search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு"

    • அப்பார்ட்மெண்ட், கோயில்கள் என பல இடங்களில் இவர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
    • திருடப்பட்ட ஷூக்களை சுத்தம் செய்து ஊட்டி, புதுச்சேரி போன்ற சுற்றுலா தளங்களில் அவர்கள் விற்றுள்ளனர்.

    பெங்களூரு நகரில் கடந்த 7 ஆண்டுகளாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிராண்டட் ஷூக்களை திருடிய 2 திருடர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    திருடர்களை கைது செய்த பின்பு அவர்களது வீட்டை காவல்துறையினர் சோதனை செய்தனர்.அப்போது, 715 -ற்கும் மேற்பட்ட பிராண்டட் ஷூக்களை காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் ஆகும். 

    இரவு நேரங்களில் ஆட்டோவில் வந்து அப்பார்ட்மெண்ட், கோயில்கள் என பல இடங்களில் இவர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.

    திருடப்பட்ட ஷூக்களை சுத்தம் செய்து ஊட்டி, புதுச்சேரி போன்ற சுற்றுலா தளங்களில் அவர்கள் விற்றுள்ளனர்.

    அண்மையில், வித்யாரண்யபுரா நகரில் உள்ள ஒரு வீட்டில் ஷூக்கள் மற்றும் 2 கேஸ் சிலிண்டர்களை இவர்கள் திருடியுள்ளனர். இது தொடர்பாக வீட்டுக்காரர் புகார் கொடுக்க அங்குள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது குற்றவாளிகள் பயன்படுத்திய ஆட்டோ விவரங்களை கண்டறிந்து 2 திருடர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    • பெங்களூரில் டாட்டூ சூத்ரா ஸ்டூடியோ வைத்திருக்கும் கலைஞர் ரிதேஷ் அகாரியா
    • அவரது நெஞ்சில் “F**k the police” என்று எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள டாட்டூ கலைஞர் ஒருவர் "F**k the police" என்று நபர் ஒருவரின் நெஞ்சில் குத்திய டாட்டூவை இணையத்தில் பகிர்ந்து வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார். பெங்களூரில் டாட்டூ சூத்ரா ஸ்டூடியோ வைத்திருக்கும் ரிதேஷ் அகாரியா என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவரின் நெஞ்சில் "F**k the police" என்று எழுதப்பட்டிருந்த டாட்டூவை பகிர்ந்ததிலிருந்தே இந்த பிரச்சனை தொடங்கியுள்ளது.

     

    இந்த புகைப்படம் வைரலாக நிலையில் போலீசின் கவனத்துக்கும் இது சென்றுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிதேஷ், தனது கடைக்கு வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் அவரது நெஞ்சில் "F**k the police" என்று எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

    இருந்தபோதிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக டாட்டூ கலைஞர் ரிதேஷ் அகாரியா மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 352 இந்த கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • இந்த சம்பவம் ஜூன் 26 ஆம் தேதி நடந்துள்ளது.
    • இந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு பெண் ஒருவர் போன் செய்து, மும்பை செல்லும் எனது காதலர் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தார்.

    இதனையடுத்து, விமான நிலைய ஊழியர்கள் அந்த நபரை தேட ஆரம்பித்தனர். அந்த நபரைக் கண்டுபிடித்ததும், அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர், ஆனால் வெடிகுண்டு எதுவும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.

    இதை தொடர்ந்து இந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்ணும் அதே விமானநிலையத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த பெண்ணும் அவரது காதலரும் கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு வெவ்வேறு விமானங்களில் புறப்பட தயாராக இருந்தனர். ஆனால் தனது காதலன் மும்பை செல்வதை அந்த பெண் விரும்பவில்லை. அதனால் தனது காதலனை பெங்களூரூவில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானத்தில் ஏறாமல் தடுக்கவே அப்பெண் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்று அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இந்த சம்பவம் ஜூன் 26 ஆம் தேதி நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சன்னப்பட்டினம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
    • மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சன்னப்பட்டினம் தொகுதி எம்..எல்.ஏ.வாக இருந்த மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய மந்திரியானார்.

    இதையடுத்து சன்னப்பட்டினம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. எனவே இந்த தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்தார்.

    இதையடுத்து இந்த தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகளும், பெங்களூரு ஊரக தொகுதி எம்.பி. டாக்டர் சி.என். மஞ்சுநாத்தின் மனைவியுமான அனசுயா போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    நடந்து முடிந்த தேர்தலில் அவர் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்தார். மேலும் பிரசாரத்தின் போது அவர் வகுத்த வியூகம் ஆகியவை வெற்றிக்கு கை கொடுத்தது. இதையடுத்து அனசுயா வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

    • ரெயில்வே துறையின் செயல்பாடும் ராணுவம் போன்றது.
    • டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம்.

    பெங்களூரு:

    மத்திய ரெயில்வே மற்றும் ஜல்சக்தி துறை இணை மந்திரி வி.சோமண்ணா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வந்தே பாரத் ரெயிலில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயணம் செய்யும் வகையில் அதன் டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசித்தோம். ரெயில்வே துறையில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவின் அனுபவம் எனக்கு ஊக்கமளிக்கிறது.

    ரெயில்வே துறையின் செயல்பாடும் ராணுவம் போன்றது. நாட்டில் ராணுவம் முதலிடத்திலும், ரெயில்வே துறை 2-வது இடத்திலும் உள்ளது. அதற்கேற்ப 2 துறைகளின் செயல்பாடுகளும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
    • நகைச்சுவையாக பேசி அந்த இளைஞரிடம் சில கேள்விகளை கேட்டார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டப த்தில் நேற்று தாலுகா அளவிலான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் நளின் அதுல் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கலெக்டர் மேடையில் இருந்தபடி முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் மனு வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கனககிரி கவுடா ஓனி பகுதியை சேர்ந்த சங்கப்பா என்ற வாலிபர் முகாமில் கலந்து கொண்டு தனக்கு மணமகள் தேடி தருமாறு கலெக்டர் நளின் அதுலிடம் மனு கொடுத்தார்.

    அப்போது அவர் கூறுகையில், `நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எஸ்.எஸ்.எல்.சி. படித்து விட்டு ஊரில் உள்ள தனியார் கல்லூரியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன்.

    விவசாய குடும்பத்தில் இருந்து வந்த நான் 10 ஆண்டுகளாக மணமகள் தேடி லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் நான் மனதளவில் கஷ்டப்படுகிறேன். நீங்கள் ஒரு மணப்பெண்ணை கண்டுபிடித்து என் திருமணத்திற்கு உதவுங்கள் என கோரிக்கை வைத்தார்.

    இதைக் கேட்டு மேடையில் இருந்த கலெக்டர் நளின் அதுல் மற்றும் அனைத்து அதிகாரிகளும் சிரித்தனர். மனுவை படித்து முடித்த கலெக்டர் நகைச்சுவையாக பேசி அந்த இளைஞரிடம் சில கேள்விகளை கேட்டார். கடைசியில் தாசில்தார் உங்களுக்கு பெண் தேடி தருவார் என கூறி, அந்த இளைஞரை சமாதானப்படுத்தினார்.

    • 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
    • பவித்ரா கவுடாவுக்கு வருத்தம் இல்லாதது குறித்து மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு

    பெங்களூரு:

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகா சாமி கொலை வழக்கு தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கில் இருந்து தப்பிக்க தர்ஷன், பவித்ரா கவுடா ஆகியோருக்கு அரசியல் கட்சியினர் ஆதரவாக செயல்பட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் போலீசார் அதை மறுத்து விட்டனர்.

    இந்த நிலையில் போலீஸ் காவலில் இருந்த போது பெண் சப்-இன்ஸ்பெக்டர் பாதுகாப்புடன் விசாரணைக்காக பவித்ரா கவுடாவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    அப்போது போலீஸ் காவலில் இருந்த போது பவித்ரா கவுடா தனது வீட்டில் இருந்து மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு திரும்பினார். அப்போது அவர் லிப்டிஸ் டிக் மற்றும் மேக்அப் போட்டு கொண்டு சிரித்தப்படி வந்ததாக தகவல் வெளியானது.

    மேலும் ரேணுகா சாமி கொலையில் பவித்ரா கவுடாவுக்கு வருத்தம் இல்லாதது குறித்து மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து பவித்ரா கவுடாவுடன் பாதுகாப்புக்கு சென்ற பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    • திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும்.

    பெங்களூரு:

    இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன். சுழற்பந்து ஜாம்பவானான இவர் கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரூ.1,400 கோடி முதலீடு செய்ய இருப்பதாக கர்நாடக தொழில்துறை மந்திரி எம்.பி. பாட்டீல் தெரிவித்து உள்ளார்.

    இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடினார்.

    இதுகுறித்து மந்திரி பாட்டீல் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக முதலில் ரூ.230 கோடி முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், தற்போது மொத்தம் ரூ.1,000 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ரூ.1,400 கோடியாக உயர்த்தப்படும். இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    மேலும், முரளீதரன் வரும் காலங்களில் தார் வாட்டில் மற்றொரு பிரிவையும் தொடங்க திட்டமிட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந் தேதி கைது செய்தனர்.
    • வருகிற 18-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 3 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். இதையடுத்து அவரை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர். அதன் பேரில் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந் தேதி கைது செய்தனர்.

    இதையடுத்து பலாத்கார வழக்குகள் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 2 முறை போலீஸ் காவலில் எடுத்து பிரஜ்வலிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் முடிவடைந்த நிலையில் அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்தநிலையில் பெங்களூருவில் சைபர் கிரைம் போலீசில் பதிவான பாலியல் வழக்கு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் காவலில் எடுக்க முடிவு செய்தனர். இதற்காக அவரை மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர் படுத்தினர்.

    அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, பிரஜ்வல் ரேவண்ணாவை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுமதி வழங்கினார்.

    அதன்படி வருகிற 18-ந்தேதி வரை பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    • யார் மீதும் பழி போடுவதில் அர்த்தமில்லை.
    • பொது இடங்களில் தேவையில்லாமல் அறிக்கை விடக்கூடாது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் கடந்த தேர்தலில் 27 இடங்களில் காங்கிரஸ் கட்சி தோற்றது. ஆனால் பெங்களூர் புறநகரில் மட்டும் கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல் மந்திரியுமான டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷ் வெற்றி பெற்றார்.

    பெங்களூர் புறநகர் டி.கே.சிவக்குமார், டி.கே. சுரேஷின் கோட்டையாக இருந்து வந்தது. இந்த தொகுதியில் கடந்த 2012-ல் நடந்த இடைத்தேர்தல், அதைத்தொடர்ந்து நடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் டி.கே.சுரேஷ் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

    இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் பெங்களூர் புறநகரில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ் 2 லட்சத்து 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், தேவகவுடாவின் மருமகனுமான டாக்டர் மஞ்சுநாத் வெற்றி பெற்றார்.

    இந்த தோல்வி டி.கே. சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் டி.கே.சுரேஷை திட்டமிட்டு கட்சியினர் தோல்வியடைய வைத்து விட்டனர் என்று டி.கே.சுரேசின் ஆதரவாளர்கள் பொதுவெளியில் பேச ஆரம்பித்தனர்.

    இந்த விவகாரம் கர்நாடக காங்கிரசில் பெரும் பூதாகரமாக வெடித்து உள்ளது. ஏற்கனவே முதல் மந்திரி சித்தராமையாவுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பேசி வரும் நிலையில் டி.கே.சுரேஷ் தோல்வியால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமீபத்திய தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு எச்சரிக்கை மணி. தோல்வி குறித்து மாநிலம் முழுவதும் உள்ள தொகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கூட்டங்களுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

    அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் அந்த எண்ணிக்கையை எட்ட முடியவில்லை. மக்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும். கட்சி தலைவர்களின் சொந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து வாக்குகள் கிடைக்கவில்லை.

    தேர்தல் தோல்விக்கு சில எம்.எல்.ஏ.க்கள் மீது அமைச்சர்கள் குற்றம் சாட்டுவது குறித்து கேட்டபோது இதுபற்றி யாரும் என்னிடம் புகார் செய்யவில்லை. யார் மீதும் பழி போடுவதில் அர்த்தமில்லை.

    தோல்விக்கான காரணம் குறித்து தொகுதி பொறுப்பில் உள்ள தலைவர்கள், தொண்டர்களிடம் பேசி அதற்கான காரணங்களை ஆராய வேண்டும். அதை விட்டுவிட்டு எம்.எல்.ஏ.க்கள் பொது இடங்களில் தேவையில்லாமல் அறிக்கை விடக்கூடாது. கட்சி தொண்டர்களுடன் அமர்ந்து பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    • 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்ட முன்னாள் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33) பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் கர்நாடகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக அவர் மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவானது. இந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தார்.

    பின்னர் கடந்த மாதம் 31-ந் தேதி ஜெர்மனியில் இருந்து பெங்களூரு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். அவரை 6-ந்தேதி முதல் 10-ந்தேதி (நேற்று) வரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் நேற்று காலையில் பெங்களூரு பசவனகுடியில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வீட்டுக்கும், அவரை போலீசார் அழைத்து சென்றார்கள்.

    பிரஜ்வல் ரேவண்ணாவை போலீசார் அழைத்து சென்றபோது வீட்டின் முதல் மாடியில், அவரது தாய் பவானி ரேவண்ணா இருந்தார். ஆனாலும் தாயை சந்திக்கவும், அவருடன் பேசுவதற்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கடத்திய வழக்கில் பவானி ரேவண்ணா முன்ஜாமீன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்றுடன் போலீஸ் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் நேற்று மதியம் 3 மணியளவில் பிரஜ்வல் ரேவண்ணாவை நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினா்.

    இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் இருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஏற்கனவே பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கடத்தியதாக, அவரது தந்தையான முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா இதே பரப்பனஅக்ரஹாரா சிறையில் கடந்த மாதம் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 6 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெங்களூருவில் போதை விருந்து வழக்கில் தெலுங்கு நடிகை ஹேமா கைது.
    • போலீஸ் சோதனையின் போது, ஆந்திரா, கர்நாடக திரை உலகினர் பங்கேற்றது தெரியவந்தது.

    பெங்களூரு புறநகர் பகுதியில் சிங்கேனா அக்ரஹாராவில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் கடந்த மே 20 மாலை 'சன்செட் டு சன்ரைஸ் விக்டரி' என்ற தலைப்பில் நடந்த ரேவ் பார்ட்டியில் தொழில்நுட்பக் கலைஞர்கள், தெலுங்கு நடிகர்கள், கர்நாடகாவின் பெரிய புள்ளிகள் அவர்களின் வாரிசுகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டர்.

    இந்த பார்ட்டியில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவலறிந்து அங்கு சென்ற கர்நாடக காவல்துறையினர், எம்.டி.எம்.ஏ, கோகைன், ஹைட்ரோ கஞ்சா மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ஹேமா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றதாக சந்தேகிக்கப்படுகிறது

    இந்நிலையில் போதைப்பொருள் விநியோகத்துடன் பாலியல் தொழிலும் நடத்தப்பட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த பார்ட்டியில் கலந்துகொள்ள ஒவ்வொரு நபரிடமும் நுழைவுக் கட்டணமாக ரூ.2 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரவது கேட்டால் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டதாகக் கூறும்படி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வழக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    கர்நாடகாவைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதையே அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ரேவ் பார்ட்டிகளை பொறுத்துக் கொள்ளாது என்றும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார்.

    இந்த ரேவ் பார்ட்டி தொடர்பாக, தெலுங்கு நடிகை ஹேமாவிடம் கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இந்த ரேவ் பார்ட்டிக்கு செல்லவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட போதை பொருள் உட்கொண்டது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து நடிகை ஹேமாவை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×