search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "acting"

    • வீழ்ந்து கிடக்கும் தமிழகத்தை எடப்பாடியார் தலைமையில் மீட்டெடுப்போம்.
    • அ.தி.மு.க. 52- வது ஆண்டு தொடக்க விழாவில் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    மதுரை

    அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர்- ஜெய லலிதா ஆகியோர் சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மாவின் மறைவுக்கு பின்பு துரோகிகள், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து அ.தி.மு.க.வை எடப்பா டியார் மீட்டெடுத்தார்.

    தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் வீதம் இரண்டரை கோடி உறுப்பி னர்களை உருவாக்கி தி.மு.க.விற்கு சிம்ம சொப்ப னமாக எடப்பாடியார் உள்ளார் .

    தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரம் பூத்துகளில் இளைஞர்கள், பெண்களை நியமித்துள் ளார். தற்போது ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம் சிக்கி உள்ளது.தமிழகத்தை எடப்பா டியரால் மீட்டெடுக்க முடியும். அதுமட்டுமல்ல ஜீவாதார உரிமைகள் எல்லாம் பறிகொடுக்கப் பட்டு இருக்கிறது. தன் குடும்பத்தை மட்டும் வாழ வைக்க மன்னராட்சி போல் செயல்படும் தீய சக்தியிடம் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். வீழ்ந்து கிடக்கும் தமிழக த்தை எடப்பாடியார் தலைமையில் மீட்டெடுப் போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.தவசி, பா.நீதிபதி, கே.தமிழரசன், கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், எம்.வி.கருப்பையா, மாநில நிர்வாகிகள் இளங்கோவன், வெற்றிவேல்,மாவட்ட கழக நிர்வாகிகள் சி.முருகன், தமிழ்ச்செல்வன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, ராமையா, பிரபுசங்கர், கண்ணன் நகர செயலாளர்கள் விஜயன், சுமதி சாமிநாதன், மாவட்ட அணி செல்லம்பட்டி ரகு, மகேந்திர பாண்டி, ஆர்யா சிங்கராஜ பாண்டியன், துரைப்பாண்டி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி ராமகிருஷ்ணன், சேர்மன் லதா ஜெகன், டாக்டர் விஜய பாண்டியன், வக்கீல் முத்துராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தி.மு.க.வில் இருந்து முட்டை, செருப்பால் அடித்து வெளியேற்றப்பட்ட குஷ்புவின் நடிப்பு காங்கிரஸ் கட்சியில் எடுபடாது என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukarasar #Kushboo #Congress
    சென்னை:

    காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்வதில் தவறு கிடையாது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும். எந்த கட்சியுடனும் ஆயுட்கால கூட்டணி வைக்க முடியாது. கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ?. அதன்படி நாம் கூட்டணியை அமைக்கிறோம். தற்போது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொடருகிறது.

    நான் ராகுல்காந்தியின் நேரடி உத்தரவின்பேரில் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். குஷ்பு என்னை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. என்னை பதவியில் இருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். அந்த யோக்கியதை அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது. என்னை பதவி நீக்கம் செய்ய அவர் யார்?. பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா?. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    உண்மைக்கு மாறான தகவல்களை எப்படி அவர் கூறலாம். அதற்கான தைரியத்தை அவருக்கு யார் கொடுத்தது?. தலைமை இவரிடம் கருத்து கேட்டதா?. இதுபோன்ற பொய்யான புகார்களை குஷ்பு தெரிவித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

    குஷ்பு ஒரு நடிகை. படங்களில் அவர் எந்த வேடத்திலும் நடிக்கலாம். ஆனால் காங்கிரசில் அவர் நடிப்பு எடுபடாது. தி.மு.க.வில் இருந்தபோது நீங்கள் ஏன் வெளியேற்றப்பட்டீர்கள் என்பது தமிழக மக்களுக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் தெரியும். முட்டையால், செருப்பால் அடித்து வெளியேற்றினார்கள். அந்தநிலை காங்கிரஸ் கட்சியிலும் திரும்பும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இலவசமாக அவர் பிரசாரம் செய்யவில்லை. ரூ.2 லட்சம் வாங்கிக்கொண்டு தான் பிரசாரம் செய்தார். பிறகு குளுகுளு அறையில் போய் படுத்துக்கொண்டார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மகன் போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் செய்ய அந்த தலைவர் அழைத்தபோது, அதிக பணம் கேட்டார். இத்துடன் பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், தி.மு.க.வில் நடந்தது போல், காங்கிரஸ் கட்சியிலும் முட்டை வீச்சு, செருப்பு வீச்சு நடத்தப்படும் நிலை ஏற்படும். அந்த நிலையை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டாம். நான் எம்.ஜி.ஆர்., வாஜ்பாய், ராகுல்காந்தி ஆகியோருடன் பழகியவன். அரசியல் பயின்றவன்.

    காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபிறகு எத்தனை முறை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருக்கிறீர்கள். காசு வாங்காமல் கட்சி பணி ஆற்றியது உண்டா?. நான் ஜெயலலிதாவையே பார்த்தவன், குஷ்பு எம்மாத்திரம். தி.மு.க.வில் அவர் பேச்சாளராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது தான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் கூறிய கருத்துகள் தி.மு.க.வுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தின. இதை தமிழக மக்களும், தி.மு.க.வினரும் மறக்கவில்லை.

    2 மாதத்தில் என்னை தலைவர் பதவியில் இருந்து தூக்கி விடுவதாக கூறுகிறார். முடியுமா?. அப்படி என்னை பதவியில் இருந்து தூக்கவில்லை என்றால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ய அவர் தயாரா?. சொன்னது நிறைவேறவில்லை என்றால் தூக்கில் தொங்க தயாரா?. வேண்டாத வேலைகளை, கயிறு திரிப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Thirunavukarasar #Kushboo #Congress 
    ×