search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் அதிரடி கைது
    X

    காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் அதிரடி கைது

    • இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.
    • கைதான 2 பேரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நவீனரக துப்பாக்கிகள், மற்றும் வெடிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்,அவர்கள் சதி திட்டத்திற்காக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றார்களா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கைதான 2 பேரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    Next Story
    ×