search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Airport"

    • அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் குவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர்.
    • போலீசார் 4 பயங்கரவாதிகளிடமும் தொடர்ச்சியாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரும் பயங்கரவாத செயல்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் குஜராத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கடந்த 18-ந் தேதி அன்று தகவல் கிடைத்தது. ரெயில் அல்லது விமானம் மூலமாக குஜராத்துக்கு வந்து பயங்கரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் தீட்டி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் இலங்கையில் இருந்து சென்னை வழியாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் விமானத்தில் குஜராத்துக்கு வர இருப்பது உறுதியானது.

    இதன்படி நேற்று முன்தினம் அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் குவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர். போலீசார் எதிர்பார்த்த படியே இலங்கையில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் குஜராத் செல்வதற்கு டிக்கெட் எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது பெயர் முகமது நஸ்ரத், முகமது நப்ரான், முகமது ரஸ்தீன், முகமது பரீஸ் என்பதும் தெரிய வந்தது. அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேரும் வந்து இறங்கியதும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    உடனடியாக 4 பேரையும் பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பில் 4 பேரும் உறுப்பினர்களாக செயல்பட்டு வந்தது உறுதியானது.

    இலங்கையை சேர்ந்த 4 பயங்கரவாதிகளும் தமிழ் மட்டுமே பேசியுள்ளனர். வேறு மொழிகள் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து தமிழ் தெரிந்த போலீசாரை வைத்து 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேரும் குஜராத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியது அம்பலமானது.

    ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவராக திகழும் அபுபக்கர் அல் பாக்தாதி என்பவரோடு இவர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், குஜராத்தில் தாக்குதல் நடத்துவதற்கு அவரது கட்டளைக்காக காத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 4 பேரும் போலீசாரிடம் இதனை வாக்கு மூலமாக அளித்துள்ளனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் 4 பயங்கரவாதிகளிடமும் தொடர்ச்சியாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    ஐ.எஸ்.பயங்கரவாதிகள் 4 பேரும் குஜராத்தில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபுபக்கர் இது தொடர்பாக சில திட்டங்களை தீட்டி வைத்திருந்ததாகவும், 4 பேரும் கூறியுள்ளனர். குறிப்பிட்ட சில தலைவர்கள் மீது எப்போது எங்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை நீங்கள் குஜராத்துக்கு சென்று தங்கிய பிறகு சொல்கிறேன். அதுவரை காத்திருங்கள் என்றும் ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் 4 பேரிடமும் கூறி அனுப்பி வைத்து உள்ளார். ஆனால் அதற்குள் பயங்கரவாதிகள் 4 பேரும் போலீசில் சிக்கிக் கொண்டனர். பயங்கரவாத சதித் திட்டமும் முறியடிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து 4 பேரிடமும் குஜராத்தில் ஆயுதங்கள் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் அளித்த தகவலின் பேரில் அகமதாபாத்தில் நானா சிலோடா நகரில் ரகசிய இடத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். இதில் 3 துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவைகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என்று குஜராத் டி.ஜி.பி. விகாஸ் சகாய் தெரிவித்துள்ளார்.

    துப்பாக்கி மற்றும் தோட்டாக்களில் பாகிஸ்தான் பழங்குடியினரின் முத்திரை உள்ளது. இதன் மூலம் இந்த தாக்குதல் சதி திட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தலைவரான அபுபக்கரோடு இ-மெயில் மூலமாக 4 பேரும் உரையாடிய தகவல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் தாக்குதலுக்கான நேரம் பற்றி பின்னர் தெரிவிக்கப்படும் என்பது பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. குஜராத்தில் பா.ஜனதா தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களிலோ அல்லது அவர்கள் காரில் செல்லும்போதோ 4 பேரும் மனித வெடிகுண்டுகளாக மாறி நாட்டையே அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய தாக்குதலை அரங்கேற்றவும் சதித் திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.

    குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முகமது நஸ்ரத், முகமது நப்ரான், முகமது ரஸ்தீன், முகமது பரீஸ் ஆகிய 4 பேரும் இலங்கையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு ஒன்றில் இணைந்தே முதலில் செயல்பட்டுள்ளனர்.

    2019-ம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் கடந்த பிப்ரவரி மாதம் ஐ.எஸ். பயங்கரவாத தலைவரான அபுபக்கரை சந்தித்து ஐ.எஸ்.அமைப்பில் உறுப்பினராக சேர்ந்து உள்ளனர்.

    குஜராத்தில் நாச வேலையில் ஈடுபடுவதற்காக அபுபக்கர் ரூ.4 லட்சம் பணத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இது முன் பணமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கைதான 4 பேரில் முகமது நஸ்ரத்திடம் பாகிஸ்தான் விசா இருந்துள்ளது. அதையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இந்த விசாவை வைத்து நஸ்ரத் பாகிஸ்தான் சென்று வர திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.

    4 பயங்கரவாதிகள் மீதும் கூட்டு சதி, நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல், ஆயுத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். பாராளுமன்றத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதற்குள் 4 பேர் நாச வேலைக்கு திட்டம் தீட்டியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதை தொடர்ந்து கடைசி கட்டத் தேர்தல் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


    • திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையம் அருகே உயர் மின்னழுத்த மின் கம்பி அருந்து விழுந்தது.
    • ஏர்போர்ட் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் வெயிலின் தாக்கம் தணிந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

    அதன்படி நேற்று மாவட்ட முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. திருச்சி மாநகர் பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மாலை 4:20 மணிக்கு தொடங்கிய மழை இரவு 10 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி, கருமண்டபம், உறையூர் உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர். அதேபோன்று மேலபுதூர் சாலையில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இதன் காரணமாக பகுதிகளில் முதலியார் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையம் அருகே உயர் மின்னழுத்த மின் கம்பி அருந்து விழுந்தது. பின்னர் மின்வாரிய அதிகாரிகள் அதை சரி செய்தனர்.

    அதேபோன்று திருவெறும்பூர் பகுதியில் கல்லணை செல்லும் சாலையில் அரசங்குடி பகுதியில் சாலையோரம் இருந்த மரம் சாய்ந்தது.

    திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1154.1 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதில் அதிகபட்சமாக திருச்சி ஏர்போர்ட் பகுதியில் 129.4 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. அதேபோன்று திருச்சி ஜங்ஷன் 82.8, திருச்சி டவுன் 68 , பொன்மலை 45.2 மில்லி மீட்டர் மழை பெய்தது. புறநகர் பகுதிகளான கள்ளக்குடி 56.4, லால்குடி 81.6, நந்தியாறு அணைக்கட்டு 12.6,புள்ளம்பாடி 34.8,தேவி மங்கலம் 41.4, சமயபுரம் 120, சிறுகுடி 35.2, வாத்தலை அணைக்கட்டு 65.2, மணப்பாறை 74, பொன்னணியாறு டேம் 15.8, கோவில்பட்டி 21.4, மருங்காபுரி 15.2, முசிறி 53, புலிவலம் 20, தா.பேட்டை 44,நவலூர் கொட்டப்பட்டு 40, துவாக்குடி 52.1, கொப்பம்பட்டி 6, தென்பர நாடு 19, துறையூர் 21.


    ஏர்போர்ட் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது. ஏர்போர்ட் பாரதிநகர் பகுதியில் மழை நீர் வடிகால் பகுதிகளை ஆக்கிரமித்ததால் மழைநீர் செல்ல வசதியின்றி குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

    இதனால் தெருசாலைகள் துண்டிக்கப்பட்டதுடன், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வரும் காரணத்தினால் சாலைகள் அனைத்தும் துண்டாடப்பட்டு கிடக்கிறது.

    நேற்று பெய்த மழையில் சாலையே தெரியாத அளவுக்கு காலி மனைகளில் வெள்ள நீர் புகுந்து குளம் போல் தேங்கியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று தங்கள் வீடுகளில் முடங்கினர்.

    திருச்சி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் உச்சகட்டமாக இருந்தது 110 டிகிரி வரை வெயில் மக்களை சுட்டெரித்தது. வெயிலுக்கு பயந்து வீட்டில் முடங்கிய மக்கள் நேற்று மழைக்கு பயந்து வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. 

    • விமானம் அவசரமாக பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
    • விமானத்தில் இருந்த 179 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 179 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நேற்று இரவு கொச்சி நோக்கி புறப்பட்டனர்.

    அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது பக்க எந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

    பின்னர் விமானத்தில் இருந்த 179 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜகார்டா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
    • இது முழுக்க முழுக்க அவர்களின் அலட்சியத்தை காட்டுவதாக இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமான நிலைய நிர்வாகத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.

    இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜகார்டா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விமான நிலைய ஊழயர் ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிரான்ஸ்நூசா நிறுவனத்தின் ஏர்பஸ் A320 என்ற விமானத்தின் உள்ளே ஆய்வு செய்துவிட்டு இறங்க முயன்றுள்ளார். ஆனால் அவர் உள்ளே இருப்பதை கவனிக்காத பிற ஊழியர்கள் இறங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த ஏணியை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

    இதனால் நொடிப்பொழுதில் நிலை தடுமாறி அந்த ஊழியர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். விமான கதவு மூடப்படுவதற்கு முன்பே ஏணியை எதற்கு ஊழியர்கள் அகற்றினார்கள் என்றும் இது முழுக்க முழுக்க அவர்களின் அலட்சியத்தை காட்டுவதாகவும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமான நிலைய நிர்வாகத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.

    கவனக்குறைவு காரணமாக இதுபோன்ற அசம்பாவிதங்கள் விமான நிலையங்களில் நடப்பது தொடர்கதையாகி வருவதாகவும் நெட்டிசன்கள் நொந்துகொள்கின்றனர். இந்த சம்பவத்துக்கு நிர்வாகம் என்ன பதில் சொல்லப்போகிறது என்பதே அவர்களின் கேள்வியாக உள்ளது. 

    • சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல்
    • வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைநகர் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள பல பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து புகாரளித்த சில வாரங்களுக்குப் பிறகு, டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் மூலம் வந்தன. டெல்லியில் உள்ள சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.

    இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஜி.டி.பி. மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்தேவார் மருத்துவமனை, தீப்சந்தூர் மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், விமான நிலையம் மற்றும் பள்ளிகளைத் தொடர்ந்து, டெல்லி திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது.

    இதைதொடர்ந்து, டெல்லி போலீசார் சிறைக்குள் சோதனை நடத்தி வருகின்றனர், இதுவரை வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

    இந்த மிரட்டல் குறித்து டெல்லி காவல்துறைக்கு சிறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், முக்கிய அரசியல்வாதிகள் உட்பட சில உயர்மட்ட கைதிகள் உள்ள சிறைக்குள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    • புழுதி புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது
    • மும்பை நகரில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மும்பையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியது. இதனால் மும்பை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புழுதி புயலுடன் மழையும் பெய்ததால் மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறக்கப்படுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புழுதி புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மும்பை நகரில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மும்பையின் வடாலா பகுதியில் புழுதிப் புயல் வீசியதில் ராட்சத இரும்பு பேனர் ஒன்று பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு. 

    இதுவரை விபத்தில் சிக்கிய 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தகவல் தெரிவித்துள்ளனர்.

    • 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
    • இந்த விபத்தை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் உள்ள பிரதான விமான நிலையத்தில் 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

    ஏர் செனகல் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட டிரான்சைர் ஏர்லைனுக்கு சொந்தமான போயிங் 737-300 விமானம் மாலி நாட்டுக்கு புறப்படும் பொது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

    • வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைத்தனர்.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 20 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஷம்ஷா பாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்திற்குள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று புகுந்தது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைத்தனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 20 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. சிறுத்தை கூண்டுக்குள் சிக்காமல் அதிகாரிகளுக்கு ஆட்டம் காட்டி வந்தது.

    இந்த நிலையில் நேற்று வனத்துறையினர் அமைத்த 5 கூண்டுகளில் ஒன்றில் சிறுத்தை சிக்கியது. இதையடுத்து, கூண்டுகள் சிக்கிய சிறுத்தையை அதிகாரிகள் நேரு உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுத்தை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலைய பகுதியில் புகுந்தது.
    • கேமராவில் சிறுத்தையின் நடமாட்டத்தை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    தெலுங்கானா மாநிலம், சங்க ரெட்டியில் பசுவை சிறுத்தை ஒன்று கொன்றது. இந்த சிறுத்தை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலைய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்தது.

    விமான நிலையத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டத்தை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் 5 கூண்டுகளில் ஆடுகளை அடைத்து விமான நிலைய பகுதியில் வைத்தனர். கூண்டுகளுக்கு அருகில் வரும் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் அந்த பகுதியிலேயே சுற்றி ஆட்டம் காட்டி வருகிறது. இதனால் வனத்துறையினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

    • மர்ம நபர் போன் செய்து, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் விமான நிலையங்களில் குண்டு வெடிக்கப்போகிறது என மிரட்டல் விடுத்திருந்தார்.
    • விமான நிலையத்தை சுற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு மர்ம நபர் போன் செய்து, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் விமான நிலையங்களில் குண்டு வெடிக்கப்போகிறது என மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதையடுத்து இந்திய விமான ஆணையம் உடனடியாக அனைத்து விமானநிலையங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சோதனை நடத்த உத்தரவிட்டது.

    இதன்படி புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விமான நிலையத்தை சுற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டார்.
    • சென்னை விமான நிலையத்தில் தன்னை காண காத்திருந்த குட்டி குழந்தை ஒன்றை பார்த்து விஜய் கையசைத்தார்.

    'ஏஜிஎஸ்' பட நிறுவன தயாரிப்பில் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இது விஜய் க்கு 68- வது படமாகும். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி,சினேகா, லைலா, ஜெயராம்,யோகிபாபு, ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல நடிகை திரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்தபடத்தின் 'ஷூட்டிங்' பல கட்டமாக நடந்தது.

    இறுதிகட்ட ஷூட்டிங் ரஷிய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் படமாக்கப்பட இருந்தது. இதற்கான 'ஷூட்டிங்' லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு கடந்த மாதம் சென்றார். அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டார்.




    மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் விஜய் பங்கேற்று நடித்தார். அப்போது விஜய்க்கு கேரள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் 'கோட் 'படம் குறித்த முக்கிய 'அப்டேட்' இன்று வெளியானது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில் 'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் தற்போது துபாய் சென்றுள்ளார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டார்.

    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தன்னை காண காத்திருந்த குட்டி குழந்தை ஒன்றை பார்த்து விஜய் கையசைத்தார். அந்த குழந்தையுடன் விஜய் கொஞ்சி விளையாடினார்.இந்த வீடியோ இணைய தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அசாம் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • விபத்து காரணமாக கவுகாத்தி விமான நிலையத்தில் சேவை பாதிப்பு.

    அசாம் மாநிலத்தில் திடீர் கனமழை மற்றும் சூரை காற்று காரணமாக கவுகாத்தி சர்வதேச விமான நிலையம் சேதமடைந்தது. கனமழை, விமான மேற்கூரை இடிந்து விழுந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

    மேலும் விமான நிலையத்தின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதியுற்றனர். கனமழை காரணமாக விமான நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. எனினும், இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 



    ×