என் மலர்
நீங்கள் தேடியது "Andhra Girl"
- கடந்த ஞாயிற்றுக்கிமை அன்று பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி வீடு திரும்பவில்லை.
- சிறுமியின் தந்தை முச்சுமாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் 8 வயது பள்ளி சிறுமி 12 மற்றும் 13 வயதுடைய 3 சிறுவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிமை அன்று பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து, உறவினர்கள் வீடுகளில் தேடியும் சிறுமி கிடைக்காததால் சிறுமியின் தந்தை முச்சுமாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை அடுத்து சிறுமியை பல இடங்களில் தேடி கிடைக்காததால் போலீசார் மோப்ப நாயை வரவழைத்தனர். அந்த மோப்ப நாய் அப்பகுதியை சேர்ந்த 6 மற்றும் 7 வகுப்பு படிக்கும் 12, 13 வயதுடைய மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றது. இதையடுத்து போலீசார் அம்மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தகவல் வெளியானது.
பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை முச்சுமரி அணைக்கு அருகே ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து சிறுமி வெளியே சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில் சிறுமியை கொலை செய்து உடலை பாசன கால்வாயில் வீசியதாகவும் கைதான சிறுவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அமராவதியில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள முச்சுமரி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை.
- இன்னும் சிறுமியின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
- கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளதாக ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் 8 வயது பள்ளி சிறுமி 12 மற்றும் 13 வயதுடைய 3 சிறுவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கைதான மாணவர்கள் மொபைலில் ஆபாச படம் பார்த்து, அதே போன்ற செயலில் ஈடுபட திட்டம் தீட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 7-ந்தேதி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த 6 மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் 12, 13 வயதுடைய மாணவர்கள் 3 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தனர். சிறுமி இச்சம்பவத்தை வெளியே கூறிவிடுவாள் என்று பயந்து சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
பிறகு, சிறுமியின் உடலை கால்வாயில் மறைத்து வைத்தனர். சிறுமி உயிரிழந்ததால் பதற்றம் அடைந்த மாணவர்கள் தங்களது தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளனர். இதையடுத்து மாணவரின் தந்தை மற்றும் உறவினர் ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு உயிரிழந்த சிறுமியின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து, கிருஷ்ணா நதிக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு வைத்து, சிறுமியின் உடலில் கல்லை கட்டி சடலத்தில் நதியில் வீசியுள்ளனர். இன்னும் சிறுமியின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
"குற்றச்சாட்டில் ஈடுபட்டபவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். டிரோன், தண்ணீரில் இயங்கும் கேமரா, தேசிய பேரிடர் மீட்பு படை உதவியோடு சிறுமி உடலை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உடல் கிடைக்கும் வரை தேடும் பணிகள் தொடரும்," என்று எஸ்பி ஆதிராஜ் சிங் ரானா தெரிவித்தார்.
முன்னதாக, கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளதாக ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா தெரிவித்தார்.
- தற்போது மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கோதப்பட்டினத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை உயிரிழந்ததுள்ளது. மேலும் யாருக்கும் தெரியப்படுத்தாமல் பல மணிநேரம் பிரசவ வலியால் துடித்த மாணவி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் பள்ளியில் சேர்ந்த மாணவி, தொடர்ந்து வகுப்புகளுக்கு சென்று வந்துள்ளனார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று பல மணி நேரமாக பிரசவ வலியால் அவதிப்பட்ட மாணவி, வகுப்பில் இருந்து கழிவறைக்குச் சென்று குழந்தை பெற்றுள்ளார். அவர் தனது உடல்நிலை குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை.
மாணவி நீண்ட நேரம் வகுப்புக்குத் திரும்பாததால், அவளது தோழிகளும், ஆசிரியர்களும் கழிவறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது தான் கழிவறையில் மாணவி ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியை மீட்ட போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றனர்.
- தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியை சேர்ந்த சந்து என்பவரை காதலித்து வந்தார்.
இவர்களது காதலுக்கு சிறுமியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சந்துவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் பெத்தாபுரத்தில் வீடு வாடகை எடுத்து தங்கி இருந்தனர்.
மகள் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் அனக்கா பள்ளி போலீசில் புகார் செய்தனர். போலீசார் பெத்தாபுரத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர். மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக சந்துவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
சிறுமியை மீட்ட போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றனர். அவரது பெற்றோர்கள் மகளை ஏற்க முடியாது என தெரிவித்தனர். இதனால் சிறுமியை சந்துவின் தாயார் நீலிமாவிடம் ஒப்படைத்தனர்.
இதன்பின், மாமியார் நீலிமாவும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து சிறுமியை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபட வைத்தனர்.
அடிக்கடி மயக்க மாத்திரைகளை கொடுத்து சிறுமியை விபசாரத்தில் தள்ளினார். இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறுமி சுய நினைவை இழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதை சிறுமி தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியார் நீலிமா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சிறுமியின் தந்தை வைத்திருந்த பணத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவர் சிறுமியிடம் இது பற்றி கேட்டார்.
- அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த நானாஜி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பணத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டதாக தெரிவித்தார்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நானாஜி (வயது 22). சிறுமியின் தாயார் இறந்துவிட்டதால் தந்தை வியாபாரத்திற்கு வெளியூர் செல்லும்போது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வருவார்.
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த நானாஜி சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நட்பாக பழகினார்.
சிறிது நாட்கள் கழித்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறுமியை பலாத்காரம் செய்து வந்தார்.
மேலும் சிறுமியின் தந்தை வீட்டில் ரூ.12 லட்சம் வைத்திருந்தார். அதில் ரூ.11 லட்சத்தை சிறுமியை ஏமாற்றி வாங்கி தனது குடும்பத்தாருக்கு கொடுத்தார்.
சிறுமியின் தந்தை வைத்திருந்த பணத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவர் சிறுமியிடம் இது பற்றி கேட்டார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த நானாஜி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பணத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து நானாஜி வீட்டுக்கு சென்ற சிறுமியின் தந்தை 18 வயது நிரம்பியவுடன் தனது மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்.
அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி சிறுமியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தனர். இதனால் விரக்தி அடைந்த சிறுமியின் தந்தை அனகாபள்ளி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்து அவரிடமிருந்து பணத்தை பறித்ததாக வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள நானாஜி மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.