என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "celebration"
- உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அகரம்சீகூர் பகுதியில் 46 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
- பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீ கூர் கிராமத்தில் வேப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பாக இளைஞர் அணி மாநில செயலா ளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலின் 46-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 46 கிலோ கேக் மற்றும் லட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் முன்னிலை வ கித்தார். முன்னதாக வேப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் மருவத்தூர் சி.ராஜேந்திரன் தலை மையில் தி.மு.க. கொடி யேற்றினார்.நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சன் சம்பத், அவைத்தலைவர் கருணாநிதி, லப்பைக் குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஜாகிர் உசேன், மா வட்ட பிரதிநிதிகள் செல்வ ராஜ், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகம், ஒன்றிய பொருளாளர் செல்வராஜ் ஒன்றிய துணை செயலாளர் கௌதமன், ஒகளூர் பால் பண்ணை செக்ரட்டரி சக்திவேல், இளைஞர் அணி விக்னேஷ், சுப்ரியா வெங்கடேசன், நாகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நஞ்சநாடு கிராமத்தில் லக்கிஷா ஹப்பா என்ற பெயரில் தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
- திரண்டிருந்த யிரக்கணக்கான படுகர் இன மக்கள் கோவிந்தா.. கோவிந்தா... என்ற கோஷமிட்டு வழிபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகரின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக படுகரின மக்களின் கிராமங்களிலேயே பெரிய கிராமமாக ஊட்டி அருகே உள்ள நஞ்சநாடு கிராமம் விளங்குகிறது.
இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றி கார்த்திகை தீபம் கொண்டாடபட்ட நிலையில் பவுர்ணமி நாளன்று நஞ்சநாடு கிராமத்தில் லக்கிஷா ஹப்பா என்ற பெயரில் தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த படுகரின மக்களும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் படுகர் இன மக்களும் நஞ்சநாடு கிராமத்திற்கு வந்து குவிந்தனர்.
இதனையடுத்து மாலை சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் தங்களது பாரம்பரிய உடையான வெண்மை நிற ஆடைகளை பெண்கள், ஆண்கள் சிறுவர், சிறுமிகள் என அனைவரும் அணிந்து தொட்டமனை எனப்படும் தங்களது மூததையர்கள் வசித்த வீட்டின் முன் குவிந்தனர்.
அந்த இல்லத்தில் இருந்து பந்தம் எடுத்து வந்து சிறிய கொடி மரங்களில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் இளைஞர்கள் நடனமாடியவாறு ஊர் பெரியவர்கள் மற்றும் பூஜாரி ஆகியோரை தொட்டமனையிலிருந்து கிராமத்தின் மைய பகுதியில் உள்ள கோவில் வளாகத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் அமர்ந்து இருந்த நிலையில் சிறப்பு அலங்காரத்துடன் இருந்த பிரமாண்ட கொடி மரத்திற்கு பூஜை செய்து 60 அடி உயரத்தில் தீபம் ஏற்றபட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் கோவிந்தா.. கோவிந்தா... என்ற கோஷமிட்டு வழிபட்டனர்.
அதனை தொடர்ந்து பெரியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரும் கொடி கம்பத்தை சுற்றி பெரிய வட்டமாக நின்று தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தனர்.
- முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
- வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர்.
புதுச்சேரி:
புதுவை தந்தை பெரி யார் நகரில், நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி யின் குழந்தைகள் தின விழா, முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினர். டாக்டர் ரங்க நாயகி வளவன், ஜிப்மர் இதயவியல் துறை டாக்டர் இளவரசி சங்கர் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர்.
டாக்டர் ரத்தின வசந்தன், பல் மருத்துவர் நீனா வசந்தன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன், பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேச தலைவர்கள் போன்று குழந்தைகள் மாறுவேடமிட்டு கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நியூ லிட்டில் கிட்ஸ் மழலை யர் பள்ளி ஆசிரியர்கள் லட்சுமி பிரியா, மகாலட் சுமி,சோனியா, சுஜாதா ஆகியோர் செய்திருந்தனர்.
- திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டியில் நூலக வாசகர் வட்டத்தில் 56- வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டியில் நூலக வாசகர் வட்டத்தில் 56- வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
செங்காட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் ராமராஜ் மற்றும் புரவலர் செல்லமுத்து முன்னிலை வகித்தனர். கீரம்பூர் நூலகர் நூர்அஹமது வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற துறையூர் ரோட்டரி சங்க தலைவரும் புள்ளியியல் துறை துணை இயக்குனராக பணி நிறைவு பெற்ற தில்லைநாயகம் சிறப்புரையாற்றினார். முடிவில் செங்காட்டுப்பட்டி நூலகர் கார்த்திகேயன் நன்றியுரையாற்றினார்.
- குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பார்வையற்றோர் இன்னிசைக் குழு சார்பாக இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது
- நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளம் அவர் லேடி ஆப் ஸ்னோஸ் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பார்வையற்றோர் இன்னிசைக் குழு சார்பாக இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பாடகர்களும், இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டு குழந்தைகள் தின பாடல்கள், விழிப்புணர்வு மற்றும் தத்துவப் பாடல்கள் பாடி பள்ளிக் குழந்தைகளை மகிழ்வித்தனர்.
நிகழ்ச்சியில் திருக்குறள் ஓப்புவித்தல் மற்றும் ஏனைய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை பள்ளித் தாளாளர் - முதல்வர் மணி அந்தோணி தலைமையில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
- மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள்
- விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது
ஊட்டி,
நீலகிரி மரங்கள் பவுண்டேசன் சார்பில் குழந்தைகள் தின விழா மாவனல்லா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளி கொண்டாடப்பட்டது.
இதில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது. 1990-ம் ஆண்டுகளில் பயன் படுத்தப்பட்ட இணைப்பு வகைகள் வழங்கி குழந்தைகளை உற்சாகப்படுத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக, சிங்கப்பெண்ணே அமைப்பு ஹேமலதா மற்றும் அனன்யா , நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மரங்கள் பவுண்டேசன் நிறுவனர் தலைவர் சாதிக் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் குழந்தைகள் தினவிழாவை சிறப்பாக நடத்தினார்கள். விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
- நேரு பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை பள்ளியில் புத்தகமில்லா தினம் கொண்டாடப்பட்டது
- நடனம், பாடல், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளால் குழந்தைகள் மகிழ்ச்சி
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா புத்தகமில்லா தினமாக கொண்டாடப்பட்டது.
குழந்தைகளின் மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருக்கும் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
பள்ளிக்கு வருகை தந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். குழந்தைகளைக் கொண்டாடுகின்ற இந்த நாளில் மாணவச் செல்வங்கள் வண்ண உடையணிந்து பள்ளி வளாகம் முழுதும் மகிழ்ச்சியை விதைத்துச் சென்றனர்.
புத்தகமில்லா தினம் என்பதால் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், எதுவுமில்லாமல் கைகளை வீசியபபடி பள்ளிக்கு வந்தனர். பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் ஆசிரியர்கள் குழுக்களாகப் பிரிந்து பாடல், நாடகம், கண்ணைக் கவரும் வகையில் நடனம், நகைச்சுவை நிகழ்சிகள், கதைகள் மற்றும் விளையாட்டுகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கொளரி, அபிராமசுந்தரி, வரவெலட்சுமி, கோபமதிப்பிள்ளை மற்றும் உதயகுமார், காசாவயல்கண்ணன், கணியன் செல்வராஜ் மற்றும் ஏராளமான அசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை ஆசிரியை சிவதர்சினி செய்திருந்தார்.
புத்தகமில்லா தினம் கொண்டாடிய போது எடுத்தப்படம்.
- வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் ஆறுமுக சுவாமிக்கு கந்த சஷ்டி உற்சவம் நடந்தது.
- வரும் 18-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம் ஹார நிகழ்வு நடை பெறும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.
அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் திருமண காட்சி அளித்த தலம், நான்கு வேதங்களும் பூஜித்த தலம்.
இந்த கோவிலின்உட்பிர காரத்தில் வள்ளி, தேவயானை சமேத ஆறுமுகக்கடவுள் அமைந்துள்ளது.
இந்த ஆறுமுக சுவாமிக்கு கந்த சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நேற்று 13.11.2023 மாலை சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட சுப்பிர மணியசுவாமி கேடயத்தில் நான்கு வீதிகளில் வீதியுலா காட்சி நடந்தது.
விழா நாட்களில் மயில் வாகனத்தில் எழுந்தருளி தினசரி வீதியுலா நடை பெறும்.
வரும் 18.11.2023 அன்று இரவு வேதாரண்யம் மேலவீதியில் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம் ஹார நிகழ்வு நடை பெறும்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரா்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
- மாணவர்கள் மகிழ்ச்சியோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு லிட்டில் பிளவர் கல்வி குழுமத்தின் தலைவர் மரியசூசை தலைமை தாங்கி பேசினார். அப்போது, மாணவர்கள் மகிழ்ச்சியோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.
விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சஹானா உமர் செய்திருந்தார்.
- நெல்லையில் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- டவுன் ரதவீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
நெல்லை:
தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொதுவாக தீபாவளி தினத்தன்று அதிகாலையிலே அனைவரும் எழுந்து எண்ணை தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்த பின்னர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்வார்கள். பின்னர் வீடுகளில் பாரம்பரிய பலகாரங்கள் செய்து குடும்பத்துடன் சாப்பிடுவார்கள்
இதனால் நெல்லையில் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளிலும் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இன்று தீபாவளிக்கான இறுதி நாள் விற்பனை என்பதால் நெல்லையில் தீபாவளி பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
டவுன் ரதவீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக வடக்கு ரதவீதியில் உள்ள ஜவுளிகடைகளில் புத்தாடைகள் வாங்க பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் அங்கு சாலையின் இருபுறமும் உள்ள பிளாட்பார கடைகளில் பொதுமக்கள் ஆடைகள் எடுப்பதற்கு அதிக அளவில் குவிந்து வருகின்றனர். இதனால் வாகன போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. வண்ணார்பேட்டையிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. பிரதான சாலைகளில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. நெல்லை சந்திப்பில் இருந்து வண்ணார்பேட்டைக்கு வாகனங்களில் செல்வதற்கு சுமார் அரை மணி நேரமாகிறது.
இதேபோன்று பாளை சமாதானபுரம் உள்ளிட்ட இடங்களிலும், மார்க்கெட் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு பாரம்பரிய பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்கள் சென்று சீடை, முறுக்கு, அதிரசம், முந்திரி கொத்து உள்ளிட்ட பலகாரங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுதவிர வீட்டு உபயோக பொருட்களான டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மிஷன் உள்ளிட்டவைகள் வாங்குவதற்கும் பாளை முருகன்குறிச்சி பகுதியில் உள்ள கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதனால் வண்ணார்பேட்டை சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதற்கிடையே கூட்ட நெரிசலில் நகை, பணம் திருடு போவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், துணை கமிஷனர்கள் ஆதார்ஷ் பசேரா, அனிதா, சரவணகுமார் ஆகியோரின் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் 600 போலீசார் மற்றும் பட்டாலியன் போலீசார், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1,000 போலீசாரும், வள்ளியூர், களக்காடு, அம்பை, திசையன்விளை உள்ளிட்ட புறநகர் மாவட்ட பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 1,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பா லம், முருகன்குறிச்சி சாலை, சமாதானபுரம் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ரோந்து ஜீப்புகள், மோட்டார் சைக்கிள்களிலும் போலீசார் ரோந்து சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான டவுன் ரதவீதி, வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் ஆகிய இடங்களில் தற்காலிக உயர்கோபுரம் அமைத்து, அதில் இருந்து போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.
டவுன் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பழைய குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட காமிராக்களும் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த சில நாட்களாக இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் மூலம் வெளியூர்களில் இருந்து ஏராள மானவர்கள் நெல்லைக்கு வந்தனர். இன்று காலையிலும் ஏராளமான பயணிகள் குடும்ப த்தினருடன் வந்திறங்கினர். அவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரெயில்க ளில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், ரெயில்வே போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோன்று சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த சிறப்பு பஸ்கள் மூலமாக ஏராளமானவர்கள் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தூத்துக்குடி, தென்காசி, பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், ராதாபுரம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. சிலர் வாடகை கார், ஆட்டோ போன்றவற்றிலும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதேபோன்று தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில், பாவூர்சத்திரத்திலும் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.