search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிபத்து"

    • விருத்தாசலம் பாலக்கரையில், மணிமுக்தாற்று பாலத்தின் கீழ் பகுதியில் கிடந்த குப்பைகள் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • மங்கலம்பேட்டை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி செல்லும் சாலையில் காப்புக்காடு உள்ளது. இதில் கார்மாங்குடி காப்புக்காட்டில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு மரங்கள் தீப்பிடித்து எரிய தொடங்கின.

    இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து இரவு 8 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் பல ஏக்கர் பரப்பளவில் விளைந்திருந்த மரங்கள் தீயில் சேதம் அடைந்தன. தீ விபத்து குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போன்று, விருத்தாசலம் பாலக்கரையில், மணிமுக்தாற்று பாலத்தின் கீழ் பகுதியில் கிடந்த குப்பைகள் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்தபகுதியில் புகை மண்டலமாக மாறியதுடன், அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி அறிந்த மங்கலம்பேட்டை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.

    • திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்ததில் அங்கு பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற சுமார் 100 மரங்கள் மற்றும் செடி-கொடிகள் ஆகியவை தீயில் கருகி சாம்பலாயின.
    • வனப்பகுதியில் இருந்த வன விலங்குகள் மற்றும் பறவைகள் வேறு இடங்களுக்கு தப்பிசென்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பாரஸ்ட் டேல் வனப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்ததில் அங்கு பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற சுமார் 100 மரங்கள் மற்றும் செடி-கொடிகள் ஆகியவை தீயில் கருகி சாம்பலாயின. மேலும் வனப்பகுதியில் இருந்த வன விலங்குகள் மற்றும் பறவைகள் வேறு இடங்களுக்கு தப்பிசென்றன.

    இதுகுறித்து தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் வனத்துக்குள் தீ விபத்து காரணமாக பரவி நிற்கும் அடர்ந்த புகையால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் பாரஸ்ட்டேல் காட்டுப்பகுதியில் பற்றியெரியும் தீயை, கடந்தாண்டு போல ஹெலிகாப்படர் பயன்படுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டுமென அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதற்கிடையே குன்னூர் தீவிபத்து தொட ர்பாக குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனக்குழுவினர் விசாரணை நடத்தியதில், அங்குள்ள ஒரு தேயிலை தோட்ட த்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் கவாத்து செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையற்ற பொருட்களை குவித்து தீ வைத்து எரித்தனர். பின்பு தீயை அணைக்காமல் சென்றது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து குன்னூர் வனத்தில் பற்றியெரிந்த தீ விபத்துக்கு காரணமாக இருந்ததாக பாரஸ்ட்டேல் தேயிலை தோட்ட உரிமையாளர் எபினேசர் ஜெயசீலன் இன்பம் மற்றும் தொழிலாளர்கள் கருப்பையா (வயது 65), மோகன் (35), ஜெயக்குமார் (60) ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    • நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
    • அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கணேஷ் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் வள்ளுவர் நகரை சேர்ந்த கண்ணன் இருவரும் தோனுகாலில் உள்ள ஒரு எந்திர தீப்பெட்டி ஆலை ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர்.

    அந்த ஆலையில் பணியாளர்கள் நேற்று வழக்கம் போல பணிகளை முடித்துவிட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர். இரவில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவில் ஆலையில் உள்ள எந்திரத்தில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறி தீயணைப்பு படை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ தொடர்ந்து எரிந்ததால் தீயை அணைப்பதற்கு டிராக்டர் மூலமும் தண்ணீர் கொண்டு வந்து தீயணைக்கும் பணி நடைபெற்றது.

    நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. ஆனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன.

    சம்பவ இடத்தை கோவில்பட்டி தாசில்தார் சரவணபெருமாள், வருவாய் ஆய்வாளர் ராம மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பலரும் குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.
    • தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள இந்தக் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பலரும் குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.

    ஆனால் இதுவரை குப்பை கிடங்கு மாற்றப்படவில்லை. இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடப்பதால் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இன்று அதிகாலையில் வலம்புரி விளை குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலம் வந்தது. இதை பார்த்த அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீ மளமளவென்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    காற்றும் வீசியதால் அந்த பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளை புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளானார்கள். நேரம் செல்ல செல்ல புகை அதிகரித்து இருளப்பபுரத்திலிருந்து பீச் ரோடு வரும் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    அந்த பகுதி வழியாக வாகனங்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில் தக்கலையில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தற்பொழுது போராடி வருகிறார்கள். ஜே..சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தீயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தொடர்ந்து வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றமும் வீசுவதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மூக்கை பிடித்து கொண்டு வாழ வேண்டிய நிலை உள்ளது. குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து கட்சியினரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த முதியவர்கள், குழந்தைகள் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக குப்பை கிடங்கை மாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை கிடங்கை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    • சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
    • போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    களியக்காவிளை:

    களியக்காவிளை அருகே திருத்தோபுரம் காக்கோட்டு விளை பகுதியில் ரேசன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடையில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்று 2-வது நாளாக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு ரேசன் கடை ஊழியர் கடையை பூட்டி விட்டு சென்றார்.

    இன்று அதிகாலை ரேசன் கடையில் இருந்து புகை மண்டலங்கள் வந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் ரேசன் கடை ஊழியர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஊழியர்கள் அங்கு வந்தனர். அப்போது ரேசன் கடையில் தீ எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும், களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ரேசன் கடையின் பூட்டை உடைத்து தீயை அணைத்தனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் ரேசன் கடையில் இருந்த ஆவணங்கள், பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்கப்பட இருந்த வேட்டி, சேலைகள் எரிந்து நாசமாகி இருந்தது. ரேசன் கடையில் தீ விபத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் எரிந்து நாசமானது குறித்து ரேசன் கடை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்குவதற்கு இன்று காலையிலும் பொதுமக்கள் வந்திருந்தனர். கடையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

    • ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • நல்ல வேலையாக தீ விபத்து நடப்பதற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்தவர்கள் இறங்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். நேற்று இரவு 11.15 மணியளவில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை கல்லூரியில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    மாணவர் சிகிச்சை முடிந்து மீண்டும் ஆம்புலன்சில் ஏற முயன்றார். அப்போது ஆம்புலன்சில் இருந்து கரும்புகை வெளிவருவதை கண்டு மாணவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மாணவருடன் வந்தவர் வேகமாக கீழே இறங்கிவிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் தீ பிடித்து எரிய தொடங்கியது.

    இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 20 நிமிடம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருக்கைகள் எரிந்து நாசமானது. நல்ல வேலையாக தீ விபத்து நடப்பதற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்தவர்கள் இறங்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

    • வீட்டின் சுவிட்ச் பாக்சில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென கிரைண்டர் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது.
    • அதிகாரிகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பாப்பாத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் மாலையகவுண்டன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது50). இவரது கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். 100-நாள் வேலை மற்றும் தோட்ட கூலி வேலை பார்த்து வந்தார்.

    இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவிட்ச் பாக்சில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென கிரைண்டர் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. உடனே அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் மளமளவென தீ பற்றி எரிந்தது.

    தீ கரும்புகையுடன் கொளுந்துவிட்டு எரிந்து வீடு முழுவதும் பரவியதால் அலறி அடித்து துடித்த பாப்பாத்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பிறது போராடி தீயை அணைத்தார். இருந்தபோதும் இந்த தீ விபத்தில் வீட்டின் உடமைகள், பித்தளை, வெள்ளி குத்து விளக்குகள், தங்க ஆபரணங்கள் உட்பட விலையுயந்த பொருட்கள் மற்றும் சேமித்து வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்து சாம்பலாயின.

    கஷ்டப்பட்டு கூலி வேலை பார்த்து சேமித்து வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானதால் பாப்பாத்தி கண்ணீர் விட்டு கதறி அழுதார். தனக்கு அதிகாரிகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    • தீபாவளி பண்டிகை தினத்தில் திருச்சியில் 13 இடங்களில் தீவிபத்து நடைபெற்றது
    • கீழ தேவதானபுரத்தில் பழைய பேப்பர் குடவுன் பட்டாசு தீப்பொறியினால் எரிந்து நாசமானது

    திருச்சி,

    தீபாவளி திருநாள் நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டது. திருச்சியில் தீபாவளி தினமான நேற்று முழுவதும் பட்டாசு வெடிக்கும் ஓசை எதிரொலித்து கொண்டே இருந்தது.

    தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினர், சத்திரம் பேருந்து நிலையம், காஜாபேட்டை ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் பட்டாசு வெடித்ததன் காரணமாக திருச்சியில் ஆங்காங்கே தீவிபத்துக்கள் ஏற்பட்டது. ராக்கெட் பட்டாசு விட்டதினால் ராஜாகாலனி, கே.கே.நகர், அம்மையப்பநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பந்தல் போட வைத்திருந்த கீற்றுகள் பட்டாசு பொறி பட்டு தீப்பிடித்து எரிந்தது. சோழராஜபுரம் பகுதியில் வீட்டின் முன்புறம் போடப்பட்டிருந்த கீற்று கொட்டகை பட்டாசு தீப்பொறி பட்டு எரிந்து நாசமானது. கீழ தேவதானபுரத்தில் பழைய பேப்பர் குடவுன் பட்டாசு தீப்பொறியினால் எரிந்து நாசமானது. மேலும் பழைய பால்பண்ணை மகாலட்சுமிநகர் பகுதியில் கேஸ்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.

    இதே போல ஸ்ரீரங்கம் பகுதியில் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், கீதாபுரம் ஆகிய பகுதிகளில் ராக்கெட் பட்டாசு காரணமாக 3 இடங்களில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் ராவேந்திரா அபார்மெண்டில் பால்கனியில் வைத்திருந்த துணிகள் பட்டாசு தீப்பொறியின் காரணமாக எரிந்தது. இதனை ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் அணைத்தனர். 

    • தீபாவளியன்று தீ பற்றி எரிந்த கூரை வீடு
    • மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் ராசி நகரில் வசித்து வருபவர் கலியபெருமாள் மகன் கோவிந்தராஜ் (58), பந்தல் அமைப்பு காண்ட்ராக்டர் . அருகில் இருக்கும் தமக்கு சொந்தமான வீட்டில் தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இவரது கூரை வீடு மின் கசிவால் நேற்று தீ பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து தீயை அணைத்தனர் .

    மேலும் கூரை வீட்டில் பந்தல் போடும் பணிக்கான துணிகள், சோபா ஆகிய பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அருகில் உள்ள குடோனுக்கு பரவியது.
    • நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், ராஜேந்திரா நகரில் உள்ள சன்சிட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு விற்பனை கடை உள்ளது.

    தற்போது தீபாவளி நேரம் என்பதால் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. நேற்று இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் பட்டாசு கடையை மூடிவிட்டு சென்றனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் மின்கசிவு காரணமாக பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அருகில் உள்ள குடோனுக்கு பரவியது. பின்னர் அதன் அருகில் இருந்த ஓட்டலுக்கு தீ பரவியதால் அங்கிருந்த சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

    இதனால் பட்டாசு கடைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நள்ளிரவில் வெடிகுண்டு வெடித்ததாக பீதி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர்.

    தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடினா். தீ மேலும் மளமளவென பரவி அருகில் இருந்த மேலும் 4 கடைகள் எரிந்து நாசமானது.

    கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு கடைகளின் சுவர்களை உடைத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து ராஜேந்திரா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
    • வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    மதுரை

    தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஏராள மான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தி லேயே இரு பாலருக்கும் தனித்தனியே தங்கும் விடுதிகள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் போது பல்கலைக்கழக பெண்கள் விடுதி அருகே இருந்த மின் கம்பத்தில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் செய்வதறியாது திணறிய மாணவிகள் விடுதியில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து மாணவிகள் பல்கலைகழக நிர்வாகத்தி னருக்கு தகவல் தெரிவித்தனர். சில விடுதி மாணவி களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே தீயணைப்பு துறையினருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து பெரியார் மற்றும் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் விரைந்து வந்தனர்.

    மின்சார வாரியத்திற்கும் உடனடியாக தகவல் தெரி விப்பட்டது. மின்வாரி யத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டி த்ததால் பெரும் அசம்பா விதம் நடப்பது தவிர்க்கப் பட்டது. இதனால் மின் கம்பத்தில் இருந்து புகை வந்ததால் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி வளாகம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

    இதில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவர்களை அருகில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.

    மழையினால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி அருகே இருந்த மின் கம்பத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவி விடுதி வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை இன்ஸ் பெக்டர் சிவகுமார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குன்னம் அண்ணாநகர் ரேசன் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் அரிசு மூட்டைகள் எரிந்து நாசமானது
    • பட்டாசு வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம்

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அண்ணா நகர் பகுதியில் ஒரு ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதா ரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த கடையின் பின்புறம் அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவது வழக்க மானது. இந்த நிலையில் சிலர் பட்டாசு வெடித்து விளையாடினர்.மேலும் அதிக சத்தம் எழுப்ப வேண்டும் என்பதற்காக ரேஷன் கடை ஜன்னலில் பட்டாசை வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதில் தீப்பொறி கடைக்குள் விழுந்து தீப்பிடித்தது.

    கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறுவதை அறிந்த கடையின் விற்ப னையாளர் தொல்காப்பியன் அங்கு விரைந்து வந்து, கடையை திறந்து பார்த்தபோது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி மூட்டைகள் தீயில் எரிந்து கொண்டி ருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தார். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்ப டுத்தினர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 23 மூட்டை ரேஷன் அரிசி எரிந்து நாசமானது. மேலும் 500க்கும் மேற்பட்ட காலி சாக்குகள் எரிந்து சாம்பல் ஆனது.இதுகுறித்து தொல்காப்பியன் குன்னம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×