search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pride"

    • தரமான கல்வியை கற்பதற்காக தமிழகத்திற்கு வெளிமாநில மாணவர்கள் வருகிறார்கள்.
    • மாணவ, மாணவிகள் படிக்கும்போது, நல்ல முைறயில் படிக்க வேண்டும். அதன் மூலம் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண் டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ் ணன்கோவில் வி.பி.எம்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழா வுக்கு கல்லூரி சேர்மன் வி.பி.எம்.சங்கர் தலைமை தாங்கினார். தாளாளர் பழனிசெல்வி சங்கர் முன் னிலை வகித்தார்.

    மாணவிகளுக்கு பட்டம்

    கல்லூரி துணைத்தலை வர் தங்க பிரபு, சிந்துஜா தங்கபிரபு ஆகியோர் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றனர். விழாவில் அன்னை ெதரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந் தர் டாக்டர் கலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 1,500 மாணவிக ளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப் போது அவர் பேசியதாவது:-

    பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவிக ளுக்கு பட்டம் வழங்குவத மிகவும் பெருமையாக உள் ளது. மேலும் இந்த கல்லூரி மாணவிகள் பல்கலைக்கழக அளவில் தேர்வில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.

    தரமான கல்வி

    இந்தியாவில் உள்ள மாநி லங்களில் தமிழகத்தில் கல் வியின் தரம் சிறப்பாக உள் ளது. எனவே பல்வேறு மாநி லங்களில் இருந்தும், பல் வேறு நாடுகளில் இருந் தும் இந்த தரமான கல்வியை கற்பதற்காக தமிழகத்தை நோக்கி மாணவ, மாணவி கள் வருகிறார்கள்.

    எனவே தரமான கல் வியை ஆசிரியர்கள் மாண–வர்களுக்கு போதிக்க வேண் டும். கல்வி கற்பதன் மூலம் மட்டுமே ஒரு உண்மையான, தெளிவான சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆகவே மாணவ, மாணவிகள் படிக்கும்போது, நல்ல முைறயில் படிக்க வேண்டும். அதன் மூலம் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண் டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பட்டமளிப்பு விழாவில், கல்லூரி இயக்குனர் நாச்சியார் கண்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து
    கொண்டனர்.

    • பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் கொள்கிறார்.
    • குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரூ.58 கோடி மதிப்பில் பல்வேறு கட்டமைப்புகளுக்கான கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் தலைமை யிலான தமிழக அரசின் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கி, தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 2021-ல் தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றிடும் பொருட்டு, 85 சதவீதம் வாக்குறுதிகள் தற்போது வரை நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், சொன்ன வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத பல்வேறு புதிய திட்டங்களையும் தமி ழகத்தில் சிறப்பாக செயல்ப டுத்தி வருகி றார்கள்.

    மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்கள் மட்டுமன்றி, வருகின்ற செப்டம்பர் 15-ம் தேதி அன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலும், தேர்தல் வாக்குறுதியிணை நிறைவேற்றிடும் பொருட்டு, சிவகங்கை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் அதனையும் நிறைவேற்றியுள்ளார்கள்.

    இதுபோன்று பொதுமக்களுக்கும், மாணாக்கர்களுக்கும் பயனுள்ள வகையில் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுவது மட்டுமின்றி, அதற்கான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் மேம்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை அலு வலர் பாபு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 27 அடி நீளமும் 11 அடி அகலத்தில் பிரமாண்டமான தேசிய கொடியை கோலம் வரைந்துள்ளார்.
    • தேசியக்கொடி கோலத்தை வரைவதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்பட்டது.

    சீர்காழி:

    குடியரசு தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரயில்வே ரோடு தெருவை சார்ந்த கயல்விழிவினோதினி என்ற பெண் தனது வீட்டில் 27அடி நீளமும் 11 அடி அகலத்திலும் மிகப்பிரமாண்டமான தேசிய கொடியை கலர் கோல மாவுகளை பயன்படுத்தி வரைந்து உள்ளார்.

    இவர் ஒவ்வொரு அரசு சார்பில் நடைபெறும் விழாக்களிலும் அதற்குரிய கோலத்தை இட்டு அசத்தி வருகிறார்.

    கடந்த தைப்பொங்கல் திருநாளில் அசல் பட்டுப்புடவை போன்று வண்ண கோலம் இட்டு பார்ப்பவர்கள் அனைவரையும் வியக்க வைத்தார்.

    இந்த தேசியக்கொடி கோலத்தை வரைவதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்பட்டது.

    இந்த தேசிய கொடியை மிகுந்த தேசப்பற்றுடன் கோல மாவுகளை பயன்படுத்தி வரைந்ததாக கயல்விழி வினோதினி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    இந்த கோலத்தை நேற்று அனைவரும் சென்று பார்த்து ரசித்து விட்டு சென்றனர்.

    • தமிழ் பாரம்பரியமிக்க மொழி என ராமநாதபுரம் கலெக்டர் பெருமிதம் கொண்டார்.
    • தமிழ் மொழி என்பது எல்லோருக்கும் பிடித்த மொழிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் ஆட்சிமொழி கருத்தரங்கம் நிகழ்ச்சி தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ் மொழி என்பது எல்லோருக்கும் பிடித்த மொழிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அத்தகைய தமிழ் மொழியாவது அனைத்து துறைகளிலும் அனைத்து பதிவேடு பராமரிப்பிலும் இருந்திட வேண்டும். என்ற நோக்குடன் அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் 2 நாட்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் ஆட்சி மொழி கருத்தரங்கம் நிகழ்ச்சி நடத்துகிறது.

    தமிழ் மொழியில் கையொப்பமிடுதல் மற்றும் பதிவேடுகள் பராமரித்தல், கடிதங்கள் பரிமாற்றம் ஆகியவற்றிற்கு முழுமையாக தமிழ் மொழியில் செயல்பெற்றிட அனைத்து துறைக்கும் அறிவுறுத்துவதுடன் தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு சிறப் பாக தமிழ் மொழி யை கை யாளும் அலுவலகங்களுக்கு ஆண்டுதோறும் பாராட்டு சான்று, நினைவுப் பரிசு வழங்கப்படுகின்றது.

    பொதுவாக தமிழ்மொழி என்றால் எல்லோருக்கும் பிடித்த மொழியாகும். காரணம் என்னை போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த வர்களாக இருந்தாலும் ஆட்சியாளர் என்ற முறை யில் மக்களிடம் கோரிக் கையை கேட்டு தமிழில் பேசும் பொழுது என்னை அறியாமலே என்னுள் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த அளவிற்கு தமிழ்மொழி நேசிக்கக்கூடிய மொழியாக என்னை போன்ற எண்ணற் றோர் புகழ்ந்து வருகின்ற னர். அந்த அளவிற்கு பாரம் பரியமிக்க மொழிகளில் தமிழ்மொழி உள்ளது என்பது எல்லோருக்கும் பெருமை வாய்ந்த ஒன்றாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சபீர் பானு, தமிழ் வளர்ச்சித்துறை உதவி பேராசிரியர்கள் கீதா மாணிக்க நாச்சியார், பழனியப்பன், காளிஸ் பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • ஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் மார்கழி மாத சொற்பொழிவு நடந்து வருகிறது.
    • கர்வத்தை கொன்றவனால் தான் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியும்.

    அவிநாசி :

    அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் மார்கழி மாத சொற்பொழிவு நடந்து வருகிறது.இதில் ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:- குழந்தைகளுக்கு, பெற்றோர் ' நான் என கர்வத்தை ஊட்டி வளர்க்காமல், நாம் என்ற பணிவை சொல்லித் தர வேண்டும். ஒருவருடைய வாழ்வை அஸ்தமனம் ஆக்க செய்யும் சத்ரு தான் கர்வம், காமம், கோபம்.இவற்றில் மிகவும் கொடியது கர்வம். நாம் எந்த விஷயத்தில் நான் என்ற அகந்தை கொண்டு ஈடுபடுகிறோமோ அதனை நமக்கு முன்னும் பின்னரும் செய்திருக்கக் கூடிய மனிதர்கள் ஏராளம் உண்டு. கர்வத்தை கொன்றவனால் தான் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியும். இவ்வாறு, அவர் பேசினார் 

    • மாணவி சுபானு சிவதாண்டவ நடனமாடி பெருமை சேர்த்தார்.
    • உற்சாக வரவேற்பளித்து மாணவியை வெகுவாக பாராட்டினர்.

    சீர்காழி:

    மத்திய அரசு சார்பில் காசியில் தமிழ் சங்கமம் விழா கடந்த நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடைபெற்றது.தமிழ் சங்கமத்தில் தமிழ் இலக்கியம், கல்வி கலாச்சாரம், காசி மற்றும் தமிழ் கலாச்சாரமும், தென்னிந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம், உணவு, கைத்தறி விவசாயம், நாட்டுப்புற கலை ஆகியவற்றை காட்டும் 75 அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது,

    காசி மற்றும் தமிழ் நாட்டிற்கு இடையேயான பழமையான தொடர்பை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் இருந்து 2500 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த யோகா மாணவி சுபானு பங்கேற்று காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 108 முத்திரைகளை காட்டி சிவதாண்டவம் நடன ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி–சீர்காழிக்கு பெருமை சேர்த்தார்.

    மாணவி சுபானு யோகாவில் உலக அளவில் பல்வேறு சாதனைகள் புரிந்து 270க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

    காசி தமிழ் சங்கமம் முடிந்து சொந்த ஊரான சீர்காழி வந்தடைந்த சுபானுவை சீர்காழி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் சார்பாகவும் அவரது உறவினர்கள் மற்றும் சீர்காழி நகர பாஜக சார்பாகவும் உற்சாக வரவேற்பு அளித்து மாணவியை வெகுவாக பாராட்டினர்.

    • சதய விழா கொண்டாடப்படும் ஒரே மன்னர் ராஜராஜ சோழனுக்கு மட்டும் தான்.
    • யானைகளில் வலம் வந்த சோழன் இடத்தில் நாம் வசிப்பது பெருமை.

    தஞ்சாவூர்:

    மாமன்னர் ராஜ ராஜ சோழனின் 1037-வது சதய விழா இன்று தஞ்சை பெரிய கோவிலில் தொடங்கியது. நாளை வரை இந்த விழா நடைபெறுகிறது. இன்று முதல் நாள் விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக நடைபெற்ற மேடை நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவை நாம் கொண்டாடி வருகிறோம். எத்தனை மன்னர்கள் ஆண்டிருந்தாலும் சதய விழா கொண்டாடப்படும் ஒரே மன்னர் மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு மட்டும் தான். அவர் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு ஆட்சி நடத்தினார். காலத்தால் அழிக்க முடியாத பல பொக்கிஷங்களை தந்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன். இதற்கு தஞ்சை பெருவுடையார் கோவிலே சான்று. 1000 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் மாமன்னர் குதிரை, யானைகளில் வலம் வந்திருப்பார். அந்த இடத்தில் தற்போது நாம் நிற்கிறோம். இது நமக்கெல்லாம் பெருமை. ஒரு மன்னர் போர் தொடுக்கும்போது படைகளுக்கு பின்னால் நிற்க கூடாது. முன் நின்று வழி நடத்த வேண்டும். அப்படித்தான் மாமன்னர் தமது படையை முன்னே நின்று வழி நடத்தியுள்ளார். பல போர்களில் வெற்றி கண்டுள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் இரண்டு பதக்கங்கள் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
    • பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை மாணவி மற்றும் மூன்றாம் ஆண்டு பாதுகாப்பியல் மற்றும் போர் திறனியல் துறை சேர்ந்த சி.யு.ஓ சிந்துஜா இந்திய அளவில் நடைபெற்ற ஜிவி மௌலாங்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் இரண்டு பதக்கங்கள் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    இதற்கான பாராட்டுவிழா நடைபெற்றது.

    விழாவிற்கு அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுசி முன்னிலை வகித்தார்.

    அன்னை கல்வி குழுமத்தின் தலைவர் அன்வர் கபீர் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் ஹுமாயூன் கபீர், நிர்வாக அலுவலர் ரவி மற்றும் தலைமை செயல் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் மாணவியை பாராட்டினர்.

    துணை முதல்வர்கள் பேராசிரியர் இளஞ்செழியன் மற்றும் பேராசிரியர் ராஜா ஆகியோர் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இதில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • காவிரித்தாய், மற்றும் விவசாயிகளை பெருமைப்படுத்தும் விதமாக ‘பசுமையும் பரதமும் 2022’ நிகழ்ச்சி கல்லணையில் நடைபெற்றது.
    • நாட்டிய கலைஞர்கள் பச்சை ஆடையில் அணிவகித்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தினர்.

    பூதலூர்:

    காவிரி டெல்டா மாவட்ட த்தில் தலையாய அணையாக விளங்கும் கல்லணையில் உலக சாதனைக்காகவும் கல்லணையைக் கட்டிய கரிகால் பெருவளத்தான், காவிரித்தாய், மற்றும் விவசாயிகளை பெருமை ப்படுத்தும் விதமாக தஞ்சை கலை பண்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் 'பசுமையும் பரதமும் 2022' நிகழ்ச்சி இன்று காலை கல்லணையில் நடைபெற்றது.

    கல்லணையில் உள்ள மாமன்னன் கரிகாலன் சிலையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று பாலங்களின் மேல்சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு நாட்டிய கலைஞர்கள் பச்சை ஆடையில் அணிவகித்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் திருச்சி மேயர் அன்பழகன், தஞ்சை மேயர் சண்.ராமநாதன் மற்றும் சிவசக்தி அகாடமி, ஆடல் வல்லான் இசை நாட்டியாலயா, காவிரி கலை அரண் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் சுற்றுவட்டார பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கலந்து கொண்ட 1000 பரத கலைஞர்கள் அனைவரும் பசுமை உடை அணிந்து நாட்டிய அபிநயம் பிடித்து ஆடினார்கள்.

    இதை காலை நேரத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் பாலங்களில் வழியாக கடந்து சென்ற மக்கள் பார்த்து ரசித்தனர்.

    • நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கான கொடிகள் நகராட்சி, பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
    • ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியினை ஏற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியில் 75வது சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் நகராட்சி, பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் கடைகளுகளிலும் வரும் ஆகஸ்ட் 13 தேதி முதல் 15 தேதி வரை இந்திய தேசியக்கொடி ஏற்றிட நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று நாட்களிலும் நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளு க்கான கொடிகள் நகராட்சி, பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்க திட்டம் துவக்கபட்டது முதற்கட்டமாக ஆறு ஆயிரம் தேசிய கொடியினை வீடுகளுக்கு வழங்கும் திட்டத்தை வேதாரணியம் உப்பு சத்திய கிரக நினைவு கட்டிடத்தில் நகரமன்ற தலைவர் புகழேந்தி துவக்கிவைத்தார் நிகழ்ச்சியில் நகரமன்ற துணை தலைவர் மங்களநாயகி, நகராட்சி கமிஷனர் ஹேமலாதா பொறியளார் முகமது இப்ராஹிம், சுதந்திர போராட்ட வீரர் சர்தார் வேதாரத்தினம் பேரன் கேடிலியப்பன் ரோட்டரி சங்க தலைவர் செந்தில் நகரமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொ ண்டனர்

    தேசியகொடியினை பெற்றுக்கொண்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் தேசியக்கொடியினை ஏற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும். தனியார் கட்டிட உரிமையா ளர்கள் மற்றும் வணிகர்கள் தங்களது கட்டிடங்களில் மேற்கண்ட நாட்களில் நமது நாட்டின் தேசிய கொடியினை ஏற்றி சுதந்திர போரட்ட நிகழ்வுகளில் முக்கிய பங்குவகித்த வேதாரண்யத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என நகரமன்ற தலைவர் புகழேந்தி கேட்டுக் கொண்டுள்ளர்.

    • செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டில் ஏ பிளஸ் தரச்சான்று அளித்துள்ளது.
    • அந்த வரிசையில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியும் அந்த பெருமையை பெற்றுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரிக்கு ஏ பிளஸ் தரச்சான்று தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம் அளித்துள்ளது.

    சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிர்லாஸ்பூரில் அமைந்துள்ள குரு காசி தாஸ் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். அலோக் சக்கரவால் தலை மையில் வந்த குழுவினர் கல்லூரியின் உள்கட்ட மைப்பு வசதிகள், பேராசிரி யர்களின் தரம், மாணவ ர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகள் மற்றும் தேர்ச்சி விகிதம் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் மதிப்பெண் 4-க்கு 3.32 அளித்து ஏ பிளஸ் தரச்சான்றிதழ் வழங்கப்ப ட்டுள்ளது.

    இது குறித்து கல்லூரியின் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா கூறியதாவது:-

    எங்கள் கல்லூரி 25-ம் ஆண்டில் எடுத்து வைக்கும் இந்த தருணத்தில் ஏ பிளஸ் தரச்சான்று கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பின் தங்கிய மாவட்டமென அழைக்கப்படும் ராமநாத புரம் மாவட்டத்தில் பெரு நகரங்களுக்கு இணையான வசதிகளை நம் பகுதியிலும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்து உள்ளது,

    ராமநாதபுரம் மாவ ட்டத்தில் முதல் பொறியியல் கல்லூரியாகவும், தமிழ கத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 17 கல்லூரிகள் தான் இந்த ஏ பிளஸ் சான்றிதழை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியும் அந்த பெருமை யை பெற்றுள்ளது. கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், அலுவலக ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×