என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன் தள்ளுபடி: 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் இபிஎஸ்
    X

    அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன் தள்ளுபடி: 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் இபிஎஸ்

    • ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
    • ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

    அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

    * முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.

    * ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

    * ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

    * ஜல்லிக்கட்டின் போது படுகாயமடைந்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

    * மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்வி கடனை ரத்து செய்யப்படும்.

    * மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    * சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றார்.

    Next Story
    ×