என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய முன்னாள் மாணவர்கள்
- மாணவர்களை ஊக்குவித்தால் அவர்களின் பல்வேறு திறன்கள் வளர்க்கப்படும்.
- முன்னாள் மாணவர்கள் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்த முன்வர வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை ப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டா டப்பட்டது. விழாவில் மாணவ- மாணவிகளின் தனித்திறன் போட்டிகளான கட்டுரை, கவிதை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பரிசுகள் வழங்கினர்.
அப்பொழுது முன்னாள் மாணவர்கள் கூறுகையில்:-
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு அப்பகுதியில் உள்ள முன்னாள் மாணவர்கள் இணைந்து இதுபோல் தற்போதைய மாணவர்களை ஊக்குவித்தால் மாணவர்களின் பல்வேறு திறன்கள் வளர்க்கப்படும்.
மேலும், முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த அரசு பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்தவும், பரிசு வழங்குவதற்கும் முன்வர வேண்டும் என்றனர். முன்னாள் மாணவர்களின் இந்த செயலை ஆசிரியர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்