search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடப்பாடி பழனிச்சாமி"

    • இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைவார்கள்
    • அப்படியா? நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. யார் உங்களுக்கு சொன்னது. வந்தால் சந்தோஷம்தான். வந்தால் சொல்லி அனுப்புகிறேன்

    கோவை மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுனன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அதில், நான் அ.தி.மு.க.வில் ராஜாவாக உள்ளேன். பா.ஜ.க.வுக்கு சென்று கூஜா தூக்க விரும்பவில்லை. நேற்று கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது.

    அ.தி.மு.க.வில் உள்ள எந்தவொரு அடிப்படை தொண்டனும் பா.ஜ.க.வில் இணைய மாட்டான். நாங்களும் சொல்வோம். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைவார்கள் என்று பேசியுள்ளார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பிய போது, "அப்படியா? நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. யார் உங்களுக்கு சொன்னது. வந்தால் சந்தோஷம்தான். வந்தால் சொல்லி அனுப்புகிறேன் என்று பதில் அளித்தார்.

    அதிமுக எம்.எல்.ஏ சொன்ன கருத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கே தெரியவில்லை என்று சொன்னது பேசு பொருளாகியுள்ளது.

    • பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் பரவியதையடுத்து இந்த பதிவை தனது X தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்
    • என் இறுதி மூச்சு உள்ளவரை அஇஅதிமுக மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன் என்பதை தெளிவு படுத்துகிறேன்

    அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது X பக்கத்தில் "என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன் ! உண்மையுடன்!" என்று பதிவிட்டு தனது பழைய பதிவை மீண்டும் பகிர்ந்துள்ளார்.

    3 வருடங்களுக்கு முன் பதிந்த அந்த பழைய பதிவில், "என் இறுதி மூச்சு உள்ளவரை அஇஅதிமுக மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன்" என்பதை தெளிவு படுத்துகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    மாஃபா பாண்டியராஜன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் பரவியதையடுத்து இந்த பதிவை தனது X தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

    • கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
    • தொகுதிகளில் வேலைகளையும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பலமான கூட்டணியை அமைக்கும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் வகையில் கட்சிகள் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

    எனவே கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். தொகுதி பங்கீடு பற்றியும் அப்போது பார்த்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    கூட்டணி அமைந்தாலும் சரி. அமையாவிட்டாலும் சரி தேர்தலை சந்திக்கும் வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    தொகுதி நிலவரம், செல்வாக்கு, தி.மு.க.வுடன் நேரடி போட்டி ஏற்பட்டா லும் வெற்றி பெறும் ஆற்றல் ஆகியவற்றை ஆராய்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது.

    இதுவரை 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டாராம். அதில் டாக்டர் ஜெயவர்தன் (தென்சென்னை), எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை), ராயபுரம் மனோ (வடசென்னை), மா.பா.பாண்டியராஜன் (விருது நகர்), செம்மலை (சேலம்), சந்திரசேகர் (கோவை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு), ராஜ்சத்யன் (மதுரை), கண்ணன் (திண்டுக்கல்), கே.பி.எம்.சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி), ராதா கிருஷ்ணன் (கள்ளக்குறிச்சி), சண்முகநாதன் அல்லது சரவண பெருமாள் (தூத்துக்குடி) உள்பட 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்து விட்டாராம்.

    தான் வேட்பாளராக முடிவு செய்திருப்பவர்களை அந்த அந்த தொகுதிகளில் தேர்தல் வேலையை தொடங்கும்படி ரகசியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

    இதையடுத்து தொகுதி களில் வேலைகளையும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    • ஆட்சி, அரசு நடைமுறைகளை பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
    • கொள்ளையடித்த பணம் துபாயில் வெள்ளையாகி கொண்டிருக்கிறது.

    முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறுகையில், கண் தெரியாதவனுக்கு கமலக்கண்ணன், நாக்கு தடுமாறுகிறவனுக்கு நாவுக்கரசன் என்று பெயர் வைப்பது போல் ஆட்சி, அரசு நடைமுறைகளை பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தெரிந்த ஒரே நிர்வாகம் எங்கு பணம் எடுப்பது, அதை யாரிடம் எப்படி கொடுப்பது போன்ற தரகு வேலை பார்ப்பது மட்டும் தான். கொள்ளையடித்த பணம் துபாயில் வெள்ளையாகி கொண்டிருக்கிறது. இது தான். விஞ்ஞான ஊழல் என்பார்கள். குங்கும பொட்டோடும், கும்பிட்ட கையோடும் உறவாட வந்து பகையாடிய துரோகிகளை தோலுரித்து தொங்கவிட்டவர் எடப்பாடி பழனிசாமி.

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவம் தான் எடப்பாடி பழனிசாமி. கசாப்புக்கடைக்காரன் காந்தியம் பேசுவது போல, இந்த அதர்மவாதிகள் எல்லாம் தர்மயுத்தம் பற்றி பேசி வருகிறார்கள். அரிசி கேட்டு எம்.ஜி.ஆரும், காவிரி நதிநீர் கேட்டு ஜெயலலிதாவும் கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாக யார் வந்தார்கள்? இப்போது மத்திய அரசிடம் நிதி வாங்க நம்ம தி.மு.க.வில் உள்ள கத்துக்குட்டிகள் எடப்படி பழனிசாமியை கூப்பிடுகிறார்கள் என்றார்.

    • காஞ்சிபுரம் மண்டலத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மேற்கு மத்திய தெற்கு கிழக்கு என 8 மாவட்டங்கள் அடங்கியுள்ளன.
    • கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எண்ணங்களுக்கு ஏற்ப சிறப்பாக பணியாற்றுவேன் என்று கார்த்திக் தெரிவித்தார்.

    திருவொற்றியூர்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணியின் காஞ்சிபுரம் மண்டல தலைவராக திருவொற்றியூரை சேர்ந்த சென்னை மாநகராட்சி மாமன்ற குழு தலைவர் டாக்டர் கே. கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்

    காஞ்சிபுரம் மண்டலத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மேற்கு மத்திய தெற்கு கிழக்கு என 8 மாவட்டங்கள் அடங்கியுள்ளன. புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் கே.கார்த்திக்கு அ.தி.மு.க தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எண்ணங்களுக்கு ஏற்ப சிறப்பாக பணியாற்றுவேன் என்று கார்த்திக் தெரிவித்தார்.

    • எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
    • டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடை பெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஓரணியில் திரளதிட்டமிட்டுள்ளனர்.

    இதன்படி எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த மாதம் 23-ந்தேதி பாட்னாவில் நடை பெற்றது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் முயற்சியால் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் எதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் மீது ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் சில கருத்துக்களை தெரிவித்தனர். குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. ஆனால் இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து மீண்டும் அடுத்த கூட்டத்தில் இது பற்றி பேசலாம் என முடிவு செய்தனர். அதன்படி அடுத்த கூட்டத்தை இமாச்சல பிரதேசத்தின் தலை நகரான சிம்லாவில் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

    ஆனால் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. ஜெய்ப்பூர் அல்லது ராய்ப்பூரில் கூட்டத்தை நடத்தலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆேலாசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்கள்.

    உடல்நிலை பாதிப்பு காரணமாக முதல் கூட்டத்தில் பங்கேற்காத சோனியாகாந்தி, இக்கூட்டத்தில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

    இதே போல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்ப வார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இது தவிர தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்து இந்திய பர்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் பங்கேற்க உள்ளன. இதற்காக இந்த கட்சிகளின் தலைவர்கள் உள்பட 24 கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த வாரம் கடிதம் எழுதி இருந்தார்.

    நமது ஜனநாயக கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடிந்ததாலும், அடுத்த பொதுத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்ள ஒருமனதான முடிவு எட்டப் பட்டதாலும் முதல் கூட்டம் வெற்றிகரமாக அமைந்தது.

    இந்த விவாதத்தை தொடர்வதும், நாம் உரு வாக்கிய ஒற்றுமையை கட்டி எழுப்புவதும், மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

    நமது நாடு சந்திக்கும் சவால்களுக்கான தீர்வுகளுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

    அதன் தொடர்ச்சியாக ஜூலை 17-ந்தேதி பெங்களூரில் நடக்கும் கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடக்கும் இரவு விருந்திலும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். கூட்டம் 18-ந்தேதி முற்பகல் 11 மணிக்கு மீண்டும் தொடங்கும். உங்கள் அனைவரையும் பெங்களூர் கூட்டததில் சந்திக்கிறேன்.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறி இருந்தார்.

    இதைத் தொடர்ந்து பெங்களூர் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய மீண்டும் ஆலோசிக்கிறார்கள். இதில் ஒருமித்த கருத்து எட்டப்படுமா? என்பது நாளை தெரிந்துவிடும்.

    இன்று சோனியாகாந்தி அளிக்கும் விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த்சோரன், சிவசேனா உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த விருந்தில் பங்கேற்காமல் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.

    பெங்களூரில் இன்று முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

    இந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து டெல்லியில் நாளை (18-ந்தேதி) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தை நடத்துகிறது.

    நாளை மாலை நடைபெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    நாளை மாலை நடை பெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இந்த கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா. கட்சிகளுக்கும் அழைப்பு வந்துள்ளது.

    அதன்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை டெல்லி செல்கிறார்.

    டெல்லியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

    இதனை ஏற்று பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க உள்ளன.

    மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி அஜித்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் அணி ஆகியவையும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர் பாக கூட்டணி கட்சிகளுடன் பாரதிய ஜனதா கட்சி முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.

    மாநிலங்களில் இருக்கும் கூட்டணி கட்சிகளை அர வணைத்து போதிய இடங்களை ஒதுக்கி தேர்தலை சந்தித்து வெற்றி பெற இக்கூட்டத்தில் வியூகம் வகுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    • அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசி இருக்கிறார்.
    • கட்சியை நம்பித்தான் எல்லோரும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கொந்தளித்து இருக்கிறார்.

    சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரையும் தவிர எல்லோரையும் கட்சியில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.

    ஆனாலும் இன்னும் சிலர் எல்லோரும் இணைந்து செயல்பட்டால் நல்லது தான அண்ணே என்று எடப்பாடி பழனிசாமி காதில் கிசுகிசுத்து உள்ளார்கள். அதை கேட்டதும் காதுக்குள் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல் ஆவேசத்தில் 'இணைப்பு, சேர்ப்பு என்று எதற்கும் இடமில்லை. அந்த விஷயங்களை அடியோடு மறந்து விடுங்கள். ஆட்களை நம்பி கட்சி இல்லை. கட்சியை நம்பித்தான் எல்லோரும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கொந்தளித்து இருக்கிறார். இதனால் ஆலோசனை சொல்லப்போய் வாங்கி கட்டியவர்கள் வாயை பொத்தி 'கப்-சிப்' என்றாகி விட்டார்களாம்.

    அதுமட்டுமல்ல அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசி இருக்கிறார். அப்போது நான் டி.வி. விவாதங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்த்து வருகிறேன். நன்றாகத்தான் வாதிடுகிறீர்கள். முக்கியமாக அ.தி.மு.க.தான் பிரதான எதிர்க்கட்சி என்பதை தினமும் திரும்ப திரும்ப மக்கள் மனதில் பதிய வைக்கும்படி பேசுங்கள் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.

    • டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி. இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • விஜயகுமார் ஐ.பி.எஸ். தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டும்.

    சென்னை:

    கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி. இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவரது தற்கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த விஜயகுமார் பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

    ஆகவே, விஜயகுமார் ஐ.பி.எஸ். தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்ன ணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்து கிறேன்.

    பா.ம.க.நிறுவனர் ராமதாஸ்:-

    போலீஸ் அதிகாரி விஜயகுமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதை நம்ப முடியவில்லை. அவரது மன அழுத்தத்திற்கான காரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.

    காவல்துறை அதிகாரி விஜயகுமாரின் தற்கொலையை அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன? என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க பா.ம.க. சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

    • எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் சாதுர்யத்தாலும் சட்ட போராட்டங்கள் நடத்தியும் கட்சியை தன்வசமாக்கினார்.
    • கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் கூட எடப்பாடி பழனிசாமி-அமித்ஷாவை சந்திக்காதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதாவை தயார்படுத்தும் வேலைகளில் அமித்ஷா தீவிரம் காட்டி வருகிறார். தமிழகத்திலும் தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதற்காக அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார்.

    தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜனதா பலவீனமாகவே இருக்கிறது. கூட்டணி பலத்தை நம்பிதான் தேர்தலை சந்திக்க வேண்டும். பா.ஜனதாவின் நெருங்கிய கூட்டாளி அ.தி.மு.க. அந்த கட்சியில் ஏற்பட்ட பிளவை சரிகட்டி கூட்டணியை பலப்படுத்த பா.ஜனதா எடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

    எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் சாதுர்யத்தாலும் சட்ட போராட்டங்கள் நடத்தியும் கட்சியை தன்வசமாக்கினார். அ.தி.மு.க. நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வந்த பா.ஜனதா மேலிடமும் எடப்பாடி பழனிசாமி தலைமையை அங்கீகரித்து அவருக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது.

    அப்படியிருந்தும் போது கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் கூட எடப்பாடி பழனிசாமி-அமித்ஷாவை சந்திக்காதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

    நேற்று இரவு அல்லது இன்று காலையில் எடப்பாடி பழனிசாமி சென்னை வருவார். அமித்ஷாவை சந்திப்பார் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் அவர் சேலத்தைவிட்டு புறப்படவில்லை. உடல்நிலை சரி இல்லாததால்தான் அவர் சேலத்தில் ஓய்வெடுக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் சேலத்தில் நேற்று காலையில் கூட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    நாளை மறுநாள் (13-ந்தேதி) நடைபெற இருக்கும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டம் முதலில் நேற்று (10-ந்தேதி) நடப்பதாகத்தான் இருந்தது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு சென்னையில் இருந்தால் அமித்ஷாவை சந்திக்க வேண்டியது வரும் என்பதற்காகவே மாவட்ட செயலாளர்கள் கூட் டத்தையும் எடப்பாடி பழனிசாமி தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது.

    கூட்டணியாக இருந்தாலும் இப்படி இந்த இரு கட்சியினரிடமும் இன்னமும் நெருக்கமான பிணைப்பு இல்லை. தேசிய கட்சியான காங்கிரஸ் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் இருப்பதைப்போல் பா.ஜனதாவும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.

    ஆனால் புதிதாக கட்சி தலைமை பொறுப்பை ஏற்றுள்ள அண்ணாமலையோ தனது தலைமையின் கீழ் கட்சி வலிமை பெற்றுள்ளது என்பதை தனித்து நின்றுகூட நிரூபித்து காட்ட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்.

    இதனால் கட்சி மேலிடத்துக்கு அவர் கொடுக்கும் அறிக்கைகள் அ.தி.மு.க. வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    பா.ஜனதாவும் தென் சென்னை, வேலூர், கோவை, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளை தேர்வு செய்து தனி கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் கேட்பது அதைவிடவும் ஒரு மடங்கு அதிகமாக உள்ளது. இந்த நிலைப்பாடும் எடப்பாடி பழனிசாமியை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    எனவே கூட்டணி, தொகுதிகள் என்பது பற்றி பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று நழுவி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பா.ஜனதா குறிவைத்துள்ள 9 தொகுதிகளில் 4 முதல் 5 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என்று அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தின் நிலைமைகளை கூர்ந்து கவனிக்கும் அமித்ஷா நேற்று தன்னை சந்திக்க வந்த முக்கியஸ்தர்களிடம் அவர்கள் கருத்தை எதிர்பார்த்துள்ளார். ஆனால் கட்சி பெரிய அளவில் வளரவில்லை என்பதை மட்டும் சிலர் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

    • பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கு.
    • புகார்தாரர் அளித்த தகவலின் பேரில் வழக்கின் சாட்சியாக ஓ.பி.எஸ். சேர்க்கப்பட்டார்.

    கடந்த 2021 ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டார். அப்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை மறைத்து இருந்ததாக கூறி, தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி புகார் அளித்து இருந்தார்.

    எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் கையொப்பம் இட்டிருந்தார். இதன் காரணமாக வழக்கில் சாட்சியாக ஓபிஎஸ் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

    தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் சாட்சியாக சேர்க்கப்பட்டு இருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொளுளாகி இருக்கிறது.

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் பாடுபடுவோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்தநாள் விழாவையொட்டி எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாபுரம் தோட்டத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர் வாய் பேச முடியாதோர் பள்ளி குழந்தைகளுக்கு தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி மற்றும் 137-வது தெற்கு வட்ட செயலாளர் சி.பழனி, விருகை இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் இணைச் செயலாளர் டி. வெற்றிவேல் ஆகியோரின் ஏற்பாட்டில் கேக் வெட்டி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவற்றை விருகை வி.என். ரவி வழங்கினார்.

    விழாவில் மாவட்ட செயலாளர் விருகை வி. என். ரவி தலைமையில் வருகிற சட்ட மன்ற தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் பாடுபடுவோம்.

    மீண்டும் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்பார் என்று உறுதி கொண்டு தீவிர களப்பணியாற்றுவோம் என்று சபதம் ஏற்றனர்.

    பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கே.ஜெகநாதன், விருகை வடக்கு பகுதி பொருளாளர் எஸ்.விநாயக மூர்த்தி, அம்மா பேரவை பகுதி செயலாளர் ஜி.சுரேஷ், அமைப்புசாரா ஓட்டுனர் அணி பகுதி செயலாளர் என்.ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
    • சிவசர்மிளா கருனை இல்லத்திற்கு டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க., பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு பூஜைகள் செய்தும் நலத்திட்ட உதவிகள் அன்னதானம், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தலைமையில் அவைத் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் பகுதி செயலாளர் கண்ணப்பன் ஏற்பாட்டின் பெயரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு பட்டத்தரசி அம்மன் கோவிலில்ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு டேபிள் மற்றும் சேர் வழங்குதல் வழங்கப்பட்டது. பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து திருமுருகன் பூண்டி,பெரி யாயிபாளையம், சிவசர்மிளா கருனை இல்லத்திற்கு டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கவுன்சிலர் கண்ணப்பன், மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீத சந்திரசேகர், பகுதி செயலாளர் கருணாகரன், ஹரிஹரசுதன், கே.பி.ஜி. மகேஷ்ராம், கேசவன், குமார், தொழிற்சங்க செயலாளர் கண்ண பிரான், வக்கீல் அணி செய லாளர் முருகேசன், நிர்வாகிகள் உஷா ரவிக்குமார், ஆண்டவர் பழனிச்சாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×