தமிழ் பாரம்பரியமிக்க மொழி

தமிழ் பாரம்பரியமிக்க மொழி என ராமநாதபுரம் கலெக்டர் பெருமிதம் கொண்டார். தமிழ் மொழி என்பது எல்லோருக்கும் பிடித்த மொழிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
பயிலரங்கத்தில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பேசினார்.
பயிலரங்கத்தில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பேசினார்.
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் ஆட்சிமொழி கருத்தரங்கம் நிகழ்ச்சி தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ் மொழி என்பது எல்லோருக்கும் பிடித்த மொழிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அத்தகைய தமிழ் மொழியாவது அனைத்து துறைகளிலும் அனைத்து பதிவேடு பராமரிப்பிலும் இருந்திட வேண்டும். என்ற நோக்குடன் அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் 2 நாட்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் ஆட்சி மொழி கருத்தரங்கம் நிகழ்ச்சி நடத்துகிறது.

தமிழ் மொழியில் கையொப்பமிடுதல் மற்றும் பதிவேடுகள் பராமரித்தல், கடிதங்கள் பரிமாற்றம் ஆகியவற்றிற்கு முழுமையாக தமிழ் மொழியில் செயல்பெற்றிட அனைத்து துறைக்கும் அறிவுறுத்துவதுடன் தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு சிறப் பாக தமிழ் மொழி யை கை யாளும் அலுவலகங்களுக்கு ஆண்டுதோறும் பாராட்டு சான்று, நினைவுப் பரிசு வழங்கப்படுகின்றது.

பொதுவாக தமிழ்மொழி என்றால் எல்லோருக்கும் பிடித்த மொழியாகும். காரணம் என்னை போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த வர்களாக இருந்தாலும் ஆட்சியாளர் என்ற முறை யில் மக்களிடம் கோரிக் கையை கேட்டு தமிழில் பேசும் பொழுது என்னை அறியாமலே என்னுள் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த அளவிற்கு தமிழ்மொழி நேசிக்கக்கூடிய மொழியாக என்னை போன்ற எண்ணற் றோர் புகழ்ந்து வருகின்ற னர். அந்த அளவிற்கு பாரம் பரியமிக்க மொழிகளில் தமிழ்மொழி உள்ளது என்பது எல்லோருக்கும் பெருமை வாய்ந்த ஒன்றாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சபீர் பானு, தமிழ் வளர்ச்சித்துறை உதவி பேராசிரியர்கள் கீதா மாணிக்க நாச்சியார், பழனியப்பன், காளிஸ் பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com