search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்பாளர்கள்"

    • மொத்தம் 290 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவற்றில் 86 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
    • வேட்பாளர்களில் 25 பேர் பெண்கள், 169 பேர் ஆண்கள் ஆவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி முடிவடைந்தது.

    மொத்தம் 290 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவற்றில் 86 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 10 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    திருவனந்தபுரம் தொகுதியில் 12 பேர், அட்டிங்கல் தொகுதியில் 7பேர், கொல்லம் தொகுதியில் 12 பேர், பத்தினம்திட்டா தொகுதியில் 8 பேர், மாவேலிக்கரை தொகுதி யில் 9 பேர், ஆலப்புழா தொகுதியில் 11 பேர், கோட்டயம் தொகுதியில் 14 பேர், இடுக்கி தொகுதியில் 7 பேர், எர்ணாகுளம் தொகுதியில் 10 பேர், திருச்சூர் தொகுதியில் 9பேர், சாலக்குடி தொகுதி யில் 11பேர், ஆலத்தூர் தொகுதியில் 5 பேர், பாலக்காடு தொகுதியில் 11 பேர், பொன்னானி மற்றும் மலப்புரம் தொகுதியில் 8பேர், கோழிக்கோடு தொகுதியில் 13 பேர், வயநாடு தொகுதியில் 9பேர், வடகரா தொகுதியில் 10 பேர், கண்ணூர் தொகுதியில் 12 பேர், காசர்கோடு தொகுதியில் 9 பேர் என 20 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர்.

    வேட்பாளர்களில் 25 பேர் பெண்கள், 169 பேர் ஆண்கள் ஆவர். வடகரா தொகுதியில் 4 பெண்கள் போட்டியிடுகின்றனர். பத்தினம்திட்டா, மாவேலிக்கரை, கோட்டயம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய 6 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை.

    கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சி சோசியலிஸ்ட் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.

    இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் (எம்) ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா 16 தொகுதிகளிலும், பி.டி.ஜே.எஸ். 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.


    அனைத்து தொகுதிகளிலுமே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இதனால் கேரளாவில் மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் முடிந்ததில் இருந்து தீவிர பிரச்சாரத்தில் குதித்தனர். அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை ஆதரித்து கேரள மாநில தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்கள் மற்றும் பிற மாநில தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தங்களின் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

    கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்தது. இந்த நிலையில் கேரள மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இதனால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் இறுதி கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், ஓட்டுப் பதிவு வருகிற 26-ந்தேதி நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவுக்காக 25 ஆயிரத்து 177 வாக்குச்சாவடிகளும், 181 கூடுதல் வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

    கேரள மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 49ஆயிரத்து 159 பேர் ஆவர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 1 கோடியே 34லட்சத்து 15ஆயிரத்து 293 பேர், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 43 லட்சத்து 33ஆயிரத்து 499 பேர், மூன்றாம் பாலினத்தினர் 367 பேர்.

    வாக்காளர்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 லட்சத்து 27 ஆயிரத்து 045பேரும், முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் 5 லட்சத்து 34 ஆயிரத்து 394 பேரும் உள்ளனர். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் 89 ஆயிரத்து 839 பேர்.

    கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா, திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. சுரேஷ் கோபி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இவர்கள் போட்டியிடுவதால் இந்த தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக மாறியுள்ளன. இதனால் வயநாடு, திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய 3 தொகுதிகளின் முடிவு அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • தபால் வாக்களிக்க ஏதுவாக வருகிற 15-ந் தேதி சீலிடப்பட்ட தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியை ஆசிரியர்களுக்கு கடந்த 7-ந் தேதி நடந்த 2-ம் கட்ட பயிற்சியின் போது தபால் வாக்குப்பதிவு நடந்தது. இதில் அவர்கள் தங்களது வாக்கினை தபால் மூலமாக ஓட்டு பெட்டியில் போட்டனர்.

    இதனைத்தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் சீருடை பணியாளர்களான ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) தபால் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,

    பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடும் 2,050 போலீசாருக்கு ஏற்கனவே தபால் வாக்களிக்கும் படிவம் வழங்கப்பட்டு அவர்கள் தொகுதிக்கான வேட்பாளரின் பெயர், சின்னங்கள் அடங்கிய பேலட் பேப்பரும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதில் போலீசார்களுக்கான தபால் வாக்களிக்க ஏதுவாக வருகிற 15-ந் தேதி சீலிடப்பட்ட தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. அதில் மாவட்டத்தில் உள்ள போலீசார் தங்களது தபால் வாக்கினை செலுத்த உள்ளனர். தபால் வாக்களிக்க ஈரோட்டில் வேளாளர் கல்லூரி, கோபியில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதி செய்தால் முறைப்படி அனைத்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்படும். இது தவிர பிற தொகுதிகளில் வாக்குரிமை உடைய போலீஸ் அதிகாரிகள் நேரடியாக தபால் மூலமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வேட்பாளர்களின் பொருளாதார பின்னணியை பொறுத்தவரை 945 பேரில், 202 பேர் அதாவது 21 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.
    • காங்கிரஸ் சார்பில் 78 சதவீதம் குற்ற வழக்குகள், 22 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே 4 முனைப் போட்டி நிலவுகிறது.

    இவர்களுடன் கணிசமான அளவுக்கு வழக்கம் போல சுயேட்சை வேட்பாளர்களும் உள்ளனர். இந்த வேட்பாளர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவ்வளவு எளிதில் வாக்காளர்களால் கண்டுபிடித்து விட முடியாது.

    அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஜனநாயக சீர்திருத்தக் கழகம் தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களை மிக நுட்பமாக ஆய்வு செய்துள்ளது. மொத்தம் களத்தில் உள்ள 950 வேட்பாளர்களில் 945 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    இதில், 135 வேட்பாளர்கள் அதாவது 15 சதவீதம் பேர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களாக உள்ளனர். இவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதை அந்த வேட்பாளர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதை அவர்கள் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளனர்.

    இந்த 15 சதவீத குற்றவாளிகளில் 81 பேர் மிக கடுமையான குற்றவாளிகள். அதாவது இவர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. இது மொத்த வேட்பாளர்களில் 8 சதவீதம் ஆகும்.

    இந்த கடுமையான குற்றவாளிகள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். கட்சி வாரியாக குற்றவாளி வேட்பாளர்களை ஆய்வு செய்த போது பல ருசிகர தகவல்கள் கிடைத்தன.

    அந்த வகையில், நாம் தமிழர் கட்சியில் 28 சதவீதம் குற்ற வழக்குகள், 15 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்டவர்களும், அ.தி.மு.க. சார்பில் 35 சதவீதம் குற்ற வழக்குகள், 18 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்டவர்களும் களத்தில் உள்ளனர்.

    பா.ஜ.க. சார்பில் 70 சதவீதம் குற்ற வழக்குகள், 39 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், தி.மு.க. சார்பில் 59 சதவீதம் குற்ற வழக்குகள், 27 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், பா.ம.க. சார்பில் 60 சதவீதம் குற்ற வழக்குகள், 40 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், காங்கிரஸ் சார்பில் 78 சதவீதம் குற்ற வழக்குகள், 22 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    வேட்பாளர்களின் பொருளாதார பின்னணியை பொறுத்தவரை 945 பேரில், 202 பேர் அதாவது 21 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.

    அ.தி.மு.க.வின் 34 வேட்பாளர்களில் 33 பேரும், பா.ஜ.க.வின் 23 வேட்பாளர்களில் 22 பேரும், தி.மு.க.வின் 22 வேட்பாளர்களில் 21 பேரும், நாம் தமிழர் கட்சியின் 39 வேட்பாளர்களில் 15 பேரும், காங்கிரஸ் கட்சியின் 9 பேரில் 8 பேரும், தே.மு.தி.க.வின் 5 பேரில் 3 பேரும், சுயேச்சைகள் 606 பேரில் 62 பேரும் கோடீஸ்வரர்கள்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். இவர்களில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமார் ரூ.662.47 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    சிவகங்கை தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் ரூ.304.92 கோடி சொத்துக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். வேலூர் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் ரூ.152.77 கோடி சொத்துக்களுடன் 3-வது இடத்தில் இருக்கிறார்.

    சுயேட்சை வேட்பாளர்கள் 606 பேரில் 62 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். வடசென்னை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் ரூ.13.15 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

    சுயேட்சைகளில் 10 வேட்பாளர்கள் தங்களிடம் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவே சொத்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுக்கு எந்த சொத்தும் இல்லை என்று மனுவில் தெரிவித்துள்ளனர். குறைவான சொத்து உள்ளதாக 3 சுயேச்சைகள் தெரிவித்து உள்ளனர்.

    42 சதவீத வேட்பாளர்கள் 5 முதல்12-ம் வகுப்பு வரை படித்தவர்களாகவும், 48 சதவீதம் பட்டதாரிகளாகவும் உள்ளனர். மேலும், 25 முதல் 40 வயதுக்குட்பட்ட வேட்பாளர்கள் 325 பேர், அதா வது 34 சதவீதமும், 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 487 பேர், அதாவது 52 சதவீதமும் உள்ளனர். 130 பேர் 61 முதல் 80 வயதுக்குள் உள்ளனர். 945 வேட்பாளர்களில் 8 சதவீதம் அதாவது 77 பேர் பெண் வேட்பாளர்கள்.

    • கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே தாக்கல்.

    நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    தேர்தல் செலவு கணக்குகளை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கணக்கு தாக்கல் செய்ய தவறினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே செலவு கணக்கை முழுமையாக தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • நாளை 120 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்ப்பு.

    பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் 3வது மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடங்கியது.

    இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் எஞ்சியுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

    நாளை 120 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
    • வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    சென்னை:

    தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.

    வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட (ஆர்.டி.சி.) அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி தென் சென்னைக்கு அடையாறிலும், வடசென்னைக்கு மூலகொத்தலம் மாநகராட்சி அலுவலகத்திலும், மத்திய சென்னைக்கு செனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் டெபாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். அத்துடன் அதற்குரிய ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

    அதோடு படிவம் 26-ல் பிரமாண வாக்கு மூலத்தில் எல்லா காலங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிரமாண வாக்குமூலம் 20 ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும்.

    வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வழங்க வேண்டும். போட்டோவில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது.

    இது தவிர அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி வேட்பாளர்கள் என்றால் ஒரு முகவராலும், இதர வேட்பாளர்கள் 10 முகவராலும் முன்மொழிய பட வேண்டும்.

    முன்மொழிபவர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் வேறு பாராளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் தேர்தல் கமிஷனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோருவதற்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடத்தில் இருந்து படிவம் ஏ மற்றும் பி சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் வரையிலும், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
    • பதோஹி மக்களவைத் தொகுதியை திரிணாமுல் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி வழங்கியது.

    மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.

    அதன்படி, யஷ்வீர் சிங் (பிஜ்னோர்), மனோஜ் குமார் (நாகினா), பானு பிரதாப் சிங் (மீரட்), பிஜேந்திர சிங் (அலிகார்), ஜஸ்வீர் வால்மீகி (ஹத்ராஸ்) மற்றும் தரோகா சரோஜ் (லால்கஞ்ச்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    பதோஹி மக்களவைத் தொகுதியை திரிணாமுல் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரம் தொகுதியை தங்களுக்கே தரவேண்டும் என்று தினகரன் வலியுறுத்தி உள்ளதாக தெரிய வந்து உள்ளது.
    • வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

    சென்னை:

    பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இடம் பெற்றுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டி.டி.வி.தினகரன் எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அனைத்து தொகுதிகளிலும் அவரது கட்சிக்கு தோல்வியே கிடைத்தது.

    இந்த தடவை பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்று கணிசமான வாக்குகள் பெற வேண்டும் என்பதில் டி.டி.வி.தினகரன் உறுதியாக உள்ளார். இதற்காக அவர் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் பா.ஜ.க.விடம் கொடுத்துள்ளார்.

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் இருந்து 22 தொகுதிகளை குறிப்பிட்டு அவர் பட்டியல் தயாரித்து கொடுத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த 22 தொகுதிகளில் இருந்து அ.ம.மு.க.வுக்குரிய 2 அல்லது 3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


    டி.டி.வி.தினகரன் தரப்பில் இருந்து தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகள் கேட்கப்பட்டு உள்ளன. ராமநாதபுரம் தொகுதியை தங்களுக்கே தரவேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளதாக தெரிய வந்து உள்ளது.

    மற்றொரு தொகுதியாக தேனி அல்லது சிவகங்கையை கேட்டுள்ளார். இந்த தொகுதிகளில் தனது தீவிர ஆதரவாளர்களை களம் இறக்க டி.டி.வி.தினகரன் திட்டமிட்டு இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கும் டி.டி.வி.தினகரன் இந்த தடவை பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட்டாலும் தனது வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

    • கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
    • தொகுதிகளில் வேலைகளையும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பலமான கூட்டணியை அமைக்கும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் வகையில் கட்சிகள் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

    எனவே கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். தொகுதி பங்கீடு பற்றியும் அப்போது பார்த்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    கூட்டணி அமைந்தாலும் சரி. அமையாவிட்டாலும் சரி தேர்தலை சந்திக்கும் வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    தொகுதி நிலவரம், செல்வாக்கு, தி.மு.க.வுடன் நேரடி போட்டி ஏற்பட்டா லும் வெற்றி பெறும் ஆற்றல் ஆகியவற்றை ஆராய்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது.

    இதுவரை 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டாராம். அதில் டாக்டர் ஜெயவர்தன் (தென்சென்னை), எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை), ராயபுரம் மனோ (வடசென்னை), மா.பா.பாண்டியராஜன் (விருது நகர்), செம்மலை (சேலம்), சந்திரசேகர் (கோவை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு), ராஜ்சத்யன் (மதுரை), கண்ணன் (திண்டுக்கல்), கே.பி.எம்.சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி), ராதா கிருஷ்ணன் (கள்ளக்குறிச்சி), சண்முகநாதன் அல்லது சரவண பெருமாள் (தூத்துக்குடி) உள்பட 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்து விட்டாராம்.

    தான் வேட்பாளராக முடிவு செய்திருப்பவர்களை அந்த அந்த தொகுதிகளில் தேர்தல் வேலையை தொடங்கும்படி ரகசியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

    இதையடுத்து தொகுதி களில் வேலைகளையும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    • தேர்தலில் இக்கட்சிகளை 360 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • எம்.ஐ.எம். கட்சியின் 12 வேட்பாளர்களில் 6 பேருக்கு குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், இந்த தேர்தலில் இக்கட்சிகளை 360 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அவர்களில் 226 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என தேர்தல் பிரமாண பத்திரம் மூலம் தெரிய வந்துள்ளது.

    இதில், ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதியின் 119 வேட்பாளர்களில் 58 பேர், பா.ஜ.க.வின் 111 வேட்பாளர்களில் 78 பேர், காங்கிரஸின் 118 வேட்பாளர்களில் 84 பேர், எம்.ஐ.எம். கட்சியின் 12 வேட்பாளர்களில் 6 பேருக்கு குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது.

    • உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.
    • வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை பின்பற்றி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    ஆலேரு தொகுதியில் சந்திரசேகர ராவ் கட்சியின் வேட்பாளர் கங்கிடி சுனிதாவை ஆதரித்து அந்த கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அவர்கள் தெருவில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது தொழிலாளி ஒருவர் வீட்டின் முன்பு குளித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் வாக்கு சேகரித்தவர்கள் அருகில் ஓடி சென்றனர். அவருக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டினர்.

    பின்னர் உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.

    இது தவிர புதுசு புதுசாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராகுல் காந்தி பிரசாரத்தின் போது விஜயபேரியில் சாலையோர ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக மாறி தோசை சுட்டார்.

    ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சி தலைவர் ஒவைசி ஓட்டலில் தொண்டர்களுடன் அமர்ந்து இட்லி தோசை சாப்பிடுகிறார். மேலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

    தெலுங்கானா அமைச்சரும் பி.ஆர்.எஸ். வேட்பாளருமான அஜய்குமார் என்பவர் பிரசாரத்தின் போது சவரவ தொழிலாளியாக மாறிவிடுகிறார்.

    அவர் கட்டிங் சேவிங் செய்து வாக்கு சேகரித்தார். அவரிடம் பலர் முடி வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

    மகபூப் நகர் பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் கவுட் வயலில் இறங்கி விவசாயிகளுடன் வேலை செய்தார். அவர் வேர்கடலை பறித்து கொடுத்து உதவினார்.

    வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

    • தேர்தல் விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.
    • கிரிமினல் வழக்குகளில் தொடர்பு உள்ள வர்கள் வாக்குச்சாவடி முகவர்களாக செல்ல அனுமதிக்க கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சி கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறி யிருப்பதாவது:

    ஈரோடு இடைத்தேர்தலை யொட்டி நாளை (திங்க ட்கிழமை) வாக்குப் பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொது கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ, யாரும் ஒருங்கிணைக்கவோ? நடத்தவோ? அல்லது அவற்றில் பங்கேற்கவோ? கூடாது.

    பொதுமக்களை ஈர்க்கும் வகையில், இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் வாயிலாக தேர்தல் சம்பந்தமான பரப்புரை செய்யக்கூடாது.

    வாக்கு ப்பதிவு நாளன்று, வேட்பாளர் சொந்த பயன்பாட்டுக்காக ஒரு வாகனமும், தேர்தல் முகவரின் பயன்பா ட்டுக்காக ஒரு வாகனமும் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவது, அழைத்து செல்வது போன்ற செயல்பாடுகளுக்காக வாடகை வாகனம் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் கையாள வேட்பாளர்கள் அனுமதிக்க கூடாது.

    2 நபர்களை மட்டும் கொண்ட வேட்பாளர்களின் அரசியல் கட்சிக ளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச்சாவடிகளில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்படலாம்.

    தேவையில்லாத கூட்டத்தை கூட்டக்கூடாது. வாக்காளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க கூடாது.

    வாக்குச்சாவடிக்கு வரும் முகவர்கள், அதே வாக்கு ச்சாவடியை சேர்ந்த வாக்கா ளர்களாக இருக்க வேண்டும். அவர்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

    மேலும் கிரிமினல் வழக்குகளில் தொடர்பு உள்ள வர்கள் வாக்குச்சாவடி முகவர்களாக செல்ல அனுமதிக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறி னார். 

    ×