search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pa Varamathi"

    • ஆட்சி, அரசு நடைமுறைகளை பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
    • கொள்ளையடித்த பணம் துபாயில் வெள்ளையாகி கொண்டிருக்கிறது.

    முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறுகையில், கண் தெரியாதவனுக்கு கமலக்கண்ணன், நாக்கு தடுமாறுகிறவனுக்கு நாவுக்கரசன் என்று பெயர் வைப்பது போல் ஆட்சி, அரசு நடைமுறைகளை பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தெரிந்த ஒரே நிர்வாகம் எங்கு பணம் எடுப்பது, அதை யாரிடம் எப்படி கொடுப்பது போன்ற தரகு வேலை பார்ப்பது மட்டும் தான். கொள்ளையடித்த பணம் துபாயில் வெள்ளையாகி கொண்டிருக்கிறது. இது தான். விஞ்ஞான ஊழல் என்பார்கள். குங்கும பொட்டோடும், கும்பிட்ட கையோடும் உறவாட வந்து பகையாடிய துரோகிகளை தோலுரித்து தொங்கவிட்டவர் எடப்பாடி பழனிசாமி.

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவம் தான் எடப்பாடி பழனிசாமி. கசாப்புக்கடைக்காரன் காந்தியம் பேசுவது போல, இந்த அதர்மவாதிகள் எல்லாம் தர்மயுத்தம் பற்றி பேசி வருகிறார்கள். அரிசி கேட்டு எம்.ஜி.ஆரும், காவிரி நதிநீர் கேட்டு ஜெயலலிதாவும் கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாக யார் வந்தார்கள்? இப்போது மத்திய அரசிடம் நிதி வாங்க நம்ம தி.மு.க.வில் உள்ள கத்துக்குட்டிகள் எடப்படி பழனிசாமியை கூப்பிடுகிறார்கள் என்றார்.

    ×