search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்துறை அருகே தி.மு.க. செயலாளருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் எரிப்பு
    X

    செந்துறை அருகே தி.மு.க. செயலாளருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் எரிப்பு

    • நல்ல தம்பி வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
    • வந்தவர்கள் ஏன் காரை எரிக்காமல் பைக்கை எரிந்தனர் என்பதும் தெரியவில்லை.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தெத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். இவரது மனைவி சிவசங்கரி, ஆலத்தியூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆவார்.

    இன்று அதிகாலை நல்லதம்பியின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் எரிக்கப்பட்டது. இதுகுறித்து தளவாய் போலீசார் விசாரணை மெற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் டாஸ்மாக் பார் ஏலம் மற்றும் மணல் குவாரி தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளருக்கும் இவருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    அதனால் பைக் எரிக்கப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நல்ல தம்பி வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பைக் பக்கத்தில் கார் இருந்துள்ளது.

    வந்தவர்கள் ஏன் காரை எரிக்காமல் பைக்கை எரிந்தனர் என்பதும் தெரியவில்லை. கிராமத்தில் மற்ற இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் ஏதாவது பதிவுகள் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×