என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எடப்பாடி பழனிசாமியால் எதிர்கட்சி தலைவராக கூட வர முடியாது- அமைச்சர் பெரியசாமி
    X

    எடப்பாடி பழனிசாமியால் எதிர்கட்சி தலைவராக கூட வர முடியாது- அமைச்சர் பெரியசாமி

    • அ.தி.மு.க. என்பது முடிந்து போன கதை. அது இனிமேல் ஆட்சிக்கு வரவே வராது.
    • எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை அவரது கட்சியினரே நம்ப மாட்டார்கள்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி மகளிர் உரிமையைத் தொகையை ரூ.2000 மாக உயர்த்தி வழங்கப்படும். கல்விக்கடனை அரசே ஏற்கும். வருடத்துக்கு 3 சிலிண்டர் இலவசமாக தரப்படும் என தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்துள்ளார்.

    அவர் உருட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவதுமில்லை. வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்கட்சி தலைவராக கூட வருவதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் அவர் வாக்குறுதிகளை அள்ளி விட்டு செல்லலாம். ரூ.2000 கொடுப்பதாக கூறினாலும் மக்கள் நம்ப மாட்டார்கள்.

    தனது 10 ஆண்டு ஆட்சி காலத்தில் கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட எதையும் செய்யாமல் இப்போது வாக்குறுதி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? அ.தி.மு.க. என்பது முடிந்து போன கதை. அது இனிமேல் ஆட்சிக்கு வரவே வராது.

    எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை அவரது கட்சியினரே நம்ப மாட்டார்கள். அவ்வாறு உள்ள நிலையில் மக்கள் எவ்வாறு நம்புவார்கள். கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றவர் தற்போது எதற்காக கூட்டணிக்கு சென்றுள்ளார். தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகவே பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளார். அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.விடம் அடகு வைத்து விட்டார். 24 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகை அ.தி.மு.க. ஆட்சியில் 9 லட்சமாக குறைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தற்போது பொருளாதார நிபுணர் போல பேசுகிறார். அவர் எப்படி பொருளாதாரத்தை உயர்த்துவார். டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தை அ.தி.மு.க. காலத்தில் கட்டவில்லை. அந்த பணம் எங்கே போனது. எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டியது ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம்தான். அவருக்கு தேர்தலில் வெற்றி பெற வேண்டும். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

    ஏற்கனவே அவர் அறிவித்த 5 வாக்குறுதிகள் மக்களிடம் எடுபடாமல் புஸ்வானமாக போய் விட்டதால் தற்போது மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இதுவும் புஸ்வானமாகவே போய் விடும் என்றார்.

    Next Story
    ×