என் மலர்
நீங்கள் தேடியது "St.Soosaiyappar"
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாட்டார்குளத்தில் புனித சூசையப்பர் ஆலயம் திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.
செய்துங்கநல்லூர்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாட்டார்குளத்தில் புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் மே மாதம் திருவிழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 14 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு தினம் தோறும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பரபவனி நடந்தது. இதற்காக காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதனை சாத்தான்குளம் மறைமாவட்ட ரவிபாலன் நடத்தினார்.
அதனை தொடர்ந்து சப்பர பவனி நடந்தது. இதில் மிக்கெல் சம்மன்ஸ், பரமோலாக மாதா, சூசையப்பர் என மூன்று சப்பரம் பவனி வந்தது. இந்த சப்பரம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் முன்பு வந்து நிறைவடைந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்குளம் பங்கைச் சேர்ந்த மக்கள் செய்திருந்தனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாட்டார்குளத்தில் புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் மே மாதம் திருவிழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 14 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு தினம் தோறும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பரபவனி நடந்தது. இதற்காக காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதனை சாத்தான்குளம் மறைமாவட்ட ரவிபாலன் நடத்தினார்.
அதனை தொடர்ந்து சப்பர பவனி நடந்தது. இதில் மிக்கெல் சம்மன்ஸ், பரமோலாக மாதா, சூசையப்பர் என மூன்று சப்பரம் பவனி வந்தது. இந்த சப்பரம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் முன்பு வந்து நிறைவடைந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்குளம் பங்கைச் சேர்ந்த மக்கள் செய்திருந்தனர்.






