என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » baby dies
நீங்கள் தேடியது "baby dies"
பொள்ளாச்சி அருகே ஆற்றில் தவறி விழுந்து 1½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் அரண்மனை தெருவை சேர்ந்தவர் மாசியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி.
இவர்களுக்கு 1½ வயதில் ஜெயகிருஷ்ணன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்களது வீடு அருகே நடுபுனி ஆறு செல்கிறது.
நேற்று நந்தினி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நகர்ந்து, நகர்ந்து வீடு அருகே உள்ள ஆற்றங்கரைக்கு சென்றுள்ளான். அங்குள்ள மரத்தின் கீழே அமர்ந்து விளையாடிய ஜெய கிருஷ்ணன் எதிர்பாராத விதமாக தவறி ஆற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கினான்.
வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாததால் அதிர்ச்சியடைந்த நந்தினி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தேடிப் பார்த்த போது குழந்தை ஆற்றில் கிடந்ததை கண்டனர்.
உடனே அவர்கள் குழந்தையை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து மாசியப்பன் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் அரண்மனை தெருவை சேர்ந்தவர் மாசியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி.
இவர்களுக்கு 1½ வயதில் ஜெயகிருஷ்ணன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்களது வீடு அருகே நடுபுனி ஆறு செல்கிறது.
நேற்று நந்தினி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நகர்ந்து, நகர்ந்து வீடு அருகே உள்ள ஆற்றங்கரைக்கு சென்றுள்ளான். அங்குள்ள மரத்தின் கீழே அமர்ந்து விளையாடிய ஜெய கிருஷ்ணன் எதிர்பாராத விதமாக தவறி ஆற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கினான்.
வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாததால் அதிர்ச்சியடைந்த நந்தினி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தேடிப் பார்த்த போது குழந்தை ஆற்றில் கிடந்ததை கண்டனர்.
உடனே அவர்கள் குழந்தையை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து மாசியப்பன் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகாவில் இருந்து ஐதராபாத் வந்த விமானத்தில் பயணம் செய்த 11 மாத குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. #QuatarAirways #BabyDiesInFlight
புதுடெல்லி:
கத்தார் நாட்டின் தோகா நகரில் இருந்து ஐதராபாத்துக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. விமானம் இன்று அதிகாலை ஐதராபாத்தை நெருங்கியபோது, விமானத்தில் பெற்றோருடன் பயணம் செய்த 11 மாத குழந்தையான அர்னவ் வர்மாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் குழந்தையை அவசரம் அவசரமாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.
குழந்தையின் தந்தை அனில் வர்மா இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தார். ஆனால் அவரது குழந்தைக்கு அமெரிக்க பாஸ்போர்ட் இருந்தது. #QuatarAirways #BabyDiesInFlight
கத்தார் நாட்டின் தோகா நகரில் இருந்து ஐதராபாத்துக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. விமானம் இன்று அதிகாலை ஐதராபாத்தை நெருங்கியபோது, விமானத்தில் பெற்றோருடன் பயணம் செய்த 11 மாத குழந்தையான அர்னவ் வர்மாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் குழந்தையை அவசரம் அவசரமாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.
குழந்தையின் தந்தை அனில் வர்மா இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தார். ஆனால் அவரது குழந்தைக்கு அமெரிக்க பாஸ்போர்ட் இருந்தது. #QuatarAirways #BabyDiesInFlight
முதுகுளத்தூர் அருகே தந்தை ஓட்டிய வேனின் அடியில் சிக்கி உடல் நசுங்கி குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுகுளத்தூர்:
முதுகுளத்தூர் அருகே உள்ள கொண்டுலாவி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 28). சரக்கு வேன் ஓட்டி தொழில் செய்து வந்தார்.
இன்று காலை வீட்டில் இருந்து அவர் வேலைக்கு புறப்பட்டார். அப்போது சரக்கு வேனை பின்னோக்கி எடுத்தார்.
அந்த நேரத்தில் அவரது மகன் வருண் (வயது 2) வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தான். அவன் வேனின் பின்புறம் நின்றதை முருகன் கவனிக்கவில்லை.
பின்னோக்கி வந்த வேன் குழந்தை வருண் மீது மோதியது. வேனின் அடியில் சிக்கிய வருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுகுளத்தூர் அருகே உள்ள கொண்டுலாவி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 28). சரக்கு வேன் ஓட்டி தொழில் செய்து வந்தார்.
இன்று காலை வீட்டில் இருந்து அவர் வேலைக்கு புறப்பட்டார். அப்போது சரக்கு வேனை பின்னோக்கி எடுத்தார்.
அந்த நேரத்தில் அவரது மகன் வருண் (வயது 2) வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தான். அவன் வேனின் பின்புறம் நின்றதை முருகன் கவனிக்கவில்லை.
பின்னோக்கி வந்த வேன் குழந்தை வருண் மீது மோதியது. வேனின் அடியில் சிக்கிய வருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X