என் மலர்
இந்தியா

டெல்லியில் குண்டு வைக்க சதி- 2 பயங்கரவாதிகள் கைது
- இருவருக்கும் சர்வதேச அளவிலான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பது அம்பலமானது.
- கைதான 2 பேரும் தற்கொலை தாக்குதல் பயிற்சி எடுத்தவர்கள் என தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் அட்னான் உள்பட 2 பேரை பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
இருவருக்கும் சர்வதேச அளவிலான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பது அம்பலமானது. மேலும் கைதான 2 பேரும் தற்கொலை தாக்குதல் பயிற்சி எடுத்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் டெல்லியில் குண்டு வைக்கவும் அவர்கள் சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
Next Story






