search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஐஜி விஜயகுமார்"

    • டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் துறையில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • யூடியூப் சேனலில் டிஐஜி விஜயகுமார் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட 2 யூடியூபர்கள் இன்று விசாரணைக்கு ஆஜராகினர்.

    கோவை:

    கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார்.

    இவர் கடந்த 7-ந் தேதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் துறையில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்கள் பதிவு செய்த 8 பேருக்கு மாநகர போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளித்திருந்தனர்.

    இதில் யூடியூப் சேனலில் டிஐஜி விஜயகுமார் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட 2 யூடியூபர்கள் இன்று விசாரணைக்கு ஆஜராகினர். அவர்கள் 2 பேரிடமும் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • கருத்து கூறியவர்கள், அதை வெளியிட்ட சமூக ஊடகங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டனர்.

    கோவை:

    கோவை சரக டி.ஐ.ஜியாக வேலை பார்த்தவர் விஜயகுமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் போலீஸ் துறையில் உள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

    டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், அவரது வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் சிலர் தங்களது கருத்துக்களையும் பதிவு செய்தனர். சிலர் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், போலீசார் டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள், கருத்து கூறியவர்கள், அதை வெளியிட்ட சமூக ஊடகங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டனர்.

    அதன்படி சில நாட்களுக்கு முன்பு, டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள், சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் என 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் இவர்கள் அனைவரும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கோவை போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

    அப்படி அவர்கள் ஆஜராகும்பட்சத்தில் அவர்களிடம் டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் எந்தவித ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது. யார் அதனை தெரிவித்தது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    • சப்-இன்ஸ்பெக்டருக்கு கீழ் வரும் எஸ்.எஸ்.ஐ. காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு கொடுக்கப்படுகிறது.
    • உடல் பாதிப்பு பிரச்சினைகள் என்றால் சுய மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது.

    கோவை:

    கோவையில் நேற்று டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி அருண், நேற்று கோவை வந்தார். தொடர்ந்து டி.ஐ.ஜி. உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று கோவை சரக போலீஸ் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள், போலீஸ் துறையின் செயல்பாடுகள், களத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என அனைவருக்கும் யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி, உள்பட பல்வேறு மனநல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு இதுவரை அதுபோன்ற பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. எனவே அதுபோன்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் மன நல பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்தனர்.

    மேலும் சப்-இன்ஸ்பெக்டருக்கு கீழ் வரும் எஸ்.எஸ்.ஐ. காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வகையிலும் அனைத்து போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கும் அதேபோன்று ஒரு நாள் விடுமுறை விடலாமா? என்பது குறித்து ஆலோசித்தனர்.

    இதுதவிர போலீசார் மற்றும் அதிகாரிகளின் மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில், மன நல டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் சில, பல கேள்விகளை உருவாக்கி, போலீஸ் துறையில் உள்ள அதிகாரிகளுக்கு தேர்வு போன்று நடத்தலாம் என்றும், அப்படி செய்தால், அவர்களின் மனநிலை பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    உடல் பாதிப்பு பிரச்சினைகள் என்றால் சுய மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது, மருத்துவர்களின் ஆலோசனை பெற்றே மருந்துகள் உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் கோவை சரக டி.ஐ.ஜி தற்கொலை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதித்துள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு, திருப்பூர் சூப்பிரண்டு சாமிநாதன், கோவை சூப்பிரண்டு பத்ரி நாராயணன், ஈரோடு சூப்பிரண்டு ஜவகர், நீலகிரி சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் 6 துணை கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பிறகு தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமாரின் உருவப்படத்திற்கு கூடுதல் டி.ஜி.பி. அருண், தலைமையிலான அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • பிறந்தநாள் விழா முடிந்ததும் டி.ஐ.ஜி. விஜயகுமார் இரவிலேயே முகாம் அலுவலகத்துக்கு திரும்பி இருக்கிறார்
    • டி.ஐ.ஜி. சில நாட்களாகவே தற்கொலை எண்ணத்துடன் இருந்தது தெரியவந்துள்ளது.

    கோவையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய விஜயகுமார் நேற்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடைசியாக அவர் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் அவர் மிகவும் அமைதியுடன் காணப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மற்ற போலீஸ்அதிகாரிகள் அவரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் அவர்களிடம் எந்த பிரச்சினையும் இல்லை என கூறி இருக்கிறார்.

    பிறந்தநாள் விழா முடிந்ததும் டி.ஐ.ஜி. விஜயகுமார் இரவிலேயே முகாம் அலுவலகத்துக்கு திரும்பி இருக்கிறார். அப்போது தனது பாதுகாவலரிடம் நீ பயன்படுத்தும் துப்பாக்கியை எங்கே வைப்பாய், குண்டு நிரப்பி வைப்பாயா? என்பது போன்ற கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு பாதுகாவலரும் விளக்கம் அளித்துள்ளார். அதன்பிறகு விஜயகுமார் தனது அறைக்கு சென்று ஓய்வெடுத்திருக்கிறார்.

    நேற்று காலை விழித்தெழுந்து வந்து பாதுகாவலர் பயன்படுத்தும் துப்பாக்கியை எடுத்து தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் டி.ஐ.ஜி. சில நாட்களாகவே தற்கொலை எண்ணத்துடன் இருந்தது தெரியவந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யும் நோக்கிலேயே பாதுகாவலரிடம் துப்பாக்கி பற்றி விசாரித்ததும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடக்கிறது.

    • டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
    • 2024 மக்களவை தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை அ.தி.மு.க. தொடங்கி விட்டது.

    தூத்துக்குடி:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் சென்னை செல்வதற்காக தூத்துக்குடி வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளது வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் காவலர் நலவாழ்வு திட்டம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மன அழுத்தம் உள்ள காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனால் அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டனர். ஆனால் அந்த காவலர் நலவாழ்வு திட்டத்தை தற்போதைய தி.மு.க. அரசு நிறுத்தி விட்டதாக தெரிகிறது.

    அந்த திட்டம் இருந்திருந்தால் தற்போதைய டி.ஐ.ஜி. தற்கொலை ஏற்பட்டிருக்காது. டி.ஐ.ஜி. தற்கொலை பற்றி அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவை. காவலர் குடும்பத்திலும் மன அழுத்தம் இல்லை. அவருக்கும் மன அழுத்தம் இல்லை என தெரிகிறது. எனவே அவரது இறப்பு தற்கொலையா என விசாரிக்க வேண்டும்.

    தற்போதைய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஊழல் பற்றி பேச தகுதி இல்லை. அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஊழல் வழக்கு உள்ள அவர் ஊழல் தடுப்பு பிரிவை கண்காணித்து வருகிறார். இது எப்படி சரியாக இருக்கும்.

    தி.மு.க.வின் தற்போதைய அமைச்சர்கள் 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்குகளில் தற்போதைய தி.மு.க. வக்கீல்கள் சரியான வாதங்களை எடுத்து வைக்காததால் அவர்கள் விடுதலையாகி வருகிறார்கள்.

    தி.மு.க. அமைச்சர்கள் பாதி பேர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு பயந்து போய் உள்ளனர். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2016-ம் ஆண்டு முதல் நான் கோவை சரக டி.ஐ.ஜி.க்கு தனி பாதுகாப்பு காவலராக இருந்து வருகிறேன்.
    • ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, டி.ஐ.ஜி. இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    கோவை:

    கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார் (வயது 45). இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி.

    விஜயகுமார் கோவை டி.ஐ.ஜி. அலுவலகம் அருகே உள்ள முகாம் அலுவலகத்திலேயே (வீடு) குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

    நேற்று காலை காலை 6 மணி அளவில் தனது வீட்டில் இருந்த டி.ஐ.ஜி விஜயகுமார், அறையை விட்டு வெளியில் வந்தார். அங்கிருந்த தனது பாதுகாவலரான ரவிச்சந்திரனிடம் கைத்துப்பாக்கியை வாங்கி கொண்டு வீட்டிற்குள் சென்றவர் திடீரென தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்து அதிர்ச்சியான பாதுகாவலர் சக போலீசார் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சியாகினர். டி.ஐ.ஜி. விஜயகுமாரின் மனைவி கதறி அழுதார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகளும் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊரான தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அங்கு அவரது உடலுக்கு டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், டி.ஐ.ஜி. விஜயகுமார் 2 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்ததும், இதற்காக சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. மேலும் மன அழுத்தம் காரணமாகவே அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மன அழுத்தத்தால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பாதுகாவலரான ரவிச்சந்திரன், டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் புகார் அளித்துள்ள போலீஸ்காரர் ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது:-

    எனது பெயர் ரவிச்சந்திரன். நான் கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தேன். ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறேன்.

    கடந்த 2016-ம் ஆண்டு முதல் நான் கோவை சரக டி.ஐ.ஜி.க்கு தனி பாதுகாப்பு காவலராக இருந்து வருகிறேன். இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக எனக்கு கோவை மாவட்ட ஆயுதப்படையில் இருந்து, 183 என்ற 9 எம்.எம் ரக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டது.

    எனக்கு டி.ஐ.ஜி. முகாம் அலுவலகத்தில் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நான் தங்கி இருந்து பணியாற்றி வருகிறேன்.

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் டி.ஐ.ஜி விஜயகுமார் இங்கு வந்தார். அவர் வந்த நாளில் இருந்தே தனக்கு தூக்கம் வரவில்லை. அதனால் மாத்திரை எடுத்து கொள்கிறேன் என்று தெரிவிப்பார். தினமும் தூக்கத்திற்காக மாத்திரை எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

    கடந்த 6-ந் தேதி நான் முகாம் அலுவலகத்தில் இருந்தேன். அப்போது டி.ஐ.ஜி. குடும்பத்துடன் வெளியில் சென்றார். பாதுகாப்புக்காக நாங்களும் சென்றோம். பின்னர் இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டோம். இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. வீட்டிற்குள் சென்று ஓய்வெடுத்தார்.

    வழக்கமாக டி.ஐ.ஜி விஜயகுமார் தினமும் காலை 7 மணிக்கு அலுவலகத்தில் உள்ள டி.எஸ்.ஆர் அறைக்கு வந்து டி.எஸ்.ஆரை (தினமும் பதிவாகும் வழக்கு விவரங்கள்) பார்ப்பது வழக்கம்.

    ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக காலை 6.30 மணிக்கெல்லாம் டி.எஸ்.ஆர். அலுவலகத்திற்கு வந்து விட்டார். அப்போது முகாம் அலுவலகத்தில் இருந்த ரவிவர்மா என்பவரிடம் பால் கேட்டார். அவரும் பால் காய்ச்சி கொடுக்கவே அதனை அவர் குடித்தார்.

    இதைபார்த்த நான் டி.எஸ்.ஆரை எடுத்து கொண்டு அவரிடம் செல்ல முயன்றேன். ஆனால் அதற்குள்ளாகவே சரியாக 6.40 மணிக்கெல்லாம் அவரே டி.எஸ்.ஆர் கேட்டு நான் தங்கியிருக்கும் அறைக்கு வந்து விட்டார்.

    அங்கு வந்தவர் ரவிச்சந்திரன் டி.எஸ்.ஆர் எங்கே கொடுங்கள், பார்ப்போம் என கேட்டார். நானும் அதனை கொடுக்க, அதனை வாங்கி பார்த்தார். பின்னர் நான் பயன்படுத்தும் துப்பாக்கி வைத்திருந்த இடத்துக்கு டி.ஐ.ஜி. சென்றார்.

    அங்கு சென்றவர் அந்த துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு சிறிது நேரம் அதனை பார்த்தார். அதனை பார்த்து விட்டு இந்த துப்பாக்கியை எப்படி பயன்படுத்த வேண்டும் என என்னிடம் கேட்டார்.

    நான் சொல்லி கொண்டு இருந்த போதே துப்பாக்கியுடன் அவர் வெளியில் சென்று விட்டார். உடனே நான் டி-சர்ட் அணிந்து கொண்டு வெளியில் வர முயன்றேன். அதற்குள் வெளியே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நானும், என்னுடன் இருந்த டிரைவர் அன்பழகனும் ஓடி வந்து பார்த்தோம். அப்போது டி.ஐ.ஜி. மல்லாந்த நிலையில் தலையில் ரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். என்னிடம் இருந்து எடுத்து சென்ற துப்பாக்கி அவரின் அருகிலேயே கிடந்தது.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான நாங்கள் இதனை அவரது மனைவியிடம் தெரிவிக்க சத்தம் போட்டு கொண்டே ஓடினோம். எங்களது சத்தம் கேட்டு, அவரும் ஓடி வந்து என்ன என்று கேட்டார். நாங்கள் நடந்தவற்றை தெரிவிக்க உடனடியாக அனைவரும் சேர்ந்து, முகாம் அலுவலகத்தில் இருந்து ஒரு காரில் உயிருக்கு போராடிய டி.ஐ.ஜியை தூக்கிக்கொண்டு காலை 7 மணியளவில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றோம்.

    செல்லும் வழியிலேயே இதுபற்றிய தகவலை உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டேன். ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, டி.ஐ.ஜி. இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அவர் சுட்டு கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவை சரகத்திற்கு வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என்று டி.ஐ.ஜி. மாத்திரை எடுத்துக்கொள்வார்.
    • காலை 6.40 மணியளவில் பாலை குடித்துவிட்டு எனது அறைக்கு டி.ஐ.ஜி. வந்து DSR-ஐ பார்த்தார்.

    சென்னை:

    கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டது தொடர்பான எப்.ஐ.ஆர். வெளியிடப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி. தற்கொலை குறித்து தகவல்களை ஆயுதப்படை முதல்நிலைக் காவலர் ரவிச்சந்திரன் பதிவு செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

    டி.ஐ.ஜி.யின் முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தேன். கோவை சரகத்திற்கு வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என்று டி.ஐ.ஜி. மாத்திரை எடுத்துக்கொள்வார்.

    DSR பார்ப்பதற்காக 7ம் தேதி காலை 6.30 மணிக்கு டி.ஐ.ஜி. வந்தார். அலுவலில் இருந்த காவலர் ரவிவர்மாவிடம் டி.ஐ.ஜி. விஜயகுமார் குடிப்பதற்கு பால் கேட்டார்.

    காலை 6.40 மணியளவில் பாலை குடித்துவிட்டு எனது அறைக்கு டி.ஐ.ஜி. வந்து DSR-ஐ பார்த்தார். எனது துப்பாக்கியை கையில் எடுத்த டி.ஐ.ஜி. எப்படி பயன்படுத்துவது என்று கேட்டுக்கொண்டே வெளியில் சென்றார்.

    நான் வெளியே வருவதற்குள் வெடிச்சத்தம் கேட்டது. தலையில் ரத்த காயத்துடன் மல்லாந்த நிலையில் டி.ஐ.ஜி. கீழே விழுந்து கிடந்தார்.

    கோவை அரசு மருத்துவமனைக்கு டி.ஐ.ஜி.-ஐ கொண்டு சென்றோம். டி.ஐ.ஜி ஏற்கனவே இறந்துவிட்டாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறினர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டிஐஜி விஜயகுமார் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
    • அரசியல் பிரமுகர்கள் , காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    தேனி:

    கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் (45), இன்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்த ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல் தேனி ரத்தினம் நகரில் வசிக்கும் அவரது பெற்றோர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்நிலையில், தேனி ரத்னம் நகரில் டிஐஜி விஜயகுமார் உடலுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மற்றும் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார். அரசியல் பிரமுகர்கள் , காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    • கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.விஜயகுமார் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
    • இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றியவர் விஜயகுமார். 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற இவர் சென்னை அண்ணாநகரில் துணை கமிஷனராக பணியாற்றினார். அப்போதுதான் பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜி. ஆனார். கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி கோவையில் பதவியேற்று பணியில் ஈடுபட்டு வந்தார்.

    டி.ஐ.ஜி. அலுவலகம் கோவை ரேஸ்கோர்ஸ் ரெட்பீல்டு பகுதியில் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் முகாம் அலுவலகமும் (வீடு) உள்ளது. இங்குதான் டி.ஐ.ஜி. விஜயகுமார் தனது குடும்பத்தினருடனேயே தங்கி இருந்தார். இவர் இன்று காலை நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டார்.


    இது தொடர்பான விசாரணையில் டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் விஷால், டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது வருத்தமளிக்கிறது. இது அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சியான செய்தி. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நான் அவரை பல முறை சந்தித்துள்ளேன். அவரது கடைசி முடிவு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    டி.ஐ.ஜி. விஜயகுமார் இறுதிச்சடங்குகள் தேனியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார்.
    • திருவள்ளூரில் துணை கமிஷனராக பணியாற்றி இருக்கிறார்.

    கோவை:

    கோவை சரக டி.ஐ.ஜி.யாக பதவி வகித்து வந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமார் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

    இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றினார். அப்போது அங்கு கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் தொடங்கியுள்ளது. அங்கும் அவர் சிறப்பான பணியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    பின்னர் திருவள்ளூரில் துணை கமிஷனராக பணியாற்றி இருக்கிறார்.

    தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் சென்னை சி.பி.சி.ஐ.டி., திருவாரூர் போன்ற இடங்களிலும் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் நீட் தேர்வு மோசடி மற்றும் சிவசங்கர் பாபா வழக்குகளில் சிறப்பு விசாரணையும் நடத்தியுள்ளார்.

    சென்னையில் அண்ணா நகர் துணை கமிஷனராக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த ஜனவரி மாதம் தான் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி கோவை சரக டி.ஐ.ஜி.யாக பதவியேற்றதும் குறிப்பிடத்தக்கது.

    • டி.ஐ.ஜி.விஜயகுமார் உடல், அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் வசந்தம் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
    • டி.ஜி.பி. சங்கர்ஜூவால் சென்னையில் இருந்து தேனி மாவட்டம் அரண்மனைப்புதூருக்கு விரைகிறார்.

    சென்னை:

    கோவை முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    தகவல் அறிந்ததும் விஜயகுமாரின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

    அங்கு உடற்கூராய்வு டாக்டர் பாலா தலைமையில் 4 மருத்துவர்கள் டி.ஐ.ஜியின் உடலை உடற்கூராய்வு செய்தனர். காலை 10.36 மணிக்கு தொடங்கிய உடற்கூராய்வானது காலை 11 மணிக்கு முடிந்தது.

    அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை அறை முன்பு போலீஸ் சார்பில் டி.ஐ.ஜி. விஜயகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அவரது உடல் முன்பு அவர் அணிந்திருந்த போலீஸ் சீருடை மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

    இதில் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அருண் ஆகியோர் விஜயகுமார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஐ.ஜி.சுதாகர், கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பத்ரிநாராயணன், திருப்பூர் எஸ்.பி.சாமிநாதன், நீலகிரி எஸ்.பி.பிரபாகர், ஈரோடு எஸ்.பி. ஜவஹர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் டி.ஐ.ஜி உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல், காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டது.

    டி.ஐ.ஜி.விஜயகுமார் உடல் கார் மூலமாக, அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் வசந்தம் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி விஜயகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும், இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும் டி.ஜி.பி. சங்கர்ஜூவால் சென்னையில் இருந்து தேனி மாவட்டம் அரண்மனைப்புதூருக்கு விரைகிறார்.

    அங்கு அவர் விஜயகுமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். இதுதவிர அவருடன் பணியாற்றிய சக போலீஸ்காரர்கள், உறவினர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    அதன்பின்னர் அவரது உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    • மன உளைச்சல் காரணமாக டி.ஐ.ஜி. விஜயகுமார் வீட்டிலேயே முடங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
    • பிறந்தநாள் விழாவில் டி.ஐ.ஜி. விஜயகுமார் பங்கேற்று துணை கமிஷனர் மகனுக்கு பரிசுப்பொருள் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    டி.ஐ.ஜி. விஜயகுமார் தான் தங்கியிருக்கும் முகாம் அலுவலகத்தில் தினமும் அதிகாலை வேளையில் நடைபயிற்சி செய்வது வழக்கம்.

    ஆனால் கடந்த 3 நாட்களாக அவர் நடைபயிற்சி செய்வதை தவிர்த்துள்ளார். மன உளைச்சல் காரணமாக அவர் வீட்டிலேயே முடங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலையும் அவர் நடைபயிற்சி செய்யாமல் இருந்துள்ளார்.

    டி.ஐ.ஜி. விஜயகுமார் நேற்று மாலை கோவையில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். இது தான் அவர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியாகும்.

    கோவை மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றும் சந்தீசின் மகன் பிறந்தநாள் விழா நேற்று மாலை நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி பிறந்தநாள் விழாவில் டி.ஐ.ஜி. விஜயகுமார் பங்கேற்று துணை கமிஷனர் மகனுக்கு பரிசுப்பொருள் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    விழாவில் அவர் அமைதியாக, இறுக்கமான மனநிலையிலேயே இருந்ததாக பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்தே இன்று காலை டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    ×