search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boat tragedy"

    அசாமில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தனது தாய் உட்பட 3 பேரை 11 வயது சிறுவன் துணிச்சலாக உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #Assam
    திஸ்பூர்:

    அசாம் மாநிலம் வடக்கு கெளகாத்தியில் உள்ள செயின்ட் அந்தோனி பள்ளியில் கமல் கிஷோர் என்ற 10 வயது சிறுவன் படித்து வருகிறான். அங்கு வடக்கு கெளகாத்தி மற்றும் கெளகாத்தி இடையே பிரம்மபுத்திரா ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இரு நகருக்கு இடையே படகு போக்குவரத்து மட்டுமே உள்ளது.

    இந்நிலையில், கிஷோர் தனது அம்மா, அத்தையுடன் வடக்கு கெளகாத்தியில் இருந்து கெளகாத்தி நகருக்குச் படகில் சென்று கொண்டிருந்தான்.

    அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த படகு திடீரென்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீச்சல் நன்கு அறிந்த கிஷோர் முதலில் கரையேறினான். அதன் பிறகு நீரில் தத்தளிக்கும் தனது அம்மாவை காப்பாற்றுவதற்காக மீண்டும் நீரில் குதித்து அம்மாவை காப்பாற்றினான். இதையடுத்து, தன்னுடன் வந்த அத்தையை காணவில்லை என்பதை உணர்ந்த கிஷோர், மீண்டும் ஆற்றுக்குள் குதித்து அத்தையையும், மற்றும் தத்தளித்துக்கொண்டிருந்த பெண்ணையும் ஆற்றிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தான்.

    இந்த சம்பவம் குறித்து சிறுவன் கிஷோர் கூறுகையில்,

    ‘நான் தினமும் பிரம்மபுத்திரா ஆற்றில்  குதித்து நீச்சல் கற்றுக்கொள்வேன்.  ஆற்றில் படகு கவிழந்ததும் அனைவரும் வந்து விடுவார்கள் என்று முதலில் நினைத்தேன். பின்னர் தான் எனது அம்மாவுக்கு நீச்சல் தெரியாது என்பதை உணர்ந்து, உடனடியாக அம்மா, அத்தையை மீட்டேன்.  எல்லாம் 20 நிமிடங்களில் முடிந்து விட்டது. கடைசியாக பர்தா அணிந்திருந்த ஒரு அக்காவை காப்பாற்றினேன். ஆனால், அவர் கையில் ஒரு குழந்தை வைத்திருந்தார். குழந்தையை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அந்த வருத்தம் எனக்கு இப்போதும் உள்ளது.’

    இவ்வாறு சிறுவன் கிஷோர் கூறினார். தன் உயிரை பொருட்படுத்தாது, 3 பேரை காப்பாற்றிய சிறுவன் கிஷோரை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். #Assam
    ×