search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bullets"

    • ஏகே 47 துப்பாக்கியில் இருந்து வந்த குண்டுகள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • துப்பாக்கி குண்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரத்தில் இன்று மேலும் 6 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏகே 47 துப்பாக்கியில் இருந்து வந்த குண்டுகள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    நேற்று வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், இன்று காந்தி சாலை பகுதியில் மேலும் 6 குண்டுகள் சிதறி கிடந்துள்ளன.

    துப்பாக்கி குண்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • துப்பாக்கி தோட்டாக்கள் இருந்த இடத்தை மீண்டும் தோண்டி பார்த்தபோது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • தோட்டாக்கள் துருப்பிடித்து இருந்ததால் தடவியில் நிபுணர்கள் சோதனைக்கு அனுப்பப்பட உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆறு உள்ளது. இந்த தென்பெண்ணையாற்றின் குறுக்கே கும்ந்தாமேடு தரைப்பாலம் உள்ளது. இதன் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். மேலும் மீனவர்கள் சிறிய படகுகள் மூலமாக வலைவிரித்து மீன் பிடித்தும் வருகின்றனர் . இந்த நிலையில் தற்போது ஆற்றில் குறைந்த அளவில் தண்ணீர் செல்வதால் நேற்று மாலை புதுச்சேரி மாநிலம் குமந்தாமேடு பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் மீன் பிடிக்க ஆற்றில் இறங்கினர். அப்போது சேற்று பகுதிகளில் கால் வைக்கும் போது சிறிய அளவிலான இரும்பு பொருட்கள் சிக்கின. அதனை எடுத்து பார்த்தபோது துப்பாக்கி தோட்டாக்கள் என்பது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் அந்த தோட்டாக்களை எடுத்து கொண்டு ஆல்பேட்டை சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் வழங்கினர். க்ஷ இத்தகவல் அறிந்த போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களிடம் இருந்த தோட்டாக்களை பார்வையிட்டனர். பின்னர் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்த இடத்தை மீண்டும் தோண்டி பார்த்தபோது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சிறிய முதல் பெரிய அளவுள்ள 169 தோட்டாக்கள் சிக்கியது . இதனை தொடர்ந்து கைப்பற்றிய தோட்டாக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பார்வையிட்டார். இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 169 துப்பாக்கி தோட்டாக்கள் துருப்பிடித்து இருந்ததால் தடவியில் நிபுணர்கள் சோதனைக்கு அனுப்பப்பட உள்ளது. அங்கு துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் குண்டு சோதனை செய்யும் நிபுணர்கள் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களை தீவிர ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் இந்த தோட்டாக்கள் எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள்? எந்த ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்பது தெரிய வரும் . கடந்தமாதம் தென்பெண்ணை ஆற்றில் துப்பாக்கி கைப்பற்றிய இடத்தில். தோட்டாக்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் அந்த இடத்தில் ஆயுதங்கள் உள்ளனவா? மேலும் துப்பாக்கிகள் தோட்டாக்கள் உள்ளதா? என்பதை சோதனை செய்ய உள்ளோம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தெரிவித்தார். இந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் சோதனை செய்தபோது 8 தோட்டாக்கள் மீண்டும் கிடைத்துள்ளன. இதனை தொடர்ந்து அந்த தோட்டக்களையும் போலீசார் மீட்டு ஏற்கனவே கிடைத்த 169 தோட்டக்களுடன், 8 தோட்டாக்களை சேர்த்து அனுப்பப்பட உள்ளன. இதனை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் இருந்த இடத்தை முழுவதுமாக தோண்டப்பட்டு மேலும் ஏதேனும் தோட்டாக்கள் , துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் உள்ளதா? என்பதனை சோதனை செய்ய உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடலூர் தென்பெண்ணை ஆற்றில் தோண்ட தோண்ட தோட்டாக்கள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • காரில் இருந்து இறங்கிய 3 பேர் டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை நோக்கி சென்றனர்.
    • டீ கடை அருகே 3 துப்பாக்கி தோட்டாக்கள், தோட்டக்களை லோட் செய்யும் ஹேண்டில்யும் விட்டு சென்றனர்.

    சோமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு தாம்பரம் தர்காஸ் செல்லும் சாலையில் தர்காஸ் பகுதியில். டீக்கடை உள்ளது. நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்தவர் இறங்கி டீக்கடைக்கு சென்று மாஸ்க் வாங்கி உள்ளார்.

    அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து வெள்ளை நிற கார் ஒன்று டீக்கடை எதிரே வந்தது.

    அப்போது காரில் இருந்து இறங்கிய 3 பேர் டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை நோக்கி சென்றனர். அவர்களில் ஒருவர் கத்தியுடன் சென்றார். இதை கேட்டதும் ஹெல்மெட் அணிந்திருந்தவர் டீ கடையின் உள்ளே மாடியில் ஏறி பின்பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவர் வழியாக குதித்து ஓடியுள்ளார். மற்றொருவர் வேறொரு திசையில் ஓடி உள்ளார். காரில் வந்தவர்களும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    அப்போது டீ கடை அருகே 3 துப்பாக்கி தோட்டாக்கள், தோட்டக்களை லோட் செய்யும் ஹேண்டில்யும் விட்டு சென்றனர். இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று துப்பாக்கி தோட்டாக்களை கைப்பற்றினர்.

    மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் யார்? ரவுடிகளுக்குள்ளே கோஷ்டி மோதலா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சோமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிள் உள்ள ரவுடிகளுக்குள் ஏதேனும் மோதல் ஏற்பட்டு பழி வாங்க வந்தனரா? துப்பாக்கி எடுத்து வரும்போது தோட்டாக்கள் சிதறி விழுந்தனவா? என்பது குறித்து 2 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்து தப்பி ஓடிய நபர்களின் மோட்டார் சைக்கிளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் அது போலி பதிவு எண் கொண்டது என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    ஐதராபாத் விமான நிலையத்திற்கு துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த இத்தாலி தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். #HyderabadAirport #ItalianBusinessmanArrested
    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகளை சிஐஎஸ்எப் வீரர்கள் சோதனை செய்தனர்.

    அப்போது இத்தாலியைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோல் சங்கர்மனோ என்பவரின் லக்கேஜை சோதனையிட்டபோது, அதில் பயன்படுத்தப்படாமல் உயிர்ப்புடன் 22 தோட்டாக்களும், பயன்படுத்தப்பட்ட 3 தோட்டாக்களும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் ஆயுத தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.



    விசாரணையில் அவர் அபுதாபியில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்துவருவதும், விஜயவாடாவில் சமீபத்தில் நடைபெற்ற படகுப் போட்டியை பார்க்க வந்திருந்ததும் தெரியவந்தது.  

    மேலும், தன் மகன் துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருப்பதாகவும், தன்னுடன் வந்திருந்த மகன் முன்கூட்டியே சென்றபோது, தோட்டாக்களை தனது பேக்கில் விட்டுச் சென்றதாகவும் நிகோல் கூறியுள்ளார். #HyderabadAirport #ItalianBusinessmanArrested
    ×