search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் கைது"

    • காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்து உள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் கடந்த 9-ந் தேதி போலீஸ்காரர் முகமது ஹபீஸ் ஷாக் வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்த போது அவர் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கையெறி குண்டுகள், துப்பாக்கி குண்டு குவியல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து நாசக்கார வேலைகளில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் ராணுவத்தினரின் உதவியுடன் குல்கம் மாவட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், துப்பாக்கி குண்டு குவியல்கள் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் பயங்கரவாதிகள் 5 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பரிதி ஜம்முவில் உள்ள மாநில கல்வி வாரியத்தில் பணிபுரிந்துள்ளார்.
    • இஷ்பாக் தோடா நீதிமன்ற வளாகத்தில் எழுத்தராக பணியாற்றியதும் தெரிய வந்துள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) மற்றும் குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) ஆகியவை இணைந்து பயங்கரவாதிகளை கைது செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    குறிப்பாக பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் இருந்து தப்பி ஓடி பல ஆண்டுகளாக தேடப்பட்டு வருபவர்களை கைது செய்யும் பணியும் நடந்து வருகிறது.

    இந்நிலையில் தோடா மாவட்டத்தில் ஆதில் பரூக் பரிதி, ஜாவேத் என்ற முகமது இக்பால், நிஷார் அகமது என்ற முஜாகித் உசேன், தாரிக் உசேன், இஷ்தியாக் அகமது, அஜாஸ்அகமது, ஜமீல் அகமது மற்றும் இஷ்பாக் அகமது என 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று போலீசார் தெரிவித்தனர்.

    இவர்களில் பரிதி ஜம்முவில் உள்ள மாநில கல்வி வாரியத்தில் பணிபுரிந்துள்ளார். இஷ்பாக் தோடா நீதிமன்ற வளாகத்தில் எழுத்தராக பணியாற்றியதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் ஜம்முவில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.
    • கைதான 2 பேரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நவீனரக துப்பாக்கிகள், மற்றும் வெடிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்,அவர்கள் சதி திட்டத்திற்காக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றார்களா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கைதான 2 பேரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    ×