என் மலர்
நீங்கள் தேடியது "ஐதராபாத் விமான நிலையம்"
- சிறுத்தை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலைய பகுதியில் புகுந்தது.
- கேமராவில் சிறுத்தையின் நடமாட்டத்தை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தெலுங்கானா மாநிலம், சங்க ரெட்டியில் பசுவை சிறுத்தை ஒன்று கொன்றது. இந்த சிறுத்தை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலைய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்தது.
விமான நிலையத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டத்தை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் 5 கூண்டுகளில் ஆடுகளை அடைத்து விமான நிலைய பகுதியில் வைத்தனர். கூண்டுகளுக்கு அருகில் வரும் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் அந்த பகுதியிலேயே சுற்றி ஆட்டம் காட்டி வருகிறது. இதனால் வனத்துறையினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
- வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைத்தனர்.
- சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 20 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஷம்ஷா பாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்திற்குள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று புகுந்தது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைத்தனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 20 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. சிறுத்தை கூண்டுக்குள் சிக்காமல் அதிகாரிகளுக்கு ஆட்டம் காட்டி வந்தது.
இந்த நிலையில் நேற்று வனத்துறையினர் அமைத்த 5 கூண்டுகளில் ஒன்றில் சிறுத்தை சிக்கியது. இதையடுத்து, கூண்டுகள் சிக்கிய சிறுத்தையை அதிகாரிகள் நேரு உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.
- விமான நிலைய பணியாளர்கள் பயணிகள் ஓய்வு அறை அருகே உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- அப்போது கழிவறை அருகே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஐதராபாத், ஹம்ஹாத் பகுதியில் ராஜூவ் காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும், உள்நாட்டில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று விமான நிலைய பணியாளர்கள் பயணிகள் ஓய்வு அறை அருகே உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிவறை அருகே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குழந்தையை கழிவறையில் வீசி சென்ற தாய் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை பிறந்து 2 நாட்களே ஆகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தவறான வழியில் குழந்தை பிறந்திருக்கலாம். இதனால் அந்த குழந்தையை விமான நிலைய கழிவறையில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






