search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guwahati"

    • அசாம் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • விபத்து காரணமாக கவுகாத்தி விமான நிலையத்தில் சேவை பாதிப்பு.

    அசாம் மாநிலத்தில் திடீர் கனமழை மற்றும் சூரை காற்று காரணமாக கவுகாத்தி சர்வதேச விமான நிலையம் சேதமடைந்தது. கனமழை, விமான மேற்கூரை இடிந்து விழுந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

    மேலும் விமான நிலையத்தின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதியுற்றனர். கனமழை காரணமாக விமான நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. எனினும், இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 



    • முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற உள்ளது.
    • நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.

    இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அசாம் தலைநகர் கவுகாத்தி நகரில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் கவுகாத்தியில் உள்ள ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் நாளை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மதியம் ஒரு மணிக்கு மேல் விடுமுறை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். மேலும் விராட் கோலி, கேஎல் ராகுல் உள்பட பலர் விளையாடுவார்கள்.

    இந்திய ஓப்பன் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
    கவுகாத்தி:

    2-வது இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. நேற்று நடந்த இறுதிப் போட்டிக்கான பந்தயங்களில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இதில் இந்தியா மொத்தம் 12 தங்கப்பதக்கங்களை அள்ளியது.

    6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம் 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிச் சுற்றில் 5-0 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை வன்லால் டுடியை எளிதில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தனது வசமாக்கினார்.



    மற்றொரு இந்திய வீராங்கனை சரிதா தேவி (60 கிலோ) 3-2 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை சிம்ரன்ஜித் கவுரை வீழ்த்தி தங்கம் வென்றார். கடந்த 3 ஆண்டுகளில் சரிதா தேவி வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

    இதேபோல், ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் சச்சின் சிவாச்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மேலும், 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஷிவதபா 5-0 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் மனிஷ் கவுசிக்கை வென்று தங்கம் வென்றார்.
    அசாமில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தனது தாய் உட்பட 3 பேரை 11 வயது சிறுவன் துணிச்சலாக உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #Assam
    திஸ்பூர்:

    அசாம் மாநிலம் வடக்கு கெளகாத்தியில் உள்ள செயின்ட் அந்தோனி பள்ளியில் கமல் கிஷோர் என்ற 10 வயது சிறுவன் படித்து வருகிறான். அங்கு வடக்கு கெளகாத்தி மற்றும் கெளகாத்தி இடையே பிரம்மபுத்திரா ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இரு நகருக்கு இடையே படகு போக்குவரத்து மட்டுமே உள்ளது.

    இந்நிலையில், கிஷோர் தனது அம்மா, அத்தையுடன் வடக்கு கெளகாத்தியில் இருந்து கெளகாத்தி நகருக்குச் படகில் சென்று கொண்டிருந்தான்.

    அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த படகு திடீரென்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீச்சல் நன்கு அறிந்த கிஷோர் முதலில் கரையேறினான். அதன் பிறகு நீரில் தத்தளிக்கும் தனது அம்மாவை காப்பாற்றுவதற்காக மீண்டும் நீரில் குதித்து அம்மாவை காப்பாற்றினான். இதையடுத்து, தன்னுடன் வந்த அத்தையை காணவில்லை என்பதை உணர்ந்த கிஷோர், மீண்டும் ஆற்றுக்குள் குதித்து அத்தையையும், மற்றும் தத்தளித்துக்கொண்டிருந்த பெண்ணையும் ஆற்றிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தான்.

    இந்த சம்பவம் குறித்து சிறுவன் கிஷோர் கூறுகையில்,

    ‘நான் தினமும் பிரம்மபுத்திரா ஆற்றில்  குதித்து நீச்சல் கற்றுக்கொள்வேன்.  ஆற்றில் படகு கவிழந்ததும் அனைவரும் வந்து விடுவார்கள் என்று முதலில் நினைத்தேன். பின்னர் தான் எனது அம்மாவுக்கு நீச்சல் தெரியாது என்பதை உணர்ந்து, உடனடியாக அம்மா, அத்தையை மீட்டேன்.  எல்லாம் 20 நிமிடங்களில் முடிந்து விட்டது. கடைசியாக பர்தா அணிந்திருந்த ஒரு அக்காவை காப்பாற்றினேன். ஆனால், அவர் கையில் ஒரு குழந்தை வைத்திருந்தார். குழந்தையை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அந்த வருத்தம் எனக்கு இப்போதும் உள்ளது.’

    இவ்வாறு சிறுவன் கிஷோர் கூறினார். தன் உயிரை பொருட்படுத்தாது, 3 பேரை காப்பாற்றிய சிறுவன் கிஷோரை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். #Assam
    ×