என் மலர்
அரியலூர் - Page 2
- விழிப்புணர்வு வாசகங்கள் கைகளில் ஏந்தி பேரணி நடைபெற்றது
- பதுவனேரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் உலக வனம் நாள் விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஷாம் கர்ணல் அனைவரையும் வரவேற்றார். ஜெயங்கொண்டம் ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் காஞ்சனா சரவணன் தலைமை தாங்கினார். பரப்ரம்மம் ஃபவுண்டேஷன் நிறுவனரும் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளருமான முத்துக்குமரன் பேரணியை துவக்கி வைத்து விளக்க உரையாற்றினார்.பேரணியில் நகராட்சி ஊழியர்கள் நர்சிங் மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தி கோசமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரணியானது ஜூப்லி ரோடு, நான்கு ரோடு, பேருந்து நிலைய சாலை வழியாகச் சென்று செந்துறை ரோடு, ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் பேரணி நிறைவுற்றது.பேரணியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ரமேஷ், ஏசிஏ சர்ச் ஜோஸ்வா, டெங்கு ஒழிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், தூய்மை பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் இறுதியில் ஜூபிலி ரோடு பதுவனேரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
- தமிழக பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்று எதிர்ப்பு
திருமானூர், அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் அலுவலகத்தின் அரசு ஊழியர்கள், தமிழக அரசு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளான பழைய ஓய்வுதி திட்டம், நிலுவைத் தொகை, சரண்டர் தொகை போன்றவற்றில் எந்த கோரிக்கைகளையும் அறிவிக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமையேற்று அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு ஊழியர் சங்கம் மாவட்ட இணை செயலாளர் காமராஜ் வரவேற்புரை நிகழ்த்தி உடனடியாக அரசு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்த், தமிழக பட்ஜெட் மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே சென்னையில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்த அனைத்து அரசு ஊழியர்களும் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
- அரியலூர் மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிக்கை
அரியலூர்,
தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புறதொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பி டத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது.மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது. இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, அனைவருக்கும் இ-சேவைமையம் திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இசேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தி ட்டத்தின் நோக்கமானது, அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இசேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இசேவை மையங்களின் எண்ணி க்கையினை அதிகரித்து இசேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும்.எனவே, அரியலூர் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவைமையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க ப்படுகின்றன. இணையமுறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
- உதயநத்தம் கிராமத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
- ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்றது
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த உதயநத்தம் கிராமத்தில் கோடைகால வெயிலின் தாக்கத்தை தணிக்க நீர்மோர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஆம் ஆத்மி கட்சியின் தா பழூர் ஒன்றிய செயலாளர் பிஎம் ஜீவா தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் ஸ்டெல்லா மேரி, மண்டல பொறுப்பாளர் டாக்டர் தேவகுமார், மாநில தலைவர் வசிகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். இவ்விழாவில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பணமுடிப்பு வழங்கப்பட்டது
- சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 324 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அரியலூர் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுகள் வழங்கப்பட்டது.இதன்படி மாவட்ட அளவில் 2021-22 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட சுய உதவிக்குழுக்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த மக்கள் அமைப்புகளுக்கு ரொக்கம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான இரண்டு கூட்டமைப்புகளுக்கு தலா ஒரு லட்சம் ரொக்கம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் ஒரு ஊராட்சி கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு ரூ.50,000 ரொக்கம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும், ஐந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ..25,000 ரொக்கம் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்க ப்பட்டது. மேலும்,சர்வதேச மகளிர் தின விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவில் மகளிர் தினவிழாப் போட்டிகள் மற்றும் விழாவில் பங்கேற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் கலெக்டர் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, இணை இயக்குநர்ரூபவ் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முருகண்ணன் மற்றும் அனைத்துத்துறைஅரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- சிறப்பு வழிபாட்டில் பல்வேறு அபிஷேகங்கள்
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள பெரியநாயகி உடனுறை ஏழுமலைநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் நந்திக்கு பால், தயிர், மோர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரித்து வதிவாதரனை காட்டப்பட்டது. பிரதோஷ வழிபாட்டுக்கு ஜெயங்கொண்டம் சுற்று பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டு சென்றனர்.
- தீவிர வாகன சோதனை நடைபெற்றது
- அபராதம் விதித்து, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க போலீசார் அறிவுரை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரம் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகிராபானு தலைமையிலான போக்குவரத்து போலீசார் சிதம்பரம் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்தவர்கள், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், இலகு ரக வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள், வாகனங்களின் இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
- ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளியில் நடைபெற்றது
- கற்றலை கொண்டாடுவோம் என்ற பெயரில் கண்காட்சி
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்னிமங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்ற கண்காட்சி விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். தலைமை ஆசிரியை பிரபா வரவேற்புரையாற்றினார். ஆசிரியர் வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.
- மீன் லோடு ஏற்றிக்கொண்டு வேகமாக சென்ற போது விபத்து
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
அரியலூர்,
ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், கொண்டிபாலம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பித்தானி(வயது 40). சைதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பமன்ஜி ராஜா(39). இவர்கள் 2 பேரும் ஆந்திராவிலிருந்து தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு மீன்களை ஏற்றிக்கொண்டு வருவது வழக்கம். அதேபோல் கீழப்பழுவூர் வழியாக தஞ்சை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரியில் மீன்களை ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது ஏலாக்குறிச்சி பிரிவு பாதை அருகே சென்று கொண்டு இருந்தபோது, எதிரே விழுப்புரம் மாவட்டம் காட்டுராம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் சுரேஷ்(39) என்பவர் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரியுடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் அதிவேகத்தில் பயங்கர சத்தத்துடன் மோதிக்கொண்டன. இதில் ரமேஷ்பித்தானியும், பமன்ஜிராஜாவும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து திருமானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல்
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கோரைக்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, கோரைக்குழி நடுத்தெருவை சேர்ந்த மோகன்தாஸ்(வயது 23) என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் இருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து மோகன்தாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அண்ணன் தப்பி ஓட்டம்-தம்பிக்கு அடிஉதை
- தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் மகன் குணசீலன் (வயது 26). படிப்பை பாதியில் நிறுத்திய குணசீலன் கிடைத்த கூலி வேலைக்கு சென்று வந்தார். வேலைக்கு செல்லாத நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, கிட்டிப்புல் விளையாடுவது என்று பொழுதை கழித்து வந்துள்ளார்.இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலையில் தாமதாக தூங்கி எழுந்த குணசீலன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, மாலையில் சந்தைதோப்பு பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிட்டிப்புல் விளையாட சென்றார். அங்கு ஏராளமானோர் திரண்டு விளையாடிக்கொண்டு இருந்தனர்.இதற்கிடையே இந்த கிட்டிப்புல் விளையாட்டில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான மார்ட்டின்குமார் (23), ஆரோக்கியதாஸ் (27) ஆகியோரும் விளையாடினர். அப்போது திடீரென்று குணசீலனுக்கும், மார்ட்டின்குமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த அருகில் விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி சண்டையை விலக்கி விட்டனர்.ஆனால் தொடர்ந்து நடந்த வாக்குவாதம் முற்றியதால் ஒருவரையொருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மார்ட்டின்குமார், தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசீலனை சரமாரியாக குத்தினார். இதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே குணசீலன் பரிதாபமாக இறந்தார்.இதைப்பார்த்த அங்கு விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே மார்ட்டின்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் அவரது சகோதரர் ஆரோக்கியதாசும் தப்ப முயன்றார். ஆனால் அப்பகுதியினர் ஒன்று சேர்ந்து அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு ஆண்டிமடம் போலீசார் விரைந்து வந்தனர்.அவர்கள் கொலையுண்ட குணசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமறைவான மார்ட்டின் குமாரை தேடி வருகிறார். கிட்டிப்புல் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.