினார்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான ஸ்ரீவை குண்டம் கள்ளப் பிரான் கோவிலில் நேற்று சேஷ்டாபிஷேகம் நடந்தது. ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திர நாளன்று உற்சவர் கள்ளப்பிரான் சுவாமியின் கவசங்கள் படிகளையப் பெற்று பொற்கொல்லர் களால் அற நிலையத் துறையின் துணை ஆணையர் (சரிபார்ப்பு) அதிகாரிகள் முன்னிலையில் சுத்தப்படுத்தும் பணி நடைபெறும். காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 6.30 மணிக்கு திருமஞ்சனம்,7 மணிக்கு தீபாராதனை, 7.30 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடந்தது. 9 மணிக்கு உற்சவரின் கவசங்கள் படி களையப் பெற்று அதிகாரிகள் மற்றும் ஸ்தலத்தார்கள் முன்பு சுத்தப்படுத்தும் பணி நடை பெற்றது. பின்னர் அர்ச்சகர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு கவசங்கள் சாத்தப்பட்டது. மூலவர் பிரகாரத்தில் உற்சவர் கள்ளப்பிரான் நடை பாவாடை விரிக்கப்பட்டு கைத்தலத்தில் கர்ப்ப கிரகத்திற்குள் எழுந்தரு ளினார். தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர் களுக்கு வழங்கப்பட்டது.

    இதேபோல் நவதிருப்பதி கோவிலில் ஆழ்வார்திருநகரி கோவிலிலும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு நாராயணன், ராமானுஜம், சீனு ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், கண்ணன், திருவேங்கடத்தான், ஸ்ரீவேங்கட கிருஷ்ணன் வெங்கட்டநாராயன், வெங்கடேசன், கோவிந்த ராஜன், கண்ணன், நிர்வாக அதிகாரி கோவல மணி கண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி உட்பட பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    • தினமும் திருப்பாவை நான்காவது பாசுரம் ஆழி மழைக் கண்ணா பாடலை பாடி பிரார்த்தனை செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.
    • பெண்கள் உட்பட பக்தர்கள் கூட்டாகச் சேர்ந்து 1008 தடவை பாடி பிரார்த்தனை செய்தனர்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி தலங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் மழை வேண்டி பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர். தினமும் திருப்பாவை நான்காவது பாசுரம் ஆழி மழைக் கண்ணா பாடலை பாடி பிரார்த்தனை செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம். இதன்படி 7 நாட்கள் பொதுமக்கள் பிரார்த்தனை செய்திட வேண்டும் என முடிவு செய்தனர். அதன்பின் காலை 11 மணிக்கு சோரநாத நாயகி தாயார் சன்னதியில் அர்ச்சகர்கள் ரமேஷ், நாராயணன், வைகுண்டநாதன், ராமானுஜம், சீனு ஆகியோர் அர்ச்சனை செய்து கற்பூர ஆர்த்தியுடன் பாசுரத்தை ஆரம்பிக்க ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பெண்கள் உட்பட பக்தர்கள் கூட்டாகச் சேர்ந்து 1008 தடவை பாடி பிரார்த்தனை செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது.
    • சுவாமி வீதி உலா நடந்தது.

    ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் ஆன்மீக சிறப்புவாய்ந்த நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன. இதில் முதலாவது திருப்பதியான கள்ளபிரான் கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கும்பாபிசேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு வைகாசி மாத திருவோண நட்சத்திரத்தில் இந்த ஆண்டு கள்ளபிரான் சுவாமி கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது.

    இவ்விழாவை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம் , காலை 8 மணிக்கு கும்ப தீர்த்தம் வைக்கப்பட்டு காலை 9 மணிக்கு ஹோமம், காலை 9.30 மணிக்கு பூர்ணாகுதி, காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்கனம், காலை 11 மணிக்கு தீபாராதனை நாலாயிர திவ்ய கோஷ்டி, பகல் 12 மணிக்கு சாத்துமுறை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு உற்சவர் கள்ளபிரான் சுவாமி வாகனத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் கள்ளபிரான் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு சுவாமி வீதி உலா நடந்தது. முக்கியவீதிகள் வழியாக சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு, நாராயணன், ராமானுசம், சீனு, ஸ்தலத்தார்கள்ராஜப்பாவெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், கண்ணன், நிர்வாக அதிகாரி கோவலமணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜீத் உள்பட திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவோண நட்சத்திர நாளன்று வருஷாபிஷேகம் நடப்பது வழக்கம்.
    • சுவாமி கள்ளப்பிரான் கருட வாகனத்தில் காட்சி தந்தார்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான ஸ்ரீவை குண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கருடசேவை நடந்தது.

    ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவோண நட்சத்திர நாளன்று வருஷாபி ஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம், 8.30 மணிக்கு கும்பம் வைத்து ஹோமம் நடந்தது. 10 மணிக்கு பூர்ணாகுதி, 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 11 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்யப்பிர பந்தம், 12 மணிக்கு சாத்து முறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை, 7 மணிக்கு சுவாமி கள்ளப்பிரான் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். 9 மணிக்கு கருட வாகனத்தில் காட்சி தந்தார். பின்னர் வீதி உலா நடந்தது.

    நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு, நாராயணன், ராமானுஜன், சீனு, ஸ்தல த்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், கண்ணன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி, மண்டகபடிதாரர் வக்கீல் பிரகாஷ், சீனிவாச அறக்க ட்டளை பத்மநாபன் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×