என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் 25 பேர் கைது
- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு ஜெயங்கொண்டம் அருகே கருப்பு கொடி காட்டுவதற்கு விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டிருந்தனர்.
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.
ஜெயங்கொண்டம்:
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து அவர் கார் மூலம் மயிலாடுதுறை புறப்பட்டு சென்றார்.
ஜெயங்கொண்டம் வழியாக மயிலாடுதுறை மாவட்டம் சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கருப்பு கொடி காட்டுவதற்கு விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக அவர்கள் ஜெயங்கொண்டம் குறுக்குரோடு சந்திப்பில் திரண்டனர். விடுதலை சிறுத்தை கட்சியினர் மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமையில் கருப்பு கொடி காட்ட திரண்டிருப்பது, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனை தொடர்ந்து போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்