search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலை உணவு திட்டம்"

    • பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் அனைத்து கட்சிகளையும் ஒழித்துவிட வேண்டும் என்பதுதான்.
    • விலைவாசி உயர்வை பற்றி நான் சொல்ல வேண்டாம். நாள்தோறும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.

    சென்னை:

    சென்னை தங்க சாலை, அரசு அச்சகம் அருகில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி, இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய இரண்டு அணிகள் நம்மை எதிர்க்கிறார்கள் என்று மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுது தோன்றும். இரண்டு அணிகளும் ஒன்றுதான். ஒரு அணிதான்.

    காரணம் இல்லாமல் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். காரணத்தோடுதான் அவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். மூன்று மாதத்துக்கு முன்னால் வரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி நாள்தோறும் நரேந்திர மோடியுடனும், அமித்ஷாவுடனும் பேசிக் கொண்டிருந்தார். கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். இப்பொழுது கூட்டணி இல்லை போன்று தோற்றமளிக்கிறது.

    தேர்தலுக்கு பிறகு, தமிழ்நாட்டில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் கூட்டணி வைத்துக் கொள்வார்கள் என்று நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

    அ.தி.மு.க. மேடையிலே குறிப்பாக பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியை விமர்சிப்பது கிடையாது, பாரதிய ஜனதா கட்சி மேடையிலும் அ.தி.மு.க.வை விமர்சிப்பது கிடையாது.

    இரண்டு திசையிலிருந்து அம்பை எய்கிறார்கள் ஒழிய, அந்த இரண்டு அம்புகளும் நம் மீதுதான் பாய்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. ஆக தேர்தலுக்கு பிறகு அவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்கள்.

    எடப்பாடி பழனிசாமிக்கு நான் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். மோடி உங்களை தழுவுவார், அது மரணத் தழுவல், உங்களை தழுவியவுடன் கூரு கூராக, உங்கள் கட்சி உடைந்து விடும். இதுதான் நடக்கும்.

    மாயாவதி கட்சி இருந்த இடம் தெரியாமல் போச்சு. தெலுங்கானாவில் சந்திர சேகர் ராவ் கட்சியைத் தழுவினார். அந்த கட்சி படுதோல்வி அடைந்து இப்போ அந்த கட்சி சின்னாபின்னமாகி விட்டது.

    "மரணத் தழுவல்" என்று தமிழ்ச்சொல் இருக்கிறது. ஆங்கிலத்தில் பேடல் எம்பிரேஸ். பாரதிய ஜனதா கட்சி யாரை தழுவினாலும், அவர்கள் பஸ்பம் ஆகிவிடுவார்கள். அந்த விளைவு தான் அ.தி.மு.க.வுக்கும் காத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்னாடி அந்த கட்சி ஏற்கனவே 2-3 கூறுகளாக பிரிந்து இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அடைந்த பிறகு, இன்னும் மோசமாகிவிடும். அதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம்.

    பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் அனைத்து கட்சிகளையும் ஒழித்துவிட வேண்டும் என்பதுதான்.

    பாரதிய ஜனதா கட்சியின் நோக்கமெல்லாம் கட்சியை முடக்க வேண்டும். கட்சி கணக்குகளை முடக்க வேண்டும். ஒடுக்க வேண்டும். பிறகு அழிக்க வேண்டும். எத்தனை கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்து அழிந்து போயிருக்கின்றன. உத்தரபிரதேசத்தில் மாயாவதி கட்சி பீகாரில் எண்ணற்ற கட்சிகள். ஆந்திராவில் சந்திர சேகர் ராவ் கட்சி எல்லாம் அழிந்து போய்விட்டன.

    அவர்கள் நோக்கம் என்ன? இந்தியாவுல நாடு முழுவதும் தடம் பதித்த காங்கிரஸ் கட்சியை ஒதுக்கிவிட்டார். காங்கிரஸ் கட்சியை ஒழித்து விட்டால் பிறகு மற்ற கட்சிகளெல்லாம் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் மாநில கட்சிகள் தானே? திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டின் முதல் கட்சி வலிமையான கட்சி, யாரும் மறுக்க முடியாது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழக நண்பர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

    ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியிலேயே வந்ததால் ஜனநாயகம் நிலைத்திருந்தது. ஜனநாயகத்துக்காக போராடியவர்கள் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் நம்மை தலைமை ஏற்று நடத்தியதால் ஜனநாயகம் இருந்தது. அந்த ஜனநாயகத்துல தான் மோடி தப்பித்தவறி பிரதமராக வந்துவிட்டார்.

    விலைவாசி உயர்வை பற்றி நான் சொல்ல வேண்டாம். நாள்தோறும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.

    இந்த மூன்று ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்த முத்தான திட்டங்களை நான் சொல்கிறேன். 1,15,00,000 குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை. எங்களையும் நெகிழ வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அன்று கேலி பேசினார்கள். ஆனால் இன்று நாடு முழுவதும் மதிய உணவு திட்டம் கட்டாயத்துக்கானது. அதே அளவுக்கு புகழும் பெயரும், இன்றைய தேதியை குறிச்சிக்குங்க, நேரத்தை குறிச்சிக்குங்க. பெருந்தலைவர் காமராஜருடைய மதிய உணவு திட்டம், அவருக்கு நாடு முழுவதும் புகழையும் பெயரையும் பெற்றுத் பெற்றுத் தந்ததோ அதைப்போல் காலை சிற்றுண்டி திட்டம், ஒரு நாள் நாடு முழுவதும் பரவும். நாடு முழுவதும் மு.க.ஸ்டாலின் பெயரும், புகழும் ஓங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மேயர் பிரியா ராஜன், இந்தியா கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

    • வேலூர், அரக்கோணம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
    • அப்போது பேசிய அவர், தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்றார்.

    வேலூர்:

    வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த தேர்தலில் வேலூரில் போட்டியிட்ட கதிர் ஆனந்தை தோற்கடிக்க தேர்தலை தள்ளிப் பார்த்தார்கள். ஆனால் வாக்காளர்களான நீங்கள் 'அவர்களை' தள்ளி வைத்து வெற்றியைக் கொடுத்தீர்கள். இந்த தேர்தலிலும் கதிர் ஆனந்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

    தி.மு.க.வின் திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகத்துக்கே முன்னோடியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 18 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைகிறார்கள். இன்று காலை, சமூக வலைதளத்தில் கனடா நாட்டின் பள்ளிகளில் உணவுத்திட்டம் வழங்கப்படுவதாக செய்தியைப் பார்த்ததும் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

    எதிர்க்கட்சியாக இருக்கும்போது 'ஒன்றிணைவோம் வா' என உங்களுக்காக பணியாற்றுவோம். ஆட்சியில் இருந்தால் திட்டங்களை நிறைவேற்றி 'நீங்கள் நலமா?' என உங்களிடம் கேட்போம்.

    பொய்களையும், அவதூறுகளையும் துணையாக அழைத்துக்கொண்டு தேர்தல் சீசனுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி. தேர்தல் முடிந்ததும் அவர்கள் தமிழ்நாட்டின் பக்கமே வர மாட்டார்கள்; நிதி கேட்டா தர மாட்டார்.

    பாராளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்து வாக்களித்து அது நிறைவேற முக்கிய காரணியாக இருந்துவிட்டு இப்போது அதை எதிர்க்கிறோம் என்று அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கூறுவது பசப்பு நாடகம் இல்லையா?

    இந்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய என் மீது, திருமாவளவன், ப.சிதம்பரம் உள்ளிட்டோர்மீது வழக்குப்பதிவு செய்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

    சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் நம் அரசு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்கக் கூட மனம் இல்லாமல் எம்.எல்.ஏ.க்களுடன் வெளியே சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

    தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்து தராமல், துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

    • காலை உணவு, ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க வேளாண் துறையுடன் இணைந்து ஆயிரத்து 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைப் போல் இலங்கையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    ஆரோக்கியமான சுறு சுறுப்பான தலைமுறை என்ற திட்டத்தின் கீழ், இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை அளிக்கப்படும் காலை உணவு, ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை படிக்கும் 9 ஆயிரத்து 134 பள்ளிகளில் 16 லட்சம் மாணவ மாணவிகள் பயன் அடைவர்.

    இந்தத் திட்டத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தொடங்கி வைத்தார். அவர் ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு காலை உணவை வழங்கினார். மாணவர்களிடையே உள்ள ஊட்டச்சத்து குறைபாடு களை நிவர்த்தி செய்யவும், தினசரி வருகை விகிதத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை வளர்க்கவும், கல்வியில் செயல் திறனை உயர்த்தவும் பள்ளி உணவுத் திட்டம் பயன்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

    இந்தத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க வேளாண் துறையுடன் இணைந்து ஆயிரத்து 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.
    • அங்கன்வாடி பணியாளரிடம் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை யூனியனுக்கு உட்பட்ட அய்யலூர் அருகே உள்ள களர்பட்டி 7-வது வார்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் சுமார் 70 மாணவ-மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் காலை உணவு திட்டத்திற்கு மாணவிகளை காலை 8 மணிக்கு வரச் சொல்வதாகவும், தாமதமாக வரும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க மறுப்பதாகவும் புகார்கள் வந்தது. இதுகுறித்து குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    இங்கு காலை உணவு திட்டத்தின் கீழ் அமைப்பாளராக பணியாற்றி வரும் அம்பிகா என்பவர் பள்ளிக்கு வரும் குழந்தைகளிடம் தண்ணீர் குடத்தில் எடுத்து வரச்சொல்வதாகவும், தாமதமாக வந்தால் உணவு கிடையாது என்றும் கூறியதாக குழந்தைகள் தெரிவித்தனர்.

    கடந்த சில நாட்களாகவே இப்பிரச்சினை அடுத்தடுத்து எழுந்த நிலையில் இது குறித்து அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்த முடிவு செய்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் தலைமையில் வடமதுரை ஊட்டச்சத்து அங்கன்வாடி மேலாளர்கள், திண்டுக்கல் மண்டல துணைத் திட்ட தாசில்தார் ஆகியோர் நேரடியாக பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கன்வாடி பணியாளரிடம் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. தாமதமாக வந்தாலும் உணவு வழங்க வேண்டும் என்று எச்சரித்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.
    • சமையல் கூடத்திற்குள் நுழைந்த கலெக்டர் அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவு குறித்து சமையல் செய்தவர்களிடம் கேட்டார்.

    அரியலூர்:

    உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நல்லாம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பொதுமக்களை சந்தித்தும் அவர் குறைகளை கேட்டறிந்தார். இதன் ஒரு பகுதியாக நல்லாம்பாளையத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாராகி கொண்டிருந்தது. சமையல் கூடத்திற்குள் நுழைந்த கலெக்டர் அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவு குறித்து சமையல் செய்தவர்களிடம் கேட்டார். அப்போது காலை உணவாக உப்புமா தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

    இதனை தொடர்ந்து எனக்கு கொஞ்சம் தாருங்கள் என்று தட்டில் வாங்கி, உப்புமாவை சாப்பிட்ட கலெக்டர், என்ன இது உப்புமாவா? பொங்கலா? என்று சந்தேகத்தை கிளப்பினார். அதற்கு சமையலர்கள் விளக்கம் அளித்தனர். ருசி என்னமோ நன்றாகதான் உள்ளது. ஆனால் பொங்கலை போல அரிசியெல்லாம் உள்ளதே என்று கேட்ட கலெக்டர், இனி அந்தந்த உணவை, அந்தந்த உணவு பொருட்களை கொண்டு, அந்தந்த சமையல் முறையில் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • இரவு அரசு மருத்துவமனை, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் விடுதி உள்ளிட்டவற்றை கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.
    • தொல்காப்பிய குடி ஊராட்சி பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    சீர்காழி:

    தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சீர்காழியில் கடந்த 24 மணி நேர ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலை 9 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு பணியை தொடங்கினார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தது. இரவு அரசு மருத்துவமனை, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் விடுதி உள்ளிட்டவற்றை கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இரவு கொள்ளிடத்தில் தங்கினார்.

    இந்நிலையில் இன்று (1-ந்தேதி) அதிகாலையில் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியினை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் கொள்ளிடம் புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல் மையத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் எருக்கூர் நவீன அரிசி ஆலையில் கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து தொல்காப்பிய குடி ஊராட்சி பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    இந்த ஆய்வில் கோட்டாட்சியர் அர்ச்சனா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கண்மணி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் மஞ்சுளா கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் தியாகராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழிஉள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் ஆய்வில் உடன் இருந்தனர். 

    • மலையின மக்களின் சுகாதார தேவைகள் குறித்து அறிந்து கொண்டேன்.
    • மலை கிராமங்களில் இளம்பிள்ளைகள் திருமணத்தை தடுக்க வேண்டும்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள குடகரை பகுதியில் இன்று காலை 7 மணியளிவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் பயன்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளரிகளிடம் கூறியதாவது;-

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தேன்கனிக்கோட்டையில் உள்ள மலை கிராமங்களில் நான் ஆய்வு மேற்கொண்ட போது மலையின மக்களின் சுகாதார தேவைகள் குறித்து அறிந்து கொண்டேன். அந்த அடிப்படையில் உருவானது தான் மக்களை தேடி மருத்துவ திட்டம். இதில் தற்போது 1.67 கோடி பேர் பயன் அடைந்து வருகின்றனர். தற்போது நான் ஆய்வு வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் மலை கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடகரை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து சோதனை, மற்றும் கண் பரிசோதனை செய்யப்படும். முதலமைச்சர் கொண்டு வந்துள்ள காலை உணவு திட்டத்துக்கு பிறகு மலை கிராம மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க வருகிறார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். மலை கிராமங்களில் இளம்பிள்ளைகள் திருமணத்தை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது.
    • இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை.

    சென்னை மாநகராட்சியில் நவம்பர் மாதத்துக்கான மாதாந்திர மன்றக் கூட்டம் கடந்த 29-ந்தேதி ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 358 அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்குவதை வெளி நிறுவனம் மூலம் ஓராண்டுக்கு ஒப்பந்தம் வழங்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, காலை உணவு திட்டத்தை தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கும் முறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கவுன்சிலர்களின் எதிர்ப்பையும் மீறி காலை உணவு திட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரித்தன. இந்த நிலையில், காலை உணவு திட்டத்தை தனியாருக்கு கொடுக்கும் டெண்டர் அறிவிப்பு தற்போது கோரப்படவில்லை எனவும், மாநகராட்சி சார்பிலேயே தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சியில் 358 பள்ளிகளில் 1 முதல் 5 - ம் வகுப்பு வரை பயிலும் 65 ஆயிரத்து 30 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட 35 சமையல் கூடங்களில் இருந்து, தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உயர் அலுவலர்களின் கண்காணிப்பில் காலை உணவு தரமாக தயாரித்து வழங்கும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணியில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் ஒப்பந்த அடிப்படையில் காலை உணவு தரமாகத் தயாரித்து வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின் அதற்கான உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது.

    இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒப்பந்ததாரர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு உணவு வழங்க வேண்டும்.
    • புதிய நிபந்தனைகள், விதிமுறைகளின்படி குடும்ப கல்லறைகள் மற்றும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது உள்ளிட்ட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த கம்யூனிஸ்டு தலைவர் சங்ரய்யா, ஆன்மிக தலைவர் பங்காரு அடிகளார் மறைவிற்கு உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    அதைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் பேசுகையில், எனது வார்டில் பரமேஸ்வரன் நகர் என்ற பகுதியில் 90 ஆண்டுகளாக மக்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கழிவுநீர் இணைப்பு வசதிகள் கொடுக்க முடியவில்லை. மின் வசதி, குடிநீர் வசதி பெற முடியவில்லை. மேலும் தற்காலிக வரி விதிப்பு படி அவர்கள் வீடுகளுக்கு வரி விதிப்பு வழங்க வேண்டும்.

    தற்போது வருவாய் துறை தடையில்லா சான்று வழங்கினால் தான் தற்காலிக வரி விதிக்க முடியும் என கூறப்படுகிறது. அதை நீக்க வேண்டும்" என்றார்.

    மேயர் பிரியா பேசுகையில், "அரசு நிலம் கிராம நத்தம் அனாதீன நிலம் போன்றவற்றில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு தற்காலிக வரி விதிக்க வருவாய் துறை சான்றிதழ் இருந்தால் வரி விதிக்கப்படும்" என்றார்.


    இதற்கு தி.மு.க. சார்பில் மாமன்ற உறுப்பினர்களும் மண்டல குழு தலைவர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

    விஸ்வநாதன் (கல்வி குழு தலைவர்)-கடந்த ஆட்சியில் ரெட்பாம் என்ற முறை இருந்தது. மாநகராட்சி அதிகாரிகளே தற்காலிக வரி விதிப்பு முறையை வழங்கினர். இதனால் பொதுமக்கள் எளிதாக கழிவுநீர் இணைப்புகள் பெற முடிந்தது. மீண்டும் ரெட்பாம் நடைமுறை அமல்படுத்த வேண்டும்.

    தனசேகரன் (நிலைகுழு தலைவர்):-வருவாய்த் துறையிடம் சான்றிதழ் பெறுவது என்பது எளிதாக நடக்கும் காரியம் அல்ல. வருவாய் துறை சான்றிதழ் பெற வருடக்கணக்கில் நாளாகும். கடமைக்காக இதை செய்யக்கூடாது. மக்களுக்கு பயனுள்ள வகையில் நாம் ரெட்பாம் முறையை மீண்டும் அனுமதிக்க வேண்டும். அது தான் இந்த மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையாகும்.

    வி.வி.ராஜன் (மண்டல குழு தலைவர்):- மாநகராட்சி ஆணையர் பேரில் தான பத்திரம் கொடுக்கச் சொன்னாலே வருவாய்த்துறையினர் தான பத்திரத்தை மாற்றிக் கொடுப்பதில்லை. எனது வார்டில் 74 தான பத்திரங்கள் இதுவரை மாற்ற என்.ஓ.சி. கொடுக்கவில்லை. இதுவே உதாரணமாகும்.

    கூட்டத்தில் மாநகராட்சி, உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு தயாரித்து வழங்கும் பணியை தனியாருக்கு கொடுக்கவும், 358 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் மாணவர்களுக்கு முறையாக வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்காக கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கவும் ஒப்பந்ததாரர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு உணவு வழங்க வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிப்பது, தரம் குறைந்த உணவு வழங்கினால் 3 முறை அபராதமும், அதன் பிறகும் தொடர்ந்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

    உணவு அளவு குறைதல், தரம் குறைந்த மூலப்பொருட்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துதல், சமையல் கூடம் சுத்தமாக பராமரிக்க தவறினால் அபராதம் விதிக்கவும் தொடர்ந்து தவறு செய்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

    கிறிஸ்தவர்கள் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட 14 வருடங்கள் கால இடைவெளி திருத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய நிபந்தனைகள், விதிமுறைகளின்படி குடும்ப கல்லறைகள் மற்றும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது உள்ளிட்ட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக மன்ற காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் பேசும் போது, கிண்டி காந்தி மண்டபம் மின் விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து கிடக்கிறது. அங்கு நவீன மின் விளக்கு அமைக்க வேண்டும். மீனவ தந்தை சிங்கார வேலருக்கு மயிலாப்பூர் நடுக்குப்பத்தில் மணிமண்டபம் நிறுவ வேண்டும். மெரினா கடற்கரையில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக பேசிய குஷ்பு மீது கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    • கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
    • கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரேசில், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருந்ததாவது:-

    நான் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவன். மீனவ மக்களின் வாழ்வாதாரம், கல்வி, முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறேன்.

    கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. சுமார் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடலோர பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கடலோரத்தில் வசிக்கும் மீனவ மக்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது.

    இதனால் மீனவ குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பட்டால் மீனவ மாணவர்கள் பலன் அடைவார்கள்.

    எனவே கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் திலக்குமார் ஆஜராகி, கடந்த மாதம் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் மட்டுமின்றி அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன என்றார்.

    அரசு வக்கீலின் தகவலை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திட்டத்திற்கு அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் தொடங்கப்பட்ட உடனே தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அதிகாரிகள் தமிழகம் வந்தனர். அவர்கள் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்ப டுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வருகிற அக்டோபர் 24-ந் தேதி முதல் தெலுங்கானா மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்படுகிறது.

    இந்த திட்டத்திற்கு அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    • காலை உணவு திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக, தவறான தகவல்களை வேப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா பரப்பி உள்ளார்.
    • மேனகாவை ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் அருணாசலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாரத்தில் சில பள்ளிகளில் காலை உணவு திட்டம் தயாரிக்க சில உணவு பொருட்களின் இருப்பு இல்லை என்றும், அந்த உணவு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் உபயமாக (ஸ்பான்சர்) பெற்று உணவு தயாரிக்குமாறும், வேறு வழியில்லை என்றும், கலெக்டரே இந்த உத்தரவை போட்டிருப்பதாகவும், உணவு தயாரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள பெண் அலுவலர் வாட்ஸ் அப் குழுவில் குரல் பதிவு செய்து அனுப்பிய ஆடியோ வைரலானது. ஆனால் இது தவறான தகவல் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் மறுப்பு தெரிவித்தார்.

    இந்தநிலையில், காலை உணவு திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக, தவறான தகவல்களை பரப்பியதாக வேப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் (வாழ்வாதாரம்) மேனகாவை ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் அருணாசலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    ×