என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "consult"
- முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
- வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கவும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் சமூகநலத்துறை ஆணையர் அமுதவள்ளி தலைமையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சமூகநலத்துறை ஆணையர் அமுதவள்ளி தெரிவித்ததாவது:-
பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகையை அதிகரிக்கவும் மற்றும் கல்வியை தக்க வைத்து க்கொள்ளவும், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கவும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
25.8.2023 அன்று முதல் இரண்டாம் கட்டமாக மொத்தம் 1,081 பள்ளிகளில் 75,482 பள்ளி மாணவ,மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளதை தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (சத்துணவு) ,ஹேமா (திருப்பூர்), பாஸ்கர் (கோயம்புத்தூர்), ரமேஷ்(ஈரோடு), தேன்மொழி (கரூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்