search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் 15-ந் தேதி போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு
    X

    ஈரோடு மாவட்டத்தில் 15-ந் தேதி போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு

    • தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • தபால் வாக்களிக்க ஏதுவாக வருகிற 15-ந் தேதி சீலிடப்பட்ட தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியை ஆசிரியர்களுக்கு கடந்த 7-ந் தேதி நடந்த 2-ம் கட்ட பயிற்சியின் போது தபால் வாக்குப்பதிவு நடந்தது. இதில் அவர்கள் தங்களது வாக்கினை தபால் மூலமாக ஓட்டு பெட்டியில் போட்டனர்.

    இதனைத்தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் சீருடை பணியாளர்களான ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) தபால் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,

    பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடும் 2,050 போலீசாருக்கு ஏற்கனவே தபால் வாக்களிக்கும் படிவம் வழங்கப்பட்டு அவர்கள் தொகுதிக்கான வேட்பாளரின் பெயர், சின்னங்கள் அடங்கிய பேலட் பேப்பரும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதில் போலீசார்களுக்கான தபால் வாக்களிக்க ஏதுவாக வருகிற 15-ந் தேதி சீலிடப்பட்ட தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. அதில் மாவட்டத்தில் உள்ள போலீசார் தங்களது தபால் வாக்கினை செலுத்த உள்ளனர். தபால் வாக்களிக்க ஈரோட்டில் வேளாளர் கல்லூரி, கோபியில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதி செய்தால் முறைப்படி அனைத்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்படும். இது தவிர பிற தொகுதிகளில் வாக்குரிமை உடைய போலீஸ் அதிகாரிகள் நேரடியாக தபால் மூலமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×