ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் சேஷ்டாபிஷேகம்

காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 6.30 மணிக்கு திருமஞ்சனம்,7 மணிக்கு தீபாராதனை, 7.30 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடந்தது. மூலவர் பிரகாரத்தில் உற்சவர் கள்ளப்பிரான் நடை பாவாடை விரிக்கப்பட்டு கைத்தலத்தில் கர்ப்ப கிரகத்திற்குள் எழுந்தருளினார்.
சேஷ்டாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.
சேஷ்டாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

தென்திருப்பேரை:

நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான ஸ்ரீவை குண்டம் கள்ளப் பிரான் கோவிலில் நேற்று சேஷ்டாபிஷேகம் நடந்தது. ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திர நாளன்று உற்சவர் கள்ளப்பிரான் சுவாமியின் கவசங்கள் படிகளையப் பெற்று பொற்கொல்லர் களால் அற நிலையத் துறையின் துணை ஆணையர் (சரிபார்ப்பு) அதிகாரிகள் முன்னிலையில் சுத்தப்படுத்தும் பணி நடைபெறும். காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 6.30 மணிக்கு திருமஞ்சனம்,7 மணிக்கு தீபாராதனை, 7.30 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடந்தது. 9 மணிக்கு உற்சவரின் கவசங்கள் படி களையப் பெற்று அதிகாரிகள் மற்றும் ஸ்தலத்தார்கள் முன்பு சுத்தப்படுத்தும் பணி நடை பெற்றது. பின்னர் அர்ச்சகர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு கவசங்கள் சாத்தப்பட்டது. மூலவர் பிரகாரத்தில் உற்சவர் கள்ளப்பிரான் நடை பாவாடை விரிக்கப்பட்டு கைத்தலத்தில் கர்ப்ப கிரகத்திற்குள் எழுந்தரு ளினார். தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர் களுக்கு வழங்கப்பட்டது.

இதேபோல் நவதிருப்பதி கோவிலில் ஆழ்வார்திருநகரி கோவிலிலும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு நாராயணன், ராமானுஜம், சீனு ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், கண்ணன், திருவேங்கடத்தான், ஸ்ரீவேங்கட கிருஷ்ணன் வெங்கட்டநாராயன், வெங்கடேசன், கோவிந்த ராஜன், கண்ணன், நிர்வாக அதிகாரி கோவல மணி கண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி உட்பட பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

X

Maalai Malar
www.maalaimalar.com