search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம்"

    • பாஜக தலைமையிலான அரசு நாட்டின் எல்லையை பாதுகாத்துள்ளது
    • வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவுவதை நாங்கள் நிறுத்தியுள்ளோம்

    அசாம் மாநிலத்தில் லக்கிம்பூரில் பாஜகவின் தேர்தல் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "1962-ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு "பை-பை கூறினார். அதை இம்மாநில மக்கள் அதை எப்போதும் மறக்க முடியாது

    ஆனால் இப்போது, நமது நிலத்தில் ஒரு இன்ச் கூட சீனாவால் ஆக்கிரமிக்க முடியவில்லை. டோக்லாமில் கூட, நாங்கள் அவர்களை பின்னுக்குத் தள்ளினோம்

    பாஜக தலைமையிலான அரசு நாட்டின் எல்லையை பாதுகாத்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவுவதை நாங்கள் நிறுத்தியுள்ளோம்.

    மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசும் இருப்பதால், ஊடுருவல் நின்றுவிட்டது என்று சொல்லலாம். அசாமில் உள்ள முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் மாநிலத்திற்கு அநீதி இழைத்தது" என்று அமித் ஷா தெரிவித்தார்.

    அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது. கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமித்ஷாவின் இந்த பேச்சு கவனம் பெற்றுள்ளது.

    • முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அழைத்து, மாநிலத்தின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
    • படகில் 15 பயணிகள் இருந்ததாகவும், மீதமுள்ளவர்கள் நீந்தி தப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

    அசாம் முழுவதும் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழைக்கு மத்தியில், தெற்கு சல்மாரா-மங்காச்சார் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், நான்கு வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும், இரண்டு பேர் காணாமல் போனதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அழைத்து, மாநிலத்தின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். மேலும் அனைத்து உதவிகளும் செய்வதாகவும் உறுதியளித்தார்.

    நேற்று மாலை முதல் மாநிலத்தின் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் மழையுடன் கூடிய திடீர் புயல், மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் வீடுகளை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தியது என்று அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சிஇஓ ஞானேந்திர தேவ் திரிபாதி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர், " நேபுரேர் ஆல்கா கிராமத்தில் நேற்று மாலை 5 மணியளவில் சிசுமாரா காட்டில் இருந்து நேபுரேர் ஆல்கா காட் நோக்கி பயணித்த நாட்டுப்படகு மூழ்கியது. இதில் ஒரு குழந்தையின் சடலத்தை உள்ளூர்வாசிகள் மீட்டனர் மற்றும் காணாமல் போன இரண்டு பேரை தேடி வருகின்றனர்" என்றார்.

    படகில் 15 பயணிகள் இருந்ததாகவும், மீதமுள்ளவர்கள் அருகிலுள்ள 'சார்' பகுதிகளிலிருந்து உள்ளூர்வாசிகளின் உதவியுடன் பாதுகாப்பாக நீந்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    • அசாம் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • விபத்து காரணமாக கவுகாத்தி விமான நிலையத்தில் சேவை பாதிப்பு.

    அசாம் மாநிலத்தில் திடீர் கனமழை மற்றும் சூரை காற்று காரணமாக கவுகாத்தி சர்வதேச விமான நிலையம் சேதமடைந்தது. கனமழை, விமான மேற்கூரை இடிந்து விழுந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

    மேலும் விமான நிலையத்தின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதியுற்றனர். கனமழை காரணமாக விமான நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. எனினும், இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 



    • கட்டிலில் படுத்தபடி ரூ.500 நோட்டுக்களை உடல் மீது கொட்டி தூங்குவது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
    • இந்தப் படத்தை பார்த்த பலர் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அசாமின்  ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) தலைவர் பெஞ்சமின் பாசுமாதாரி. உடல்குரி மாவட்டத்தில் உள்ள பைரகுரியில் கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.

    தற்போது இவர் கட்டிலில் படுத்தபடி ரூ.500 நோட்டுக்களை உடல் மீது கொட்டி தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தப் படத்தை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அந்த அரசியல் தலைவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், இவ்விவகாரம் பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.




    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த புகைப்படம் அதிகளவில் தற்போது பரவி வருகிறது. இந்தப் படத்தை பார்த்த பலர் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    NDA மற்றும் UPPL ஆகிய இரு கட்சிகளும் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்வதாக உறுதியளித்து வரும் நிலையில், இப்படி ஒரு புகைப்படம் வெளியாகி இருப்பது இரு கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • அசாமில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மாநிலத்தில் கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
    • அனைத்து காவல் நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கவுகாத்தி உட்பட கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன

    குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியதற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அசாம் மாநில எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.

    எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சிகளுக்கு அம்மாநில காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    அந்த நோட்டீசில், எதிர்க்கட்சிகள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால், பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டாலோ, பொதுமக்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டாலோ, எதிர்க்கட்சிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அசாம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    அசாம் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளாக உள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட பல கட்சி தலைவர்களுக்கு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    அத்தகைய போராட்டங்கள் "சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், அசாமில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மாநிலத்தில் கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோனித்பூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் அதிக மக்கள் கூடுவதைத் தடை செய்யும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து காவல் நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கவுகாத்தி உட்பட கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், பதற்றமான பகுதிகளில் காவல்துறையினரின் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கு முன்னதாக, குடியுரிமை திருத்தச்சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று கருதி, காவலர்களின் நீண்ட கால விடுப்புகளை அம்மாநில அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    2019 ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அசாம் மாநிலத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் இறந்தனர். பின்பு கொரோனா ஊரடங்கை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • 11,600 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.
    • அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை.

    சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்களால் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், அரசியல் காரணங்களுக்காக தங்கள் கலாச்சாரத்தைப் பற்றியே வெட்கப்படும் போக்கை உருவாக்குகிறார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    11,600 கோடி மதிப்பிலான திட்டங்களை வெளியிட்டு கவுகாத்தியில் நடந்த மாபெரும் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த காலத்தை அழித்து எந்த நாடும் முன்னேற முடியாது. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது" என்றார்.

    மேலும் அவர், " தொடங்கப்பட்ட திட்டங்கள் வடகிழக்கு மட்டுமின்றி தெற்காசியாவின் மற்ற பகுதிகளிலும் இணைப்பை பலப்படுத்தும்.

    கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் அமைதி திரும்பியுள்ளது. 7,000க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களை கீழே இறக்கிவிட்டு முக்கிய நீரோட்டத்திற்கு திரும்பியுள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர்" என்றார்.

    • வருகிற 4-ந்தேதி கானாபரா கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
    • ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நாளை (3-ந்தேதி) அசாம் மாநிலத்திற்கு செல்கிறார். அங்கு வருகிற 4-ந்தேதி கானாபரா கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் மோடி வருகை குறித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அசாமில் உள்ள மக்களுடன் ஒரு நாளை கழிக்க வேண்டும் என்ற எங்கள் அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதை பெரிய கவுரவமாக கருதி நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். பிரதமர் மோடி ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் பல நலத்திட்ட பணிகளை மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.

    • பாஜகவில் இணையும் நிகழ்ச்சி பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.
    • அசாம் மாநிலத்தின் பல முக்கிய தலைவர்கள் கட்சியில் இணைந்தனர்.

    அசாம் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அங்கிதா தத்தா. இவரை அசாம் மாநில காங்கிரஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டினார்.

    இதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக அங்கிதா தத்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக காங்கிரசின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

    இதனால் அதிருப்தியில் இருந்த அங்கிதா தத்தா பாரதீய ஜனதா கட்சியில் இணையபோவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்தன.

    இந்நிலையில் இன்று மாலை பாஜகவில் இணையும் நிகழ்ச்சி கவுகாத்தி பாசிஸ்தாவில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அசாமில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, மாநிலத்தின் பல முக்கிய தலைவர்கள் கட்சியில் இணைந்தனர்.

    பாஜகவில் இணைந்த முக்கிய தலைவர்கள் வருமாறு:-

    அசாம் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அங்கிதா தத்தா, கும்தாய் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ பிஸ்மிதா கோகோய், அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்தின் (ஏஏஎஸ்யு) முன்னாள் தலைவர் தீபங்க குமார் நாத் மற்றும் ஏஏஎஸ்யு முன்னாள் துணைத் தலைவர் பிரகாஷ் தாஸ்

    திலீப் பால், புருஷோதம் டோலி, மிலன்ஜோதி ராய், ஹிமான் பர்மன், ஜிதுமோனி புயான், தேபாஜித் பதிர், பிரசாந்தா ஹசாரிகா, மனோரஞ்சன் நாத், போனி பதக், ஷியாமல் நாராயண் தேப் மற்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஞான சக்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இன்று பாஜகவில் இணைந்து உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் பாபேஷ் கலிதா, அசாம் கேபினட் அமைச்சர்கள் ஜெயந்தா மல்லபருவா, பிஜூஷ் ஹசாரிகா, எம்எல்ஏக்கள் திகந்தா கலிதா, மனாப் தேகா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

    • அசாம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    • முதல்வர் ஹேமந்த பிஸ்வாவின் அனைத்து கட்டுப்பாடுகளும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கைகளில் உள்ளன.

    காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் தலைமையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைபயணம் 'பாரத் நீதி யாத்திரை' என்ற பெயரில் மணிப்பூரில் தொடங்கியது. தற்போது அசாமில் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மக்களை போராட்டம் நடத்த தூண்டியதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில், நேற்று ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்று அசாமின் பார்பேட்டா பகுதியில் நடைபயணத்தை தொடங்கினார். இந்த யாத்திரையின் போது அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா சர்மாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ராகுல்காந்தி கூறியதாவது, "உங்கள் முதல்வர் ஒவ்வொரு நாளும் பயத்தையும் வெறுப்பையும் பரப்புகிறார். அசாமில் வெறுப்பும் பயமும் பரப்ப படும் போதெல்லாம் உங்கள் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றனர். நாட்டின் ஊழல் மிகுந்த முதல்வராக ஹேமந்த பிஸ்வா சர்மா திகழ்கிறார்.

    நீங்கள் எப்போது தொலைக்காட்சியை பார்த்தாலும் அதில் ஹேமந்த பிஸ்வா தான் தோன்றுவார். ஊடகங்கள் உங்களிடம் சொல்லும் அனைத்தும் உங்கள் முதல்வரால் அவர்களுக்கு சொல்லப்பட்டவையே. அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வாவின் அனைத்து கட்டுப்பாடுகளும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கைகளில் உள்ளன. அவர் அமித் ஷாவுக்கு எதிராக எதாவது பேசினால் அடுத்த நிமிடம் கட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவார்" என விமர்சித்து கூறியுள்ளார்.

    • இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைப்பயணம் மணிப்பூரில் தொடங்கியது.
    • அசாம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் தலைமையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைபயணம் 'பாரத் நீதி யாத்திரை' என்ற பெயரில் மணிப்பூரில் தொடங்கியது. மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக அரசு ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு பல்வேறு இடையூறுகளை கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், ஜோராபட்டில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து கவுகாத்திக்குள் ராகுல் காந்தி நுழைய முற்பட்டபோது போலீசார் தடுப்புகள் அமைத்து அவரை நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கவ்ஹாத்தியில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதால் மக்களை போராட்டம் நடத்த ராகுல் காந்தி தூண்டியதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக அரசைக் கண்டித்தும், முதல்வரை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • பாரம்பரிய உடையணிந்து, மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவர்.
    • நகரத்தை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகள் இடம்பெறும்.

    மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற கிழக்கு மாநிலங்களில், 'துர்க்கா பூஜை' என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. எருமைத் தலை கொண்ட மகிஷாசுரனை, துர்க்கா தேவி வதம் செய்து வெற்றி கொண்ட தினமான விஜயதசமி, மேற்குவங்காள மக்களின் முக்கியமான திருவிழாவாகும்.

    விநாயகர் சதுர்த்தியைப் போன்று. இந்த விழாவின் போது, மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு, அதன்கீழ், துர்க்கை அம்மனின் சிலைகள் நிறுவப்படும். நவராத்திரி விழாக்களின் போது மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு மாநில மக்கள். பாரம்பரிய உடையணிந்து, மாலை நேரத்தில் மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவார்கள்.

    இந்த நவராத்திரி நாட்களில் வண்ணமயமான கலாசார நிகழ்வுகள் நகரத்தை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகள் இடம்பெறும். பத்தாம் நாளில், நவராத்திரி கொலு வைக்கப்பட்ட துர்க்கை சிலைகள் அனைத்தும் பல்வேறு பகுதிகளிலும் ஊர்வலமாகக் கொண்டு சென்று, பின்னர் அதனை கடலில் கரைப்பார்கள்.

    • கடந்த ஆண்டு இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • இரு மாநில எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

    ஷில்லாங்:

    கடந்த 1972-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலம் உதயமானது. அப்போது முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.

    மத்திய அரசின் சமரசத்தால் கடந்த ஆண்டு இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும் இருமாநில எல்லையில் மோதல் சம்பவங்கள் தொடர் கதையாய் உள்ளன.

    இந்த நிலையில் மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்துக்கும் அசாமின் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்துக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள லபங்காப் கிராமத்தில் நேற்று இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது.

    இருதரப்பினரும் வில் மற்றும் அம்புகளை பயன்படுத்தி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். எனினும் இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் இரு மாநில எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

    ×