என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Breakfast Plan"

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு
    • சமையல் ஒப்பந்ததாரருக்கு பாராட்டு

    ஆற்காடு:

    ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 6 பள்ளிகளில் 661 மாணவ- மாணவிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கப் பட்ட காலை உணவு திட்டம் கடந்த சில மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது.

    ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 1-ல் உள்ள முதல்- அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் குழந்தை களுக்காக சமைக்கப்பட்ட உணவின் சுவை மற்றும் தரத்தினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

    உணவு தரமாகவும் சுவையாகவும் உள்ளது என சமையல் ஒப்பந்ததாரர் ஜெமினி ராமச்சந்திரனை பாராட்டினார்.

    பின்னர் ஆற்காடு தோப்புக்கானா வடக்கு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சீனிவாச சேகர், நகராட்சி பொறியாளர் கணேசன், நகர மன்ற உறுப்பினர் குணா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பென்ஸ் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேட்டி
    • வேலூர் மாநகராட்சி பகுதியில் 48 பள்ளிகளில் படித்து வரும் 3,250 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் முதல்அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடத்தில் காலை உணவு தயாரிக்கப்பட்டு அங்கிருந்து வாகனங்கள் மூலம் தொடக்கப் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழங்கி வருகின்றனர். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.

    சத்துவாச்சாரியில் உள்ள உணவு கூடத்தில் பணியாளர்கள் காலை உணவு தயாரிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சித்தேரி, வேலப்பாடி பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகள் நேரில் சென்று குழந்தை களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டார். காலை உணவு தரமாக தயாரிக்கப்படுகிறதா சரியான நேரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர், மேயர் சுஜாதா ஆகியோர் குழந்தைகளுக்கு காைல உணவு பரிமாறினர்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    வேலூர் மாநகராட்சி பகுதியில் 48 பள்ளிகளில் படித்து வரும் 3,250 குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மாநகராட்சி பகுதியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவு தரமாக உள்ளது. இதனை சாப்பிடும் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளனர். பணியாளர்கள் திறம்பட இதில் ஈடுபட்டுள்ளனர். ஏதாவது குறைபாடுகள் இருந்தாலும் களையப்படும் என்றார்.

    கலெக்டர் ஆய்வின் போது கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    • பள்ளி வளாகத்தில் உள்ள காலியான இடத்தில் ஊட்டச்சத்து காய்கறித்தோட்டத்தை அமைத்து மாணவர்களுக்கு பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
    • பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் தற்போது வழங்கியுள்ளார்.

     திருப்பூர்:

    முதல்வரின் காலை உணவு திட்டம் முதற்கட்டமாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதி மாணவர்க ளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாராபுரம் கல்வி மாவட்டத்தில்உள்ள அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் தற்போது வழங்கியுள்ளார்.

    அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் வட்டாரத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காலை உணவுத்திட்டங்களுக்கு தலைமையாசிரியர் மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் இணைந்து ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் சிறு தானியங்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று அதன் மூலம் காலை உணவுத்திட்டம் முறையாக வழங்க வேண்டும்.

    தினந்தோறும் மாணவர்களுக்கு வழங்கும் குடிநீர் காய்ச்சி வழங்கப்படுவதை உறுதி செய்தல் அவசியம். சத்துணவு உண்போர் அன்றாட எண்ணிக்கையினை பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளிகளின் பொறுப்பாசிரியர்கள் மூலம் தினமும் காலை 11மணிக்குள் தவறாது எஸ்.எம்.எஸ்., அனுப்பிட வேண்டும்.பள்ளி வளாகத்தில் உள்ள காலியான இடத்தில் ஊட்டச்சத்து காய்கறித்தோட்டத்தை அமைத்து மாணவர்களுக்கு பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

    • வரும் கல்வியாண்டு முதல் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது சம்பந்தமாக கருத்துக்கள் கேட்கப்பட்டது.
    • காலை உணவுத்திட்டத்தை 8 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    மங்கலம் :

    தமிழக முதல்வரின் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தினை செயல்படுத்துவது சம்பந்தமாக திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாப ழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தகுமார், பல்லடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அனைத்து வார்டு கவுன்சிலர்கள், சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், சாமளாபுரம் பகுதி மகளிர் கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வரும் கல்வியாண்டு முதல் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது சம்பந்தமாக அனைவரிடமும் கலந்தாலோ சித்து அவர்களுடைய கருத்துக்கள் கேட்கப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்ட வர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு இந்தத் திட்டத்தை சாமளாபுரம் பேரூராட்சியில் முதலமைச்ச ரின் காலை உணவுத்திட்டத்தை 8 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளிலும் சிறந்த முறையில் நடைமுறைப்படு த்துவது என முடிவு செய்யப்பட்டது.

    • 13 வகை உணவு வழங்கப்படும்
    • துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் வருகின்ற கல்வியாண்டில் மாவட்டத்தில் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் செயல்படுத்துவது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

    காலை உணவு திட்டம்

    கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது: -

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராமப் பகுதியில் உள்ள 538 பள்ளிகள், நகராட்சி பகுதிகளில் 41 பள்ளிகள், பேரூராட்சி பகுதிகளில் 41 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 620 தொடக்கப் பள்ளிகள் உள்ளன.

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் வருகிற கல்வி ஆண்டு முதல் செயல்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இப்பள்ளிகளில் தற்பொழுது செயல்பாட்டில் உள்ள மதிய உணவு திட்ட சமையல் கூடங்களிலேயே காலை உணவு சமையல்கள் தயாரிக்கப்படும்.

    சமையல் கூடங்கள் இல்லாத பள்ளிகளில் புதிய சமையல் கூடங்கள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    காலை உணவு திட்டத்திற்கு அரிசி. உப்பு, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு போன்ற முக்கிய பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வழங்கப்படும்.

    கோதுமை, ரவா, சோளரவா, சேமியா, பாசிப்பருப்பு, சிவப்பு மிளகாய், கடுகு, மிளகு,சிறு தானியங்கள் போன்ற பொருள்கள் இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்படும்.

    இதற்கென ரொக்க நன்கொடைகள் பெற்றிடுவது அனுமதிக்கப்படாது. தற்பொழுது 13 வகையான உணவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, இதில் 5 வகையான உணவுகள் வழங்கப்படும். சிறுதானிய உணவுகளை அதிக அளவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    குழந்தைகளுக்கு உணவு தயாரித்து பரிமாறப்படுவதை மகளிர் குழு உறுப்பினர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் மகளிர்கள் அரசு விதிகளின்படியே கட்டாயம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்த வேண்டும். இதில் தவறுகள் இருக்கக் கூடாது.

    வருகிற கல்வி ஆண்டு தொடக்கத்தில் இத்திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதால் அனைவரும் கவனமுடனும், பொறுப்புடனும் பணிகளை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக முதல்- அமைச்சரின் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரத்தில் தொங்கியுள்ளனர்.
    • 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டம் விரிவுப டுத்தப்பட உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்- அமைச்சரின் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள 41 தொடக்கப்பள்ளிகளில், கடந்த ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    நடப்பு, 2023-2024-ம் கல்வியாண்டில் நாமக்கல் மாவட்டத்தில் மீதமுள்ள 14 வட்டாரங்கள் மற்றும் 19 டவுன் பஞ்சாயத்துக்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டம் விரிவுப டுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட பஞ்சாயத்து மற்றும் டவுன் பஞ்சாயத்து அளவில் உள்ளாட்சித் தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர், பள்ளி மேலாண்மை குழுவின் ஒரு பிரதிநிதி மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பின் ஒரு அலுவலக பிரதிநிதி ஆகியோரை உறுப்பினராக கொண்ட முதன்மை குழு அமைக்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் காலை உணவு தயாரிக்க, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் கட்டாயம் பதிவு செய்து, குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அனுபவமுள்ள சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினராக இருப்பவர்கள் சமையல் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.

    தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினர் அதே கிராமம் அல்லது நகர்ப்புற பகுதியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். காலை உணவு தயாரிப்பதற்கும் பரிமாறுதலுக்கும் தேவையான அடிப்படை அறிவை பெற்றிருத்தல் வேண்டும். சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அதே பள்ளியில் படிக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அப்பள்ளியை விட்டு வெளியேறும் பொழுது அவருக்கு பதிலாக தகுதியான வேறு சுய உதவிக்குழு உறுப்பினரை பொறுப்பாக்கப்படுவார். சுய உதவிக்குழு உறுப்பினர் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மலைப்பாங்கான, தொலைதூர மற்றும் பழங்குடியினர் கிராமங்களில் 10-ம் வகுப்பு வரை பயின்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் இல்லையெனில், 8-ம் வகுப்பு வரையாவது படித்திருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் பெயரில் இண்டர்நெட் வசதியுடன் கூடிய ஆன்ராய்டு மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் உணவு தயாரிப்பதற்கான சமையல் மைய பொறுப்பாளர் பணி முற்றிலும் தற்காலிகமானது.

    இப்பணிக்கு தகுதியுடைய மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மட்டுமே சமையல் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இப்பயிற்சிக்கு திட்ட இயக்குநா் அபிதா ஹனிப் மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவா் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் தலைமை வகித்தனா்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கமுதியில், தமிழ்நாடு மாநில ஊராக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்திற்க்கான மையப் பொறுப்பாளா்களுக்கு முதல்நாள் பயிற்சி நடைபெற்றது. இதில் 40 மைய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இப்பயிற்சிக்கு திட்ட இயக்குநா் அபிதா ஹனிப் மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவா் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் தலைமை வகித்தனா். உதவி திட்ட அலுவலா் அழகப்பன், மற்றும் கமுதி வட்டார வளர்ச்சி அலுவலா் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளா் மயில்ராஜ் செய்திருந்தார். மேலும், இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் திரவியம், சேதுபதி, பில்லத்தியான், மாரிமுத்து, சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனா்.

    • தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைத்தார்.
    • அடுத்த மாதம் 15ந் தேதி முதல் அவிநாசி, பல்லடம், திருப்பூர், மூலனூர், காங்கயம் ஆகிய வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

    தாராபுரம்:

    தொடக்கப்பள்ளிகளில்  காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் வாயிலாக 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட 76 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் வழங்க திட்டமிடப்பட்டு, இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டு முதல் கட்டமாக குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், பொங்கலுார், ஊத்துக்குளி, வெள்ளக்கோவில் வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில் இம்மாதம் அதாவது பள்ளிகள் துவங்கிய நாளில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது.

    அடுத்த மாதம் 15ந் தேதி முதல் அவிநாசி, பல்லடம், திருப்பூர், மூலனூர், காங்கயம் ஆகிய வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.காலை சிற்றுண்டி வழங்குவதற்கு மாணவ, மாணவிகளுக்கு தேவையான தட்டு, டம்ளர், சமையல் செய்ய பாத்திரங்கள் மற்றும் டிரங்க் பெட்டி உள்ளிட்டவற்றை அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர்கள் வாயிலாக அந்த பொருட்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய அந்தந்த வட்டார பி.டி.ஓ.,க்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.

    • 150 முதல் 200 கிராம் காலை உணவு மற்றும் 100 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்க வேண்டும்.
    • காலை உணவுத்திட்டம் தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்து உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

    மாணவ-மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வர வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல், வருகையை அதிகரித்தல் போன்ற நோக்கத்திற்காக இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    காலை உணவுத்திட்டம் தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்து உள்ளது. காலை உணவாக காய்கறிகள் சேர்த்து ஊட்டச்சத்துடன் வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை காய்கறி சாம்பாருடன் ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடியும் புதன் கிழமை காய்கறி சாம்பாருடன் ரவா பொங்கல், வெண்பொங்கல் வழங்கப்படுகிறது.

    வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா வினியோகிக்கப்படுகிறது. வெள்ளிக் கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி, ரவா கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு மாணவருக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப்பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி அல்லது ரவை, கோதுமை ரவை, சேமியா வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் உள்ளூரில் அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம், உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் சேர்க்க வேண்டும்.

    150 முதல் 200 கிராம் காலை உணவு மற்றும் 100 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்க வேண்டும். ஒரு வாரத்தில் குறைந்தது. 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்ககூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    • 1,554 பள்ளிகளில் தொடங்க நடவடிக்கை
    • சைக்கிள் வழங்கும் விழாவில் கலெக்டர் தகவல்

    வேங்கிகால்:

    திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பா.முருகேஷ் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிளை வழங்கி பேசினார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 98.61 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று முதன்மை பள்ளியாக நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி திகழ்கிறது.

    மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அதற்கு நமது எண்ணங்கள் மற்றும் குறிக்கோள்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் கல்வியுடன், சமூகம் சார்ந்த தகவல்களையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இந்த மாத இறுதிக்குள் சைக்கிள் வழங்கப்படும்.

    பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்ச ரூபாயை ஒதுக்கி நகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகள் அமர்ந்து படிக்க இருக்கைகளை வழங்கியுள்ளார்.

    மேலும் இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளார்.

    வருகிற 25-ந் தேதி முதல் 554 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், துணைத் தலைவர் ராஜாங்கம், தமைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டிவிஎம் நேரு. அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் கோமதி குணசேகரன், அரசு வக்கீல் சீனுவாசன், கவிஞர் முருகையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கவும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் சமூகநலத்துறை ஆணையர் அமுதவள்ளி தலைமையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் சமூகநலத்துறை ஆணையர் அமுதவள்ளி தெரிவித்ததாவது:-

    பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகையை அதிகரிக்கவும் மற்றும் கல்வியை தக்க வைத்து க்கொள்ளவும், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கவும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    25.8.2023 அன்று முதல் இரண்டாம் கட்டமாக மொத்தம் 1,081 பள்ளிகளில் 75,482 பள்ளி மாணவ,மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளதை தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (சத்துணவு) ,ஹேமா (திருப்பூர்), பாஸ்கர் (கோயம்புத்தூர்), ரமேஷ்(ஈரோடு), தேன்மொழி (கரூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • காலை உணவு திட்டம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றது.
    • திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    எனது கனவு திட்டங்களில் இதுவும் ஒன்று என பெருமிதம் கொண்டார்.

    இந்த காலை உணவு திட்டத்திற்கு மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றது.

    இந்நிலையில் காலை உணவு திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    அதன்படி அவர் நாளை நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

    நாளை திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பதை முன்னிட்டு பள்ளியில் பொலிவுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    வர்ணம் பூசும் பணிகள், கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்டவைகள் அமைப்பது, நிகழ்ச்சி மேடை கட்டுமானப்பணிகள் உள்பட பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இதேப்போல் கருணாநிதி வீட்டின் முன்பு விழா மேடை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன.

    இந்த பணிகளை தி.மு.க மாவட்ட செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருக்குவளை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ×