search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் மண்டல அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக கே. கார்த்திக் நியமனம்
    X

    காஞ்சிபுரம் மண்டல அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக கே. கார்த்திக் நியமனம்

    • காஞ்சிபுரம் மண்டலத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மேற்கு மத்திய தெற்கு கிழக்கு என 8 மாவட்டங்கள் அடங்கியுள்ளன.
    • கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எண்ணங்களுக்கு ஏற்ப சிறப்பாக பணியாற்றுவேன் என்று கார்த்திக் தெரிவித்தார்.

    திருவொற்றியூர்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணியின் காஞ்சிபுரம் மண்டல தலைவராக திருவொற்றியூரை சேர்ந்த சென்னை மாநகராட்சி மாமன்ற குழு தலைவர் டாக்டர் கே. கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்

    காஞ்சிபுரம் மண்டலத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மேற்கு மத்திய தெற்கு கிழக்கு என 8 மாவட்டங்கள் அடங்கியுள்ளன. புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் கே.கார்த்திக்கு அ.தி.மு.க தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எண்ணங்களுக்கு ஏற்ப சிறப்பாக பணியாற்றுவேன் என்று கார்த்திக் தெரிவித்தார்.

    Next Story
    ×