சாமளாபுரத்தில் காலை உணவு திட்டம் குறித்து ஆலோசனை

வரும் கல்வியாண்டு முதல் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது சம்பந்தமாக கருத்துக்கள் கேட்கப்பட்டது.காலை உணவுத்திட்டத்தை 8 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டம்  நடைபெற்ற காட்சி.
ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.
Published on

மங்கலம் :

தமிழக முதல்வரின் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தினை செயல்படுத்துவது சம்பந்தமாக திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாப ழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தகுமார், பல்லடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அனைத்து வார்டு கவுன்சிலர்கள், சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், சாமளாபுரம் பகுதி மகளிர் கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வரும் கல்வியாண்டு முதல் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது சம்பந்தமாக அனைவரிடமும் கலந்தாலோ சித்து அவர்களுடைய கருத்துக்கள் கேட்கப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்ட வர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு இந்தத் திட்டத்தை சாமளாபுரம் பேரூராட்சியில் முதலமைச்ச ரின் காலை உணவுத்திட்டத்தை 8 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளிலும் சிறந்த முறையில் நடைமுறைப்படு த்துவது என முடிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com