search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Acknowledgment"

    • தினமும் 6மணி நேரத்திற்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்கும் அடுத்த ஆறு மணி நேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும்.
    • கடல் உயிரினங்கள் முட்டையிட ஏரிக்கு வராததால் மீன்பிடித்தல் குறைந்து வருகிறது.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இதனை நம்பி சுற்றி உள்ள ஏராளமான மீனவ கிராமமக்கள் மீன்பிடித்து வருகிறார்கள். பழவேற்காட்டில் கடலும் ஏரியும் சந்திக்கும் இடமான முகத்துவாரம் வழியாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். 150-க்கும் மேற்பட்ட வகையான மீன்கள், இறால், நண்டுகள் கிடைத்து வருகின்றன.

    தினமும் 6மணி நேரத்திற்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்கும் அடுத்த ஆறு மணி நேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும். அப்போது கடல் வாழ் உயிரினங்கள் நீர் ஏற்றத்தின் போது ஏரிக்குள் நுழைவதும் இனப்பெருக்கம் செய்து விட்டு கடலுக்குள் வெளியேறுவதும் இயற்கையாக நடக்கும் நிகழ்வு ஆகும். இந்நிலையில் பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது .இதனால் கடல் நீர் ஏரிக்கும் ஏரி நீர் கடலுக்கும் செல்வது தடைபட்டதோடு ஏரியின் ஆழம் குறைந்து காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ரூ.27 கோடியில் திட்டமிடப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் மத்திய வனவிலங்கு துறை அனுமதி கொடுக்காததால் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. இதனால் தற்போது முகத்துவார பகுதி முழுவதும் மணலால் அடைபட்டு மீனவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதற்கிடையே பழவேற்காடு முகத்துவார பகுதியில் கற்கள் கொட்டி முகத்துவார சுவர் கட்ட மத்திய வனவிலங்கு வாரியம் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 17-ந்தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரிய கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முகத்துவாரத்தின் இருபுறமும் தலா 160 மீட்டர் மற்றும் 150 மீட்டர் என 2 சுவர்களைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

    எனவே விரைவில் பழவேற்காடு முகத்துவார பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, முகத்துவாரத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது. நீர் பரிமாற்றம் இல்லாததால், கடல் உயிரினங்கள் முட்டையிட ஏரிக்கு வராததால் மீன்பிடித்தல் குறைந்து வருகிறது. முகத்து வார பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என்றார்.

    • இந்தியா நிலவுக்கு சென்றிருக்கிறது. இன்றைக்கு சூரியனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
    • பொருளாதார வளர்ச்சி, சமூக அந்தஸ்து ஆகியவற்றுக்கு அங்கீகாரம் அளிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த ஒழுகச்சேரி கிராமத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் சிவகுலத்தார் பண்பாட்டு கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். முன்னதாக அவருக்கு அணைக்கரையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வரவேற்பு அளித்தார்.

    அப்போது கவர்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

    முன்னதாக 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் கலைஞர்களின் இன்னிசையுடன் கவர்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து மனக்குன்னம் காமாட்சி அம்மன் உடனாகிய கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு விழாவில் கவர்னர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் சிதம்பரநாதபுரம் மாணிக்க நாச்சியார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். அப்போது கிராமமக்கள் கவர்னருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து, ஒழுகச்சேரியில் சோகோ நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தலைமையில் சிவகுலத்தார் பண்பாட்டு கலை நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியை கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பாரத நாடு மன்னர்களால் உருவாக்கப்பட வில்லை. ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது.

    தர்மத்தின் அடிப்படையில் கலாசாரம், அதை சார்ந்த சம்பிரதாயங்கள் ஆயிரம் இருந்தாலும் வழி ஒன்று தான்.

    கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை இந்த நாடு ஒன்றுபட்ட குடும்பமாக திகழ்கிறது. இந்து தர்மத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த நாட்டில் யாரும் புறக்கணிக்கப்பட்டவர்கள் கிடையாது.

    வெவ்வேறு மதம், இனமாக இருந்தாலும் அனைவரும் தர்மத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டவர்கள்.

    இதனை பொறுத்தே இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு சாலை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளில் முனைப்பு காட்டினோம்.

    ஆனால் தொடர்ந்து கலாசார மறுமலர்ச்சிக்கு எந்தவித முன்னெடுப்பும் செய்யப்படவில்லை.

    தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசால் நம் நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

    இந்தியாவில் மதத்தின் பெயரில் வேறுபாடு இல்லை. அனைவரும் சமம். எந்த ஒரு தீண்டாமையும் எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. நாம் அனைவரும் ஒரே குடும்பம். இந்தியா நிலவுக்கு சென்றிருக்கிறது. இன்றைக்கு சூரியனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பல தரப்பட்ட முறையில் வளர்ந்து கொண்டி ருக்கும் நாட்டில் தீண்டாமை ஏற்புடைய தல்ல.

    அனைவரும் ஒரே நம்பிக்கை ஒரே குடும்பமாக வாழ வேண்டியது கட்டாயம்.

    அனைத்து சமுதாயத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகளை சமமாக நடத்துவதோடு மரியாதை கொடுப்பது கடமையாகும்.

    அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக அந்தஸ்து ஆகியவற்றுக்கு அங்கீகாரம் அளிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கவர்னர் ஒழுகச்சேரியில் சோகோ நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    அப்போது சிவராமபுரம் வாயுசித்த ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பொன்னாடை அணிவித்தார்.

    விழா அரங்கில் கவர்னர் முன்னிலையில் பரதநாட்டியம், சிவ குலத்தார் பண்பாட்டு கலாசார நாடகம், பறையாட்டம், நாதஸ்வரம், தவில், சிவவாத்திய கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    இதில் தமிழ் சேவா சங்க அறங்காவலர் ஞான சரவணவேல், ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

    முன்னதாக தமிழ்நாடு பறையர் பேரியக்கத்தை சேர்ந்த சிவகுரு அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியை தமிழ் சேவா சங்க மாநில அமைப்பாளர் பாவேந்தன் தொகுத்து வழங்கினார்.

    முடிவில் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் உலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.
    • மாணவர்களை தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா உலையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 22 மாணவ-மாணவியர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 22 பேரும் தேர்ச்சி பெற்றனர். 3 மாணவ- மாணவிகள் 488 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றனர். 15 பேர் 400-க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். கணிதப்பாடத்தில் ஒரு மாணவர் 100 மதிப்பெண்ணும், அறிவியல் பாடத்தில் 3 பேர் 100 மதிப்பெண்ணும் பெற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவி கார்னிஷா-488, ஜீவா-488, மனோ ஆனந்தி-488 கவி-485, சர்மிளா-476, சந்துரு-476 ஆகியோரை தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    ×