என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Hyderabad Airport"
- விமான நிலைய பணியாளர்கள் பயணிகள் ஓய்வு அறை அருகே உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- அப்போது கழிவறை அருகே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஐதராபாத், ஹம்ஹாத் பகுதியில் ராஜூவ் காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும், உள்நாட்டில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று விமான நிலைய பணியாளர்கள் பயணிகள் ஓய்வு அறை அருகே உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிவறை அருகே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குழந்தையை கழிவறையில் வீசி சென்ற தாய் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை பிறந்து 2 நாட்களே ஆகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தவறான வழியில் குழந்தை பிறந்திருக்கலாம். இதனால் அந்த குழந்தையை விமான நிலைய கழிவறையில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகளை சிஐஎஸ்எப் வீரர்கள் சோதனை செய்தனர்.
விசாரணையில் அவர் அபுதாபியில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்துவருவதும், விஜயவாடாவில் சமீபத்தில் நடைபெற்ற படகுப் போட்டியை பார்க்க வந்திருந்ததும் தெரியவந்தது.
மேலும், தன் மகன் துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருப்பதாகவும், தன்னுடன் வந்திருந்த மகன் முன்கூட்டியே சென்றபோது, தோட்டாக்களை தனது பேக்கில் விட்டுச் சென்றதாகவும் நிகோல் கூறியுள்ளார். #HyderabadAirport #ItalianBusinessmanArrested
கத்தார் நாட்டின் தோகா நகரில் இருந்து ஐதராபாத்துக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. விமானம் இன்று அதிகாலை ஐதராபாத்தை நெருங்கியபோது, விமானத்தில் பெற்றோருடன் பயணம் செய்த 11 மாத குழந்தையான அர்னவ் வர்மாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் குழந்தையை அவசரம் அவசரமாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.
குழந்தையின் தந்தை அனில் வர்மா இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தார். ஆனால் அவரது குழந்தைக்கு அமெரிக்க பாஸ்போர்ட் இருந்தது. #QuatarAirways #BabyDiesInFlight
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்