search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கீகாரம்"

    • தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான 16 ராம்சர் தளங்கள் உள்ளன.
    • ஈர நிலங்களை பாதுகாக்க ஏரி, குளம், கன்வாய் நீர் வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு இன்றியும், கழிவு பொருள்கள் கலக்காமலும் பாதுகாக்க வேண்டும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் இருந்து, 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் கரைவெட்டி. இங்குள்ள ஏரியை நம்பி 50 ஆயிரம் ஏக்கரில் பாசன நிலங்கள் உள்ளன. இந்த ஏரி, பாசனத்துக்குப் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் பறவைகளுக்கும் புகலிடமாக விளங்குவதால், ஏரியை சுற்றியுள்ள வனப்பரப்பை இணைத்து கிட்டத்தட்ட, 20 கிலோ மீட்டர் பரப்பளவில், அதாவது 442.37 ஹெக்டேர் இடத்தை, பறவைகள் சரணாலயமாக கடந்த 1999-ம் ஆண்டில் அறிவித்தது தமிழக அரசு அறிவித்தது. தற்போது இந்த சரணாலயத்துக்கு ராம்சர் தளம் என்ற அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 75-லிருந்து 80-ஆக அதிகரித்துள்ளது.

    தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான 16 ராம்சர் தளங்கள் உள்ளன. 453.72 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஈரநிலங்களில் ஒன்றாகும். மேலும் இப்பகுதி நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கான குறிப்பிடத்தக்க ஆதாரமாக உள்ளது. நெல், கரும்பு, பருத்தி, சோளம் மற்றும் துவரை போன்ற வேளாண் பயிர்களை பயிரிடுவதற்கு கிராம மக்களால் சதுப்பு நிலநீர் பயன்படுத்தப்படுகிறது. கரைவெட்டியில் அதிக எண்ணிக்கையிலான நீர்ப்பறவைகள் உள்ளன. சுமார் 198 வகையான பறவைகளும் இங்கு உள்ளன.

    ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் சதுப்பு நிலங்களுக்குள் எந்தவிதமான ஆக்கிரமிப்பு, தொழில் நிறுவுதல், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவுபடுத்துதல், திடக்கழிவுகளை கொட்டுதல், சுத்திகரிக்கப்படாத கழிவுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுதல், வேட்டையாடுதல் மற்றும் நிரந்தரமான கட்டுமானம் ஆகியவை தடை செய்ய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக உலக ஈர நில தினத்தையொட்டி அரியலூர் அடுத்த தாமரைக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் கூறியதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ராம்சார் ஈர நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் பறவைகள் பாதுகாக்கப்படும். அதிகமான வெளிநாட்டு பறவைகளும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது .

    ஈர நிலங்களை பாதுகாக்க ஏரி, குளம், கன்வாய் நீர் வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு இன்றியும், கழிவு பொருள்கள் கலக்காமலும் பாதுகாக்க வேண்டும். நீர் நிலைகளால் தான் பல்லுயிரி பெருக்கம் ஏற்படுகிறது. இதனால் இயற்கை சமநிலை ஏற்படுகிறது . எனவே மாணவர்களே இவற்றை பாதுகாக்கும் அரண்கள் எனவே இயற்கையை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா நிலவுக்கு சென்றிருக்கிறது. இன்றைக்கு சூரியனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
    • பொருளாதார வளர்ச்சி, சமூக அந்தஸ்து ஆகியவற்றுக்கு அங்கீகாரம் அளிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த ஒழுகச்சேரி கிராமத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் சிவகுலத்தார் பண்பாட்டு கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். முன்னதாக அவருக்கு அணைக்கரையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வரவேற்பு அளித்தார்.

    அப்போது கவர்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

    முன்னதாக 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் கலைஞர்களின் இன்னிசையுடன் கவர்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து மனக்குன்னம் காமாட்சி அம்மன் உடனாகிய கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு விழாவில் கவர்னர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் சிதம்பரநாதபுரம் மாணிக்க நாச்சியார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். அப்போது கிராமமக்கள் கவர்னருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து, ஒழுகச்சேரியில் சோகோ நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தலைமையில் சிவகுலத்தார் பண்பாட்டு கலை நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியை கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பாரத நாடு மன்னர்களால் உருவாக்கப்பட வில்லை. ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது.

    தர்மத்தின் அடிப்படையில் கலாசாரம், அதை சார்ந்த சம்பிரதாயங்கள் ஆயிரம் இருந்தாலும் வழி ஒன்று தான்.

    கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை இந்த நாடு ஒன்றுபட்ட குடும்பமாக திகழ்கிறது. இந்து தர்மத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த நாட்டில் யாரும் புறக்கணிக்கப்பட்டவர்கள் கிடையாது.

    வெவ்வேறு மதம், இனமாக இருந்தாலும் அனைவரும் தர்மத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டவர்கள்.

    இதனை பொறுத்தே இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு சாலை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளில் முனைப்பு காட்டினோம்.

    ஆனால் தொடர்ந்து கலாசார மறுமலர்ச்சிக்கு எந்தவித முன்னெடுப்பும் செய்யப்படவில்லை.

    தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசால் நம் நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

    இந்தியாவில் மதத்தின் பெயரில் வேறுபாடு இல்லை. அனைவரும் சமம். எந்த ஒரு தீண்டாமையும் எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. நாம் அனைவரும் ஒரே குடும்பம். இந்தியா நிலவுக்கு சென்றிருக்கிறது. இன்றைக்கு சூரியனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பல தரப்பட்ட முறையில் வளர்ந்து கொண்டி ருக்கும் நாட்டில் தீண்டாமை ஏற்புடைய தல்ல.

    அனைவரும் ஒரே நம்பிக்கை ஒரே குடும்பமாக வாழ வேண்டியது கட்டாயம்.

    அனைத்து சமுதாயத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகளை சமமாக நடத்துவதோடு மரியாதை கொடுப்பது கடமையாகும்.

    அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக அந்தஸ்து ஆகியவற்றுக்கு அங்கீகாரம் அளிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கவர்னர் ஒழுகச்சேரியில் சோகோ நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    அப்போது சிவராமபுரம் வாயுசித்த ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பொன்னாடை அணிவித்தார்.

    விழா அரங்கில் கவர்னர் முன்னிலையில் பரதநாட்டியம், சிவ குலத்தார் பண்பாட்டு கலாசார நாடகம், பறையாட்டம், நாதஸ்வரம், தவில், சிவவாத்திய கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    இதில் தமிழ் சேவா சங்க அறங்காவலர் ஞான சரவணவேல், ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

    முன்னதாக தமிழ்நாடு பறையர் பேரியக்கத்தை சேர்ந்த சிவகுரு அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியை தமிழ் சேவா சங்க மாநில அமைப்பாளர் பாவேந்தன் தொகுத்து வழங்கினார்.

    முடிவில் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

    • அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறி உள்ளார்.
    • இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறி முறைகள் கடந்த 14.6.2018-ல் வெளியிடப்பட்டன.

    இந்த திட்டத்தின் கீழ் இணையம் வழியாக 14.6.2018 முதல் 13.9.2018 வரை 3 மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப் பங்களுக்கு இசைவு வழங்கு வதற்கு சென்னை ஐகோர்ட்டு விதிக்கப் பட்டிருந்த தடையை நீக்கி 10.2.2021 அன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    பின்னர் 22.3.2021 முதல் 4.4.2021 வரை 2 வார காலத்திற்கு விண்ணப்ப ங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறிய வர்களுக்கு 31.12.2022 வரை 6 மாத காலம் அவகாசம் வழங்கப் பட்டது. தற்போது இதற்கான கால அவகாசம் 30.6.2023 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவல கங்களை அணுகலாம்.

    மேலும் https://tcp.tn.gov.in என்ற இணைய முகவரி யில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • 2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் ெதாடங்குதல் , அங்கீகாரம் புதுப்பித்தல் தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பக் கட்ட ணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் ஆய்வு கட்டணமாக ரூ. 8 ஆயிரம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2023.

    சேலம்:

    சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் ெதாடங்குதல் , அங்கீகாரம் புதுப்பித்தல் தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    2023-2024-ஆம் கல்வி யாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போது

    மானது. விண்ணப்பிக்க வுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பித்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்ட

    ணம் மற்றும் ஆய்வுக்கட்ட ணம் RTGS, NEFT மூலம்

    செலுத்த வேண்டும். அனைத்து தொழிற்பிரிவு களுக்கும் சேர்த்து விண்ணப்பக் கட்ட ணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் ஆய்வு கட்டணமாக ரூ. 8 ஆயிரம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2023. இதற்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறி

    வுரைகளை அறிந்துகொள்ள www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ricsalem7@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 94990 55827 என்ற கைப்பேசி எண் வாயிலாகவும் தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் அரவிந்த் தகவல்
    • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் 28-ந்தேதி ஆகும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-2024-ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் தொடங்குதல், அங்கீ காரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற்பிரிவு களில் கூடுதல் அலகு தொடங்கு தல் ஆகிய வற்றிற்கான விண்ணப் பங்கள் இணையத ளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. கடந்த 2-ந்தேதி முதல் www.skiltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2023-2024-ம் கல்வி யாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண் ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது.

    விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற்பிரி வுகள் மற்றும் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வு கட்டணம் ஆர்.டி.ஜி. எஸ் மற்றும் நெப்ட் மூலம் செலுத்த அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5 ஆயிரம் மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் 28-ந்தேதி ஆகும்.

    கூடுதல் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகம் தொலைபேசி எண்-044-2250 1006 (113) அல்லது detischennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது நாகர்கோவில், கோணம், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04652-264463, 94799055804 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு விவரம் தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அங்கீகார கடிதம் இல்லாத அ.தி.மு.க. வேட்பாளருக்கு 30-ந் தேதி வரை கெடு விடுக்கப்பட்டது.
    • அங்கீகார கடிதம் வழங்கினால் மட்டுமே இரட்டை இலை சின்னம் வழங்கப்படும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் செங்கப்படை ஒன்றிய கவுன்சிலர் பதவி வகித்து வந்த அ.தி.மு.க.கவுன்சிலர் அன்னலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

    காலியாக உள்ள இந்த பதவிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூலை 9-ந்தேதி நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. வேட்புமனுத்தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

    இதில் நேற்று பா.ஜ.க. வேட்பாளர் கட்சியின் அங்கீகார கடிதம் வழங்கப்படவில்லை என்பதால் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார்.அ.தி.மு.க.வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த ராகிணிதேவி அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் கட்சியின் அங்கீகார கடிதம் கிடைக்காமல் நேற்று தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். இன்று வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் 11 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

    அ.தி.மு.க.வேட்பாளர் அங்கீகார கடிதம் வழங்காததால் வாபஸ் நாளான வருகிற 30-ந்தேதி சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாக அங்கீகார கடிதம் வழங்கினால் மட்டுமே இரட்டை இலைச் சின்னம் வழங்கப்படும் என்றும், தவறும் பட்சத்தில் அ.தி.மு.க.வேட்பாளர் சுயேட்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தனிச்சின்னம் வழங்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரி இளங்கோ தெரிவித்தார்.

    ×