என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக"

    • தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆள வேண்டும் என்ற எண்ணம் புதிதாக வாக்களிக்க உள்ளவர்கள் மற்றும் அனைவரது மனதிலும் உள்ளது.
    • 2026-ம் ஆண்டு எங்கள் தலைவர் விஜய் முதலமைச்சராக வருவார்.

    கோவை:

    தமிழக வெற்றிக்கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுவாக தமிழக மக்கள் இரண்டு இயக்கங்களே தமிழகத்தை ஆள வேண்டுமா? என்று சிந்தித்து வருகின்றனர். புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. மக்கள் புதிய தலைமையை முடிவு செய்து விட்டனர். அந்த நோக்கத்தோடு எங்களது தமிழக வெற்றிக்கழகம் வீறுநடை போட்டு வருகிறது.

    தமிழக வெற்றிக்கழக தலைவரான விஜயை பற்றி மற்ற கட்சிகள் கருத்து சொல்வதற்கு காரணம், அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் எங்கள் தலைவரை ஒவ்வொரு இயக்கங்களும் மாறி மாறி கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

    இளைஞர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் 3 லட்சம் பேர் தமிழகத்தில் தேர்தல் எப்போது நடக்க போகிறது என்பதற்காக பதிவு செய்து, காத்திருக்கும் வரலாறு இந்திய வரலாற்றில் இடம் பெறப்போகிறது.

    புதிய தலைமை ஆளவேண்டும். அதுவும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆள வேண்டும் என்ற எண்ணம் புதிதாக வாக்களிக்க உள்ளவர்கள் மற்றும் அனைவரது மனதிலும் உள்ளது. எனவே 2026-ம் ஆண்டு எங்கள் தலைவர் விஜய் முதலமைச்சராக வருவார். 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெறும்.

    அ.தி.மு.க வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் எங்கள் தலைவரை பற்றி அவர்கள் விமர்சித்து வருகின்றனர். வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்கள் தி.மு.க.வை தான் பேச வேண்டும். இதில் இருந்தே பி டீமாக யார் செயல்படுகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.

    அவர் எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்லட்டும். அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தோல்வி பயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்ட காரணத்தால் தான் இப்படி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

    தேர்தல் அறிக்கை என்பது மொத்தமாக கொடுக்க வேண்டியது. ஆனால் தோல்வி பயம் வந்ததன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு நாளும் சிந்தித்து, சிந்தித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறார் என்றார். 

    • தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை.
    • மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூரில் இன்று அ.தி.மு.க. முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் வீடு, வீடாக சென்று விடியா ஆட்சிக்கு, உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்கிற பிரசார விளக்கக் கூட்டம் நடத்தி, தி.மு.க. ஆட்சியின் அவலங்களை தாய்மார்களிடம் எடுத்து கூறி வருகிறோம்.

    கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஆகி உள்ளது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே பயமாக இருப்பதாக தாய்மார்கள் தெரிவிக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.

    எங்கள் கூட்டணி, அ.தி.மு.க., தலைமையில் ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விரைவில் வெளியேறும். பின்னர் படிப்படியாக மற்ற கட்சிகளும் வெளியேறும். த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒன்றும் தெரியாது என்றார்.

    • அ.தி.மு.க. என்பது முடிந்து போன கதை. அது இனிமேல் ஆட்சிக்கு வரவே வராது.
    • எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை அவரது கட்சியினரே நம்ப மாட்டார்கள்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி மகளிர் உரிமையைத் தொகையை ரூ.2000 மாக உயர்த்தி வழங்கப்படும். கல்விக்கடனை அரசே ஏற்கும். வருடத்துக்கு 3 சிலிண்டர் இலவசமாக தரப்படும் என தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்துள்ளார்.

    அவர் உருட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவதுமில்லை. வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்கட்சி தலைவராக கூட வருவதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் அவர் வாக்குறுதிகளை அள்ளி விட்டு செல்லலாம். ரூ.2000 கொடுப்பதாக கூறினாலும் மக்கள் நம்ப மாட்டார்கள்.

    தனது 10 ஆண்டு ஆட்சி காலத்தில் கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட எதையும் செய்யாமல் இப்போது வாக்குறுதி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? அ.தி.மு.க. என்பது முடிந்து போன கதை. அது இனிமேல் ஆட்சிக்கு வரவே வராது.

    எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை அவரது கட்சியினரே நம்ப மாட்டார்கள். அவ்வாறு உள்ள நிலையில் மக்கள் எவ்வாறு நம்புவார்கள். கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றவர் தற்போது எதற்காக கூட்டணிக்கு சென்றுள்ளார். தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகவே பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளார். அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.விடம் அடகு வைத்து விட்டார். 24 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகை அ.தி.மு.க. ஆட்சியில் 9 லட்சமாக குறைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தற்போது பொருளாதார நிபுணர் போல பேசுகிறார். அவர் எப்படி பொருளாதாரத்தை உயர்த்துவார். டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தை அ.தி.மு.க. காலத்தில் கட்டவில்லை. அந்த பணம் எங்கே போனது. எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டியது ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம்தான். அவருக்கு தேர்தலில் வெற்றி பெற வேண்டும். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

    ஏற்கனவே அவர் அறிவித்த 5 வாக்குறுதிகள் மக்களிடம் எடுபடாமல் புஸ்வானமாக போய் விட்டதால் தற்போது மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இதுவும் புஸ்வானமாகவே போய் விடும் என்றார். 

    • தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது.
    • சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் விவகாரம் என்பது முடிந்து போன கதை.

    அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலை தொங்கி காட்சியளித்து கொண்டிருப்பதாக விமர்சித்தார். மேலும் அவர் கூறுகையில்,

    * 2 மாதங்களுக்கு முன்னர் அ.தி.மு.க. கூட்டணி குறித்து பலரும் கிண்டல் செய்தனர்.

    * தற்போது தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது.

    * தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை வகிக்கும்.

    * நாட்டை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அதிமுகவும் தேசிய அளவிலான கட்சி.

    * கரூர் சம்பவம் நடந்து 75 நாட்கள் கடந்து வீட்டை விட்டு வெளியே வந்தவர் விஜய்.

    * நாட்டில் என்ன நடக்கிறது என்றே த.வெ.க. தலைவர் விஜய்க்கு தெரியவில்லை. பொதுவெளியில் வந்தால் தான் நாட்டில் என்ன நடக்கிறது என தெரியும்.

    * ஒரு கட்சியின் தலைவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது எனத் தெரிந்திருக்க வேண்டும்.

    * அ.தி.மு.க. ஆட்சியை எப்படி ஊழல் ஆட்சி என விஜய் கூற முடியும்?

    * விஜய் மக்களையும் பார்க்கவில்லை, தொலைக்காட்சியையும் பார்க்கவில்லை.

    * விஜய் நேரில் செய்தியாளர்களை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும், அப்போதுதான் தமிழ்நாட்டில் உண்மை நிலவரம் அவருக்கு தெரியும்.

    * ஊழல் வழக்கில் சிறை சென்ற செங்கோட்டையனை அருகில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து விஜய் பேசுகிறார்.

    * சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் விவகாரம் என்பது முடிந்து போன கதை.

    * சசிகலா விவகாரம் குறித்து ஏற்கனவே பலமுறை தெளிவுப்படுத்தி விட்டேன்.

    * ஜெயலலிதாவின் ஆன்மா துரத்தியதால் தான் மனோஜ் பாண்டியன் தி.மு.க.விற்கு சென்று விட்டார்.

    * எங்கள் மீது குறை கூற ஒன்றும் இல்லை, எந்த தவறும் செய்யாத அதிமுக மீது குறைகளை முதல்வர் தேடிக்கொண்டிருக்கிறார்.

    * பொம்மை முதல்வர், திறமையற்ற முதல்வர் என மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

    • ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
    • ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

    அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

    * முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.

    * ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

    * ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

    * ஜல்லிக்கட்டின் போது படுகாயமடைந்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

    * மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்வி கடனை ரத்து செய்யப்படும்.

    * மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    * சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றார். 

    • வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் பேர் த.வெ.க.வுக்கு வாக்கு அளிக்க உள்ளனர்.
    • தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய அலுவலகத்தை நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் செங்கோ டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * த.வெ.க.தலைவர் விஜய்யின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது .

    * அனைத்து இல்லங்களிலும் த.வெ.க.வின் குரல் ஒலித்துகொண்டு இருக்கிறது.

    * 3-ம் ஆண்டு விழாவில் விஜய் சிறப்பாக உரையாற்றினார். அவருடைய இலக்கு தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆண்டு உள்ளன. இந்த முறை மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.

    * வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் பேர் த.வெ.க.வுக்கு வாக்கு அளிக்க உள்ளனர்.

    * தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள்.

    * ராசிபுரம் கூட்டத்தில் அ.தி.மு.க கூட்டத்தில் அவர்களே த.வெ.க கொடியை பிடித்து விட்டு த.வெ.க.வினர் வந்தனர் என தவறாக கூறியுள்ளனர்.

    * வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க சார்பில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாளை மறுநாள் விருப்ப மனு அளிக்க உள்ளேன்.

    * முருகன் பக்தி பாடலை பாடி வேல்முருகன் ஆட கூறியதால் விஜய் நடனம் ஆடினார். அதை விமர்சனம் செய்கிறார்கள். நயினார் நாகேந்திரன், எஸ்.பி.வேலுமணி சலங்கை கட்டி ஆடவில்லை.

    * எப்போதும் விஜயுடன் தான் இருப்பேன். 2 நாட்களில் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    * ஆட்சிக்கு வந்தபிறகு பட்ஜெட் குறித்து பேசுகிறோம்.

    * திண்டுக்கல் சீனிவாசன், விஜய் கருப்பு பணம் வாங்குவது குறித்து ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். வாய் இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசக்கூடாது.

    * அவர்கள் யாரிடம் அடிமையாக இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

    * த.வெ.க.தனித்துப் போட்டியிடுவது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மவுனம் வெற்றிக்கு அறிகுறி என்றார்.

    இதனிடையே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் த.வெ.க.வால் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி சரியாது, தி.மு.க.விற்கு தான் பாதிப்பு என்று சொல்லி உள்ளார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு,

    2026 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். தேர்தல் முடிவுக்கு பிறகு யார் எங்களை கண்டு அச்சப்படுகிறார்கள். யாருக்கு நாங்கள் போட்டி. யாருடைய வாக்கு வங்கி சரிகிறது என்பது தெரியவரும், என்றார்.

    • எதிரிகள் யார் துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.
    • ஒவ்வொரு குடும்பத்தினரும் தமிழக மக்களும் அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

    இது தொடர்பாகவும் சட்டமன்றத் தேர்தலை தனிக்கட்சி தொடங்கி சந்திக்க போகிறீர்களா? என்பது பற்றி நிருபர்கள் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    எதிரிகள் யார் துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இது பற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை. வருகிற சட்டமன்றத்தேர்தலில் எனது தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சியை அமைப்போம். அது எப்படி நடக்கும் என்பதை நீங்களே விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்றார்.

    இதனிடையே அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று நடிகர் விஜய் விமர்சித்துள்ளாரே என்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, அ.தி.மு.க. ஆட்சி எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு குடும்பத்தினரும் தமிழக மக்களும் அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவேதான் இப்போதும் அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என்று அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்றார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்திருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு முடிவு இருக்கும். அதன் அடிப்படையில் அவர்கள் செயல்பட்டு இருப்பார்கள். அது பற்றி எல்லாம் எப்படி கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

    • அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்று, பொதுச்செயலாளர் முதலமைச்சராவார்.
    • நிதர்சனமான, தெளிவான நிலைப்பாடு அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நிதர்சனமான உண்மையான போட்டியே அ.தி.மு.க. - தி.மு.க.விற்கு தான். விஜயை கண்சிடரே பண்ண மாட்டார்கள்.

    விஜய் நானும் ரவுடி தான்... என்னை ஜீப்பில் ஏற்றுங்கள் என்றால் எப்படி முடியும்.

    கரூரில் 41 பேர் உயிரிழந்தது குறித்து கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி, ஈவு இரக்கம் இல்லாமல் கட்சியின் ஆண்டு விழாவில் டான்ஸ் ஆடுகிறார் விஜய். அந்த குடும்பங்கள் எவ்வளவு மனம் கஷ்டப்பட்டிருப்பார்கள்.

    த.வெ.க. தலைவராக இருக்க விஜய்க்கு அருகதை இல்லை. லாட்டரி பணத்தில்தான் அரசியல் கட்சி நடத்துகிறார்.

    எங்களை பொறுத்தவரை அ.தி.மு.க. - தி.மு.க.விற்கு தான் போட்டி. அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்று, பொதுச்செயலாளர் முதலமைச்சராவார்.

    பிரதமர் வந்தார். அவருடைய கட்சிக்காரர்கள் அவரை பூஸ்ட் பண்ண சொல்லலாம்.

    நிதர்சனமான, தெளிவான நிலைப்பாடு அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி.

    எங்களுக்கு எல்லாம் கீழே தான். எங்களுக்கு யாரும் மேலே கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
    • அண்ணா நினைவிடத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 57-வது ஆண்டு நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.

    அண்ணா நினைவிடத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்த வந்தபோது திரண்டு இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    • வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அழித்து, ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்கள்.
    • பரந்து விரிந்த நம்முடைய இந்திய நாடு, இப்போது மிகப்பெரிய நெருக்கடிக்கும் - ஆபத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.

    சென்னையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 

    "நம்முடைய நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கள், என்னென்னவோ கனவுகள் கண்டார்கள்... இந்த ஒற்றுமையைச் சிதைக்க முடியுமா என்று பார்த்தார்கள். ஆனால், அவர்களின் எண்ணங்கள்தான் சிதைந்து போயிருக்கிறது. நம்முடைய இந்தத் தோழமையை எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது. ஏன் என்றால், இது எண்ணிக்கைக்காக அமைந்த கூட்டணி அல்ல; எண்ணங்களுக்காக அமைந்திருக்கும் கூட்டணி. நம்முடைய இந்திய நாட்டையும் - தன்மானமிக்க தமிழ்நாட்டையும் காக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை, லட்சியமாகக் கொண்டு அமைந்திருக்கும் கூட்டணி. 

    பாசிச பா.ஜ.க., தன்னுடைய ஆக்டோபஸ் கொடுங்கரங்களை அனைத்துப் பக்கமும் நீட்டி, கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. இந்திய நாடு, இதுவரை காப்பாற்றி வைத்து வந்த அனைத்து விழுமியங்களையும் சிதைக்கும் செயலை, ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து கொண்டு வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளை, தங்களுக்கு ஏற்ற மாதிரி சிதைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அழித்து, ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்கள்.

    பா.ஜ.க. எவ்வளவு ஆபத்தானது; எவ்வளவு குறுகிய சிந்தனை கொண்டது; எந்தளவிற்குப் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றால், அவர்களைப் பொறுத்தவரைக்கும், ஒரு நாடு என்றால், அதில் ஒரு மதம் - ஒரு மொழி - ஒரு பண்பாடு - ஒரே ஒரு தலைமைதான் இருக்க வேண்டும். மாநிலங்களின் வளத்தைச் சூறையாடி, ஒன்றியத்தில் குவிக்கிறார்கள். மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்.

    மதச்சார்பின்மை - சோசலிசம் - சமநீதி - சமூகநீதி - பொதுவுடைமை - பொது உரிமை உள்ளிட்ட சொற்களைக் கேட்டாலே, பா.ஜ.க.வினருக்குக் கசக்கிறது. இந்தச் சொற்களை எல்லாம், ஆட்சியில் இருந்து மட்டுமல்ல - அகராதியில் இருந்தே அழிக்க வேண்டும் என்று துடியாகத் துடிக்கிறார்கள். பரந்து விரிந்த நம்முடைய இந்திய நாடு, இப்போது மிகப்பெரிய நெருக்கடிக்கும் - ஆபத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நினைத்தது போன்று, 400 இடங்கள், 370 இடங்கள் என்று வெற்றி பெற்றிருந்தால், இப்போது இருப்பதைவிட நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். இந்தியாவில் இருக்கும் ஜனநாயகச் சக்திகள் அனைத்தையும் இன்றைக்கு இணைத்து, இந்தியா கூட்டணியை உருவாக்கி, பா.ஜ.க.வின் வேகத்தைக் குறைத்திருக்கிறோம். ஆனாலும், பெரும்பான்மை இல்லாத நேரத்திலேயே, பா.ஜ.க. தன்னுடைய கொடூரமான நகங்களைப் பயன்படுத்தி, ஜனநாயகத்திற்கு காயங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில், அனைவரும் குறிப்பிட்ட நாம் எச்சரிக்கையாகவும் - கவனமாகவும் இருக்க வேண்டும்!

    ஏன் என்றால், வரப்போகும் சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டுக்கும் - N.D.A. கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல். இதை மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழுக்கும் - தமிழினத்திற்கும் - தமிழ்நாட்டுக்கும் - அடுக்கடுக்காக துரோகங்களை செய்துவிட்டு, துரோகத்திற்கு ஏற்ற கொத்தடிமைகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, அவர்கள் முதுகில் ஏறி வருகிறது, பா.ஜ.க.

    அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை வழக்குகளைக் காட்டி மிரட்டி அமைக்கப்பட்டுள்ள அந்தத் தேர்தல் கூட்டணியின், தேர்தல் பரப்புரைக்கு வந்த பிரதமர் மோடி , அ.தி.மு.க. என்ற பெயரையே சொல்லவில்லை. ஏன், அவர் அ.தி.மு.க.வின் பெயரைச் சொல்லவில்லை தெரியுமா? ஏன் என்றால், அ.தி.மு.க. என்பது தனிக்கட்சி கிடையாது. பா.ஜ.க.வின் கிளை அமைப்பு. அந்தக் கிளை அமைப்பைச் சேர்ந்த பழனிசாமி அவர்கள், மோடி கொடுக்காத வாக்குறுதிகள் அனைத்தையும் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

    முக்கியமாக, மகாத்மா காந்தி பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தில், 50 நாட்கள்கூட வேலையைத் தராமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படியெல்லாம் சீரழித்தது என்று, நாட்டுக்கே நன்றாகத் தெரியும். இப்போது, தேசத்தந்தை காந்தியின் பெயரையே அழித்திருக்கும் அந்தத் திட்டத்தில், 125 நாட்கள் வேலை தரப்போவதாக பா.ஜ.க. சொல்கிறது! ஆனால் பழனிசாமி அவர்கள், 150 நாட்கள் வேலை தருவோம் என்று, முதலாளிகளை மிஞ்சும் பர்ஃபார்மென்ஸ்-ஐ இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் எப்படியும் தோல்வி உறுதி என்ற காரணத்தினால், பா.ஜ.க. அரசும் இந்தப் பட்ஜெட்டிலும் நம்மைப் புறக்கணித்திருக்கிறார்கள்.

    இந்த லட்சணத்தில், நேரடியாக பா.ஜ.க. ஆட்சி என்று சொல்ல கூச்சப்பட்டு, டபுள் எஞ்சின் ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க. சொல்லும் டபுள் எஞ்சின் என்பது டப்பா எஞ்சின் என்று நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.

    எடுத்துக்காட்டுக்கு சொல்கிறேன்... போதை மருந்து கடத்தலா? பா.ஜ.க. ஆளும் குஜராத்தைப் பாருங்கள்! குற்றச்சம்பவங்களா? பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தைப் பாருங்கள்! மாநிலமே பற்றி எரிவதை பார்க்க வேண்டுமா? பா.ஜ.க. ஆட்சி செய்த மணிப்பூரைப் பாருங்கள்! இன்னும் சொல்கிறேன்... பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களாக, ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே எந்த மாநிலம் என்று சொல்கிறதே... உத்தரப்பிரதேசம் - ராஜஸ்தான் - மத்தியப் பிரதேசம்! இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க.தான் ஆளும் கட்சி! சரி, முதல் மூன்று மாநிலங்கள் மட்டும்தானா? அடுத்த மூன்று இடங்களில் இருப்பது யார்? பீகார் - ஒடிசா - மகாராஷ்டிரா! இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க.தான் ஆட்சியில் இருக்கிறது. இதுதான் டப்பா எஞ்சினின் லட்சணம்!

    நாட்டுக்கே முன்னோடியான திட்டங்களை, தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் நாம் இன்றைக்குச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதிகமான வளர்ச்சியடைந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை திராவிட மாடல் உயர்த்தியிருக்கிறது! இங்கு பா.ஜ.க.வின் டப்பா எஞ்சினுக்கு வேலையே கிடையாது! இதே உணர்வைத்தான், மக்களின் முகங்களில் மகிழ்ச்சியாக நான் பார்க்கிறேன்!

    அண்மையில், இந்தியா டுடே பத்திரிகையும் - சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், நம்முடைய கூட்டணி 45 விழுக்காடு ஆதரவுடன் முன்னிலையில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்! நான் உறுதியாகச் சொல்கிறேன், நமக்கான ஆதரவு நிச்சயம் இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும்! கருத்துக்கணிப்புகள் - கருத்துத்திணிப்புகள் அனைத்திலும் கவனத்தைச் செலுத்தி, நம்முடைய எண்ணத்தை சிதறவிட்டுவிட வேண்டாம்; மெத்தனமாக இருந்துவிட வேண்டாம். மக்களுடன் இணைந்து நம்முடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்! தோழமைக் கட்சியினர் அனைவரும் இன்னும் வேகமாகப் பரப்புரைகளைத் தொடங்க வேண்டும் என்று உரிமையுடன் நான் கேட்கிறேன்.

    தமிழ்நாட்டில் நாம் பொறுப்பேற்று, நாம் பெறப்போகும் வெற்றி - "பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்" என்ற நம்பிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழங்கும் வெற்றியாக இருக்க வேண்டும்! ஒற்றுமை இருக்கும் இடத்தில் பா.ஜ.க.வின் பாசிச எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்பதை நாம் மீண்டும் நிரூபித்துக் காட்டுவோம்! வெல்வோம் ஒன்றாக!" என தெரிவித்தார்.

    • ஆயிரம் கோடி வருமானத்தை உதறித் தள்ளிவிட்டு மக்களுக்காக பணியாற்றுவதற்காக வந்துள்ளார்.
    • நான் அதிமுகவில் இருந்த பொழுது எம்ஜிஆர், ஜெயலலிதா படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது பிரதமர் படத்தை வைத்துள்ளனர் .

    ஈரோடு மாவட்டம் கோபி மேற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழக அலுவலகத்தை தமிழக வெற்றி கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே .ஏ .செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    அதை தொடர்ந்து செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தைப்பூச நாளன்று இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது .இதற்காக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் .

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எந்த திசையை காண்பிக்கிறாரோ அதைநோக்கி செல்ல தயாராக இருக்கிறோம்.

    தமிழகத்தில் புதிய மாற்றம் ஏற்பட உள்ளது. அவருடைய வெற்றி உறுதி என்ற நிலையில் உள்ளது.

    தமிழகத்தில் தற்பொழுது ஆளும் கட்சி, ஆண்ட கட்சிக்கு மாற்றாக தமிழக வெற்றி கழகம் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராவது உறுதியாகிவிட்டது. அவர் செல்லும் இடமெல்லாம் அவர் முகத்தை காண வேண்டும் என்ற ஆவலோடு மக்கள் இருக்கின்றனர்.

    ஆயிரம் கோடி வருமானத்தை உதறித் தள்ளிவிட்டு மக்களுக்காக பணியாற்றுவதற்காக வந்துள்ளார். கூட்டணியில் யார் வரவேண்டும் என்பதை தலைவர் விஜய் தான் முடிவு செய்வார். மேலும் அவர் எந்த தேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். விரைவில் மாற்றுக் கட்சியிலிருந்து இக்கட்சியில் ஏராளமானோர் சேர உள்ளனர். நான் அதிமுகவில் இருந்த பொழுது எம்ஜிஆர், ஜெயலலிதா படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது பிரதமர் படத்தை வைத்துள்ளனர் .

    அந்த கட்சி தற்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை. ஈரோடு புறநகர் மாவட்டத்திற்கு இன்னும் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரே நியமிக்கப்படவில்லை. மேலும், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ தான் தற்பொழுது பொறுப்பு வகித்து வருகிறார். இதிலிருந்து அந்த கட்சியினுடைய நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வீடுகளிலும் மகன், மகள், மனைவி ஆகியோர் விஜய்க்கு தான் ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்து விட்டனர் என்றார்.

    பேட்டியின் போது மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப் குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜம்பு கார்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழரசு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 6 வயது சிறுமி முதல் மூதாட்டிகள் வரை ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை.
    • போதை ஆசாமிகள் எந்த நேரம் இவர்களை சீரழிப்பார்கள், கொலை செய்வார்கள் என்று தெரியவில்லை.

    மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தலைகுனிந்து நிற்கும் தமிழகம் என்றும் தமிழ்நாட்டை தலைநிமிர வைப்பேன் என்று வாய சவடால் பேசும் ஸ்டாலினுக்கு கண்டனம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலக சரித்திரத்தில் ஹிட்லர், முசோலினி, நீரோ போன்ற கொடுங்கோல் மன்னர்களைப் பற்றி மக்கள்

    கேள்விப்பட்டிருப்பார்கள்; சரித்திரப் புத்தகங்களில் படித்திருப்பார்கள். ஆனால், இந்த சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக, தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.

    `நடு இரவில் ஒரு பெண் தனியாக, பாதுகாப்பாக நடந்துசெல்கிறாரோ அன்றுதான் உண்மையான சுதந்திரம்

    பெற்ற நாள்' என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால்,

    கடந்த 56 மாத தி.மு.க. ஆட்சியில் காவல் துறையை தனது ஏவல் துறையாக, முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றி வைத்துள்ளதால் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 6 வயது சிறுமி முதல் மூதாட்டிகள் வரை ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை.

    போதை ஆசாமிகள் எந்த நேரம் இவர்களை சீரழிப்பார்கள், கொலை செய்வார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில்,

    தீய சக்தி தி.மு.க-வின் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், `ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில்

    வாசித்தது போல்' மகளிர் மாநாடு நடத்துகிறார்.

    56 மாதங்களாக நிர்வாகத் திறனற்ற ஆட்சி செய்து, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ் நாட்டை மாற்றிவிட்டு, நிதியே இல்லாமல் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கோடிக்கணக்கான ரூபாய்க்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    சென்னை தரமணியில் வெளி மாநில இளம்பெண், போதை ஆசாமிகளால் சீரழித்து கொல்லப்பட்டுள்ளார். கண்முன்னே மனைவி பலாத்காரம் செய்யப்படுவதை தடுத்த கணவனும்; இந்த கொடுஞ்செயலைப் பார்த்து அழுத இரண்டு வயது

    குழந்தையும் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

    சென்னையில் உள்ள நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேன்டீனில் பணியாற்றும் அரியலூரைச் சேர்ந்த பெண், திமுக பிரமுகரால் சீரழிக்கப்பட்டுள்ளதோடு; அவரது நண்பர்களுக்கும் விருந்தாக்கப்பட்டுள்ள கொடுமை அரங்கேறியுள்ளது.

    கொடுஞ்செயலில் ஈடுபடுபவர்களுக்கு போலீசை கண்டு பயமில்லாத நிலை இருப்பதற்கு ஆட்சியாளர்களின் செயல்பாடுகளே காரணம்.

    குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஏதாவது ஒரு வகையில் ஆளும் கட்சியினர் அடைக்கலம் அளிப்பதுதான்,

    தற்போது தமிழகம் குற்றவாளிகளின் கூடாரமாக மாறி உள்ளதற்குக் காரணம் என்று அவதியுறும் மக்கள்

    புலம்புகிறார்கள்.

    பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தடை இல்லாமல் போதைப் பொருட்கள் கிடைப்பதும், அவைகளை கொண்டு செல்வதில் ஆளும் கட்சியினரில் சிலர் ஈடுபட்டு வருவதும், பெரும் சீரழிவுக்கு காரணமாக உள்ளது.

    பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை, போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், பள்ளி மாணவிகளில் சிலர் சீருடையிலேயே மது அருந்துவது போன்ற காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாவதும், விடியா தி.மு.க-

    வினர் நடத்தும் ஆட்சியின் லட்சணத்தைப் பறை சாற்றுகிறது.

    சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதலமைச்சர் மு.க.

    ஸ்டாலினைக் கண்டித்து வீதியில் இறங்கி நாள்தோறும் போராடி வருகிறார்கள்!

    போராடுபவர்களின் கோரிக்கைகளை

    நிறைவேற்றுவதற்கு பதில், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வேலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்து தங்கள் பரம்பரையின் வாழ்வை மட்டுமே வளப்படுத்தும் நோக்கில், அல்லும் பகலும் `கரப்ஷன், கமிஷன், கலக்ஷன்' என்று செயல்படும் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டது.

    விடியா திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள் அதை பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும் என்பதை,

    அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே

    செல்வத்தைத் தேய்க்கும் படை...

    என்று, இரு வரிகளில் திருவள்ளுவர் கூறியிருப்பதை, தன்னிலை மறந்து செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு

    நினைவூட்டுகிறேன். நம்மை கேள்வி கேட்க யாருமில்லை; நம்மை வெல்லும் சக்தி எங்குமில்லை என்ற மமதையோடு சுற்றித் திரியும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே,

    `ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே,

    பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே..

    ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு,

    அந்த மாறுதலை செய்வதற்கு தேறுதல் (தேர்தல்) உண்டு'

    என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளையும் நினைவூட்டுகிறேன்.

    விரைவில் தேர்தலை தமிழகம் சந்திக்கும்; மக்கள் மாறுதலை தருவார்கள். ஏய்த்து பிழைக்கும் தொழிலை இதுநாள்வரை செய்து வந்த தீயசக்தி தி.மு.க. கூட்டம்

    மூலைக்கு மூலை அடக்கி ஒடுக்கி வைக்கப்படும். தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் சுதந்திரம் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×