search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 226 பேர் மீது குற்ற பின்னணி
    X

    தெலுங்கானாவில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 226 பேர் மீது குற்ற பின்னணி

    • தேர்தலில் இக்கட்சிகளை 360 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • எம்.ஐ.எம். கட்சியின் 12 வேட்பாளர்களில் 6 பேருக்கு குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், இந்த தேர்தலில் இக்கட்சிகளை 360 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அவர்களில் 226 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என தேர்தல் பிரமாண பத்திரம் மூலம் தெரிய வந்துள்ளது.

    இதில், ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதியின் 119 வேட்பாளர்களில் 58 பேர், பா.ஜ.க.வின் 111 வேட்பாளர்களில் 78 பேர், காங்கிரஸின் 118 வேட்பாளர்களில் 84 பேர், எம்.ஐ.எம். கட்சியின் 12 வேட்பாளர்களில் 6 பேருக்கு குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது.

    Next Story
    ×