என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்.
    X
    பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

    பால ஆஞ்சநேயர் கோவில் வைகாசி திருவிழா

    வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தில் பால ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி திருவிழா உற்சவம் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபும் கிராமத்தில் பழமை வாய்ந்தபாலஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 

    இந்த கோவிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு 19-ந்தேதி பால் குடம் எடுப்பதற்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

    மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டி யும் அங்கு உள்ள மாணிக்க விநாயகர் கோவிலில் இருந்து 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் எடுத்து சென்று ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது. அப்போது கோலாட்டம், வாணவே டிக்கை  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×