search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tree sapling"

    • தற்போது மழை காலம் தொடங்கி இருப்பதால் கண்மாயின் 24 மடை கரையோரப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
    • கலெக்டர் லட்சுமிபதி புங்கை,வாதம் உள்ளிட்ட ஆகிய 6 வகையான நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி அருகில் உள்ள கோரம்பள்ளம் குளத்தில் சமீபத்தில் தூர்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது மழை காலம் தொடங்கி இருப்பதால் கண்மாயின் 24 மடை கரையோரப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி கலந்து கொண்டு புங்கை,வாதம், நீர்மருது, இலுப்பை, வெட்டிவேர், இயல் வாழை ஆகிய 6 வகையான நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தாமிரபரணி வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம், தாசில்தார் பிரபாகரன், மணி சுரேஷ், முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்கத் தலைவர் பூபதி, நிர்வாகிகள் ஜோதிமணி, சின்னராஜ், தானியல் மற்றும் விவசாய சங்கத்தினர் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவைகுண்டம் யூனியனில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் நடைபெற்றது.
    • ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசந்தா மணி, ஒன்றிய துணைத்தலைவர் விஜயன் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்று நடவு பணியை தொடங்கி வைத்தனர்.

    தென்திருப்பேரை:

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், கால நிலை மாற்றத்தை வலி யுறுத்தியும் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவ ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்ட மைப்பு) மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான தாமோதரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசந்தா மணி, ஒன்றிய துணைத் தலைவர் விஜயன் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்று நடவு பணியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி தன லட்சுமி மரக்கன்றுகள் நடவுப்பணியை மேற்கொண்டனர்.

    பின்னர் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் கூறியதாவது, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நாட்டின் பசுமைப் போர்வையை மேம்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் முழு வதும் 10 ஆயிரம் மரக்க ன்றுகள் பாதுகாப்பான இடங்களில் எங்களது தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

    • கமுதி நெடுஞ்சாலையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • சாலை ஆய்வாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-சாயல்குடி நெடுஞ்சாலையில் கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாவை தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து, கமுதி நெடுஞ்சாலை பகுதிகளில், நெடுஞ்சாலைதுறை சார்பில் உதவி கோட்ட பொறியாளர் சக்திவேல் ஏற்பாட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பார்த்திபன், சாலை ஆய்வாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.
    • பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் மரக்கன்றுகளை நட்டார்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பேரூராட்சி பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்பினர் மற்றும் பேரூராட்சி இணைந்து பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

    முதற்கட்டமாக பேரூராட்சி அருகில் உள்ள தனியார் பள்ளியில் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் பேரூராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம் கவுன்சிலர்கள் ஸ்ரீதரன், ராஜேஸ்வரி, சித்ரா, ஜெயலட்சுமி, சாவித்திரி, பேரூராட்சி அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேரூராட்சி பகுதிகள் முழுவதும் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நகர் பகுதிகள் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறும் என செயல் அலுவலர் வீரபாண்டியன் தெரிவித்தார். 

    • நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • அனைவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

    ஆறுமுகநேரி:

    சாகுபுரம் டி.சி. டபிள்யூ தொழிற்சாலை வளாகத்தில் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் பங்கேற்று மரக்க ன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    மேலும் அவர் சிறப்புரையாற்றிய போது, பிளாஸ்டிக் பொருள்களின் மறு பயன்பாடு மற்றும் மறுசுழ ற்சிக்கான வழிமுறை களை பற்றி பேசினார். மூத்த பொது மேலாளர் கேசவன், வீடுகள் மற்றும் ஆலைகளில் தண்ணீர் சிக்கனம், அவற்றை முறையாக பயன்படுத்துவது குறித்தும், துணை பொது மேலாளர் ரவிக்குமார் சுற்றுச்சூழல் தினத்தின் அவசியம் பற்றியும் பேசினர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிகளில் நிறுவ னத்தின் அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை டி.சி. டபிள்யூ நிறுவனத்தின் மக்கள் தொடர்பு துறையினர், சிவில் துறையினர் மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் செய்திருந்தனர்.

    • 25 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன
    • காவல் நிலையத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது


    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அறிவுறுத்தலின் பேரில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. காவல் ஆய்வாளர் உஷா நந்தினி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மா, பலா, கொய்யா, சந்தனம் மற்றும் 25 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. ஒவ்வொரு மரக்கன்றுகளுக்கும் கூண்டுகள் அமைத்து தண்ணீர் ஊற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அனைத்து போலீசார் உட்பட அருகில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    • 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏ.பெரியபாளையம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், ப்ளூ லைன் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சாலையோரம் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தீனதயாள், ராஜேஷ் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவுக்கு சப்-கலெக்டர் ரிசாப் தலைமை தாங்கினார்.
    • தாய் வீடு தொண்டு நிறுவனத்தின் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    முக்கூடல்:

    முக்கூடல் தாய் வீடு தொண்டு நிறுவனத்தின் 75-வது சுதந்திர தின பவள விழாவில் சப்-கலெக்டர் ரிசாப் கலந்து கொண்டு, தலைமை தாங்கி முக்கூடல் அரியநாயகிபுரம் அணைக்கட்டு நெடுஞ்சாலை ஓரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    விழாவில் தாய் வீடு தொண்டு நிறுவன நிர்வாகிகள் மகேஸ்வரன், ஆறுமுகம், கோமதி அம்மாள், அனிதா, சுதா, அருள் மற்றும் பொழில் தன்னார்வ இயக்கம், கோமதி அம்மாள் - கலாம் உதவும் கரங்கள் அறக்கட்டளை, டீரிம் டிவைனி பவுண்டேசன், மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் தாய் வீடு தொண்டு நிறுவனத்தின் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முக்கூடல் நகர வியாபாரிகள் சங்க தலைவர் பூமிபாலக பெருமாள், நாகராஜன், தன்னார்வலர்கள் ஆதிமூலம், பால்துரை, முக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின், கிராம நிர்வாக அலுவலர் பொன்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • தளவாய்புரம் பஞ்சாயத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • பஞ்சாயத்தை சோலை வனமாக்கும் அரசின் திட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மதன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    ஏர்வாடி:

    தளவாய்புரம் பஞ்சாயத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பஞ்சாயத்துக்கு ட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பஞ்சாயத்தை சோலை வனமாக்கும் அரசின் திட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மதன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, டி.வி.எஸ். அறக்கட்டளை முருகன், களக்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையர்கரசி, ஒன்றிய பொறியாளர் பிரவின், பணி மேற்பார்வையாளர் சீனிவாச ராகவன், நல்லையா பீட்டர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாச பெருமாள், ஊராட்சி செயலர் திருமலை நம்பி, பணிதள பொறுப்பாளர் நாச்சியார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×