search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Players"

    • ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றதையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • பயமறியாத திமிழ் தழுவிய காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    டால்மியாபுரம்:

    கல்லக்குடி பேரூராட்சியில் இன்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியினை ஆர்.டி.ஓ. சிவசுப்பிரமணியன், லால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கம், தாசில்தார் முருகன், கல்லக்குடி பேரூரட்சி செயல் அலுவலர் கணேசன் முன்னிலையில், தொடங்கி வைத்தார்.

    திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, ஊட்டத்தூர் ஊராட்சி மன்ற இந்திரா அறிவழகன், அன்பழகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர், ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. மாடு பிடி களமானது எந்த வித வளைவுகளும் இன்றி நேர் பாதையாக அமைந்ததால், காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியில் வந்து, வீரர்களை சுழற்றி அடித்து நேராக புயலென விரைந்து சென்று கெத்து காட்டின.

    காளைகள் கெத்து காட்டினால் வீரர்கள் சும்மா இருப்பார்களா? சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடிக்க 450 வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் களமிறக்கப்பட்டனர். இவர்கள் அணி அணியாக மாடு பிடி களத்திற்குள் வந்து புயலென வாடி வாசலை விட்டு வெளியில் வந்த காளைகளை, லாவகமா மதில்களை தழுவி, தங்களின் புஜ பலத்தால் காளைகளை வீரர்கள் அடக்கினர்.

    திமிழ் உள்ள திமிரல், பாய்ந்து வந்து, காளைகள் வீரர்களை சிதறடித்தபோது, உன் திமிழ் பிடித்து, தமிரை அடக்குகிறேன் பார் என்று காளையர்கள் வீரம் காட்டிய போதும், பார்வையாளர்கள் மெய் சிலிர்த்து உற்சாகமாக கரகோஷம் எழுப்பி, கத்திய சத்தம் விண்ணை பிளந்தது. சிறப்பாய் சீற்றம் காட்டிய காளையின் உரிமையாளர்களுக்கும், பயமறியாத திமிழ் தழுவிய காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடை பெற்றதோடு, மாடுகள் காயமடைந்தால் சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். மேலும் காயமடையும் இளைஞர்களுக்கு சிசிக்கை அளிப்பதற்காக அவசர கால ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்களும் தயார் நிலையில் இருந்தனர். கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றதையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • மாவட்ட கலெக்டர் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • மொத்தம் 400 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன.

    தஞ்சாவூா்:

    தஞ்சை அடுத்த மாதாக்கோட்டையில் பொங்கல் விழாவை முன்னிட்டு லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு மாதாக்கோட்டையில் இன்று காலை நடைபெற்றது.

    போட்டியை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார். முன்னதாக அவரது தலைமையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ஜல்லிக்கட்டை முன்னிட்டு காளைகள் திறந்துவிடப்படும் வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன. அதேபோல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்றுவிடாதபடி தடுக்க இரும்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

    ஜல்லிகட்டில் பங்கேற்க தஞ்சை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் நேற்று இரவு முதலே தஞ்சைக்கு சரக்கு லாரி மூலம் அழைத்து வரப்பட்டன. இதேப்போல் மாடுபிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத் தொடங்கினர். மேலும் காளையை அடக்க வந்த வீரர்கள் மது அருந்தி உள்ளனரா? புகையிலை பொருட்கள் வைத்திருக்கிறார்களா? என்ற வழக்கமான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    இதேப்போல் காளைகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மொத்தம் 400 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன.

    இதையடுத்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அவைகள் துள்ளிக்குதித்து களத்துக்குள் வந்து சீறிப்பாய்ந்தது. காளைகள் வீரர்களை நோக்கி சீறி பாய்ந்தபோது சிலர் தரையில் படுத்து கொண்டனர்.

    காளைகள் களத்தில் நின்று விளையாடியதை பார்வையாளர்கள் மெய்மறந்து கண்டு ரசித்தனர். பலர் வீடுகளின் மாடியில் நின்று கண்டு ரசித்தனர். இதேப்போல் காளையை வீரர்கள் அடக்கும் போது கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

    களத்தில் நின்று விளையாடிய காளைகளை ஆக்ரோஷத்துடன் வீரர்கள் அடக்கினர்.

    காளைகளின் திமிலைப் பிடித்து அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேப்போல் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் பரிசை பெற்றுக் கொண்டனர்.

    காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலருக்கு அங்கேயே மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தனர். பலத்த காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகள் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
    • சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.

    இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

    18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    போட்டியை நடத்தும் தமிழகத்தில் இருந்து 522 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் 266 வீரர்கள், 256 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளத்தில் இருந்து அதிகபட்சமாக 47 பேரும், அதற்கு அடுத்தபடியாக கால்பந்தில் 40 பேரும், ஆக்கியில் 36 பேரும், நீச்சல், வாள் வீச்சில் தலா 34 பேரும் பங்கேற்கின்றனர்.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் தமிழக அணி அதிகபட்சமாக புனேவில் நடந்த (2019) போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்தது.

    சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    100 பதக்கங்களை வெல்வதை இலக்காக கொண்டுள்ளது. இது குறித்து தமிழக அணியின் தலைமை அதிகாரியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளருமான மெர்சி ரெஜினா கூறியதாவது:-

    கேலோ இந்தியா விளையாட்டில் இந்த முறை 100 பதக்கங்கள் வரை வெல்வதை இலக்காக கொண்டுள்ளோம். இதற்கு முன்பு நடைபெற்ற போட்டியில் தேசிய தரவரிசை அடிப்படையில் நாங்கள் களமிறக்க கூடிய வீரர்களின் எண்ணிக்கையில் எங்களுக்கு கட்டுப்பாடு இருந்தது.

    போட்டியை நடத்துவதில் பெரிய குழு பங்கேற்கிறது. பதக்க பட்டியலில் முதல் 3 இடங்களில் வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடகளம், வாள்வீச்சு, நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளில் பெரும்பாலான பதக்கங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்குவாஷ் விளையாட்டு புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் அதிக பதக்க வாய்ப்பு இருக்கலாம்.

    • காலை மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
    • வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

    மதுரை:

    தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகின்றன. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.

    இந்நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வேலைகள் சிறப்பாக நடந்து வந்த நிலையில் இன்று காலை மாடுபிடி வீரர்கள் அமைசசர் மூர்த்தி முன்னிலையில் உறுதி மொழி ஏற்றனர். இதனை தொடந்து ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கிவைத்தார்.

    இதில் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். முதல் சுற்று தொடங்கி வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட உள்ளன. முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்ற உள்ளனர். இதில் வெற்றி பெரும் வீரர்களுக்கு ஏராளமான பரிசு பொருட்களும் வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமாக மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

    • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    • 10 அணிகளும் 77 வீரர்களை தேர்வு செய்வதற்காக மொத்தம் ரூ.262.95 கோடியை கைவசம் வைத்துள்ளன.

    துபாய்:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது.

    17-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரத்தை ஏற்கனவே அறிவித்துவிட்டன.

    இதேபோல டிரேடிங் முறையில் வீரர்களை அணிகள் தங்களுக்குள் மாற்றிக் கொண்டனர். குஜராத் டைட்டன்சை சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். அவர் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    ஐ.பி.எல். போட்டிக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் நாளை (19-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு ஐ.பி.எல். ஏலம் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    ஐ.பி.எல். ஏலப் பட்டிய லில் மொத்தம் 333 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள். 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அசோசியேட் நாடுகளில் இருந்து 2 வீரர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

    மொத்தம் 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவார்கள். இதில் 30 பேர் வெளிநாட்டவர்களுக்கான இடமாகும். 10 அணிகளும் 77 வீரர்களை தேர்வு செய்வதற்காக மொத்தம் ரூ.262.95 கோடியை கைவசம் வைத்துள்ளன.

    பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள், பவுலர்கள், விக்கெட் கீப்பர் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். 23 வீரர்க ளுக்கு அடிப்படை விலை யாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 13 வீரர்களுக்கு அடிப்படை விலை ரூ.1½ கோடியாகும்.

    ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு போகப் போகும் வீரர் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்டார்க், கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), கோயட்சி (தென்ஆப்பிரிக்கா), ஹசரங்கா (இலங்கை). ஹர்ஷல் படேல், ஷாருக்கான் (இந்தியா) ஆகியோர் மீது இந்த ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

    • தடகள வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் சுமாா் 2,000 போ் கலந்து கொண்டனா்.
    • தமிழக அணியினா் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.

     திருப்பூர்:

    தெலுங்கானா மாநிலத்தில் 34-வது தென் மண்டல அளவிலான ஜூனியா் தடகள சேம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் தென் மண்டலங்களைச் சோ்ந்த ஆந்திரம், கா்நாடகம், கேரளம், லட்சத்தீவு, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த தடகள வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் சுமாா் 2,000 போ் கலந்து கொண்டனா்.

    இதில் 14, 16, 18, 20 வயதுக்கு உள்பட்டோா் என நான்கு பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழக அணியில் திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த 5 வீரா்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 10 போ் பங்கேற்றனா். இதில் 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கம் பெற்றனா். மேலும் சிறந்த தடகள வீரா்களாகவும் தோ்ந்தெடுக்க ப்பட்டனா்.

    இதில் தமிழக அணியினா் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், அனைத்துப் பிரிவிலும் சிறந்த வீரா், வீராங்கனை பட்டமும் வென்றுள்ளனா்.

    போட்டியில் வெற்றி பெற்ற திருப்பூா் மாவட்ட வீரா்கள், வீராங்கனைகளுக்கு, திருப்பூா் தடகள சங்கத்தின் தலைவா் சண்முகசுந்தரம், செயலாளா் முத்துகுமாா், மூத்த துணைத் தலைவா் மோகன் காா்த்திக், துணைத் தலைவா்கள் வெங்கடேஷ், சந்தீப்குமாா், ஜெயபிரகாஷ், மதிவாணன், இணைச் செயலாளா்கள் நிரஞ்சன், அழகேசன், ராமகிருஷ்ணன், தொழில்நுட்பக்குழுத் தலைவா் மனோகா் செந்தூா்பாண்டி, துணைத் தலைவா் சஜீவ் தாமஸ் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தனா் 

    • போட்டியானது 4 அணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • 14 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    கும்பகோணம்:

    ரோஹித் ஷர்மாவின் கிங்டம் கிரிக்கெட் அகாடமி மற்றும்கிரிம்சன்ஸ் ஸ்போர்ட்ஸ் சார்பில்பயிற்சியாளர் மணிகண்டன் தலைமையில் கும்பகோணம் அல் அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் யூத் பிரீமியர் லீக் கிரிக்கெட் வீரர்களின்நேர்முக தேர்வு நடைப்பெற உள்ளது.

    கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள கிராமப்புற கிரிக்கெட் வீரர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் யூத் பிரிமியர் லீக் போட்டி 4 அணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    கிரிக்கெட் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்வில் கலந்து கொண்டு பயன் பெற லாம் என்று பயிற்சியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    • வட மஞ்சு விரட்டு போட்டி நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கு கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாம்பூரில் தி.மு.க. சார்பில் வட மஞ்சு விரட்டுப் போட்டி நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் போட்டியை தொடங்கிவைத்தார். இதில் மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 காளைகள் பங்கு கொண்டன. இதில் தனித்தனி குழுக்களாக 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கு கொண்டனர்.

    வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அமைச்சர் பெரியகருப்பன் சார்பிலும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும் தி.மு.க. ஒன்றியச் செயலாளருமான சண்முகவடிவேல், மாநில இலக்கிய அணி் தலைவர் தென்னவன், நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி நாராயணன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் பூர்ணசங்கீதா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், துணை அமைப்பாளர் சோமசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பிளாசா ராஜேஸ்வரி சேகர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிழ் நம்பி, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சீமான்சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆண்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடைபெறும்.
    • பெண்களுக்கு ஒற்றையர் பிரிவில் மட்டும் நடை பெறும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மாநில கேரம் கழகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கேரம் கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கேரம் போட்டி நேற்று தொடங்கியது.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யா மொழி கலந்துகொண்டு போட்டியை தொடக்கி வைத்தார்.

    கலெக்டர் தீபக்ஜேக்கப், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார், துணை மேயர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    போட்டியில் 24 மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

    வீராங்கனைகளும் கலந்து கொண்டு விளையாடினர். ஆண்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடைபெறும். பெண்களுக்கு ஒற்றையர் பிரிவில் மட்டும் நடை பெறும்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக போட்டி நடந்தது.

    நாளை வரை போட்டி நடை பெறும்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட கேரம் கழக துணை தலைவர் ராஜகோபால், செயலாளர் சீனிவாசன், நிர்வாக குழு உறுப்பினர் விக்னேஷ் செய்திருந்தனர்.

    • தமிழகம் முழுவதிலும் இருந்து 900-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    • ஆண்கள் பிரிவில் 9 பேரும், பெண்கள் பிரிவில் 11 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கபடி பயிற்சியாளர்கள் இல்லாததால் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்ப டாத சூழல் இருந்தது.

    இதற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    தொடர்ந்து பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் நடப்பு 2023 - 24-ம் ஆண்டிற்கான கபாடி வீரர்கள் தேர்வு நேற்று சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    இதனை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில தலைவர் சோலை என்.ராஜா பங்கேற்று துவக்கி வைத்தார்.

    மேலும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என 900 பேர் போட்டிகளுக்கான தேர்வில் பங்கேற்றனர்.

    தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக தற்போது மூன்று பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு நாள் நடைபெறும் இந்த தேர்வில் ஆண்கள் பிரிவில் 9 பேரும் , பெண்கள் பிரிவில் 11 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் தகுந்த சான்றுகளை சமர்ப்பித்து போட்டியில் பங்கேற்றனர்.

    பின்னர் பேசிய மாநில தலைவர் ராஜா கபடிக்கு என்று இங்கு பிரத்தியேகமாக நேஷனல் சென்ட்ரல் ஆப் எக்ஸலென்ஸ் அமைக்க வேண்டும் என்றும், இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்படி அமைக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தார்.

    பேட்டியின் போது நகர மன்ற கவுன்சிலர் ரஜினி உள்ளிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருந்தனர்.

    • 17 வயதுக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
    • வருகிற 6-ந் தேதி வரை மின்னொலி கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    கேலோ இந்தியா, கூடைப்பந்து பெடரேஷன் ஆஃப் இந்தியா , தஞ்சை மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் பள்ளிகளுக்கு இடையேயான அஸ்மிதா இந்தியன் உமன் லீக் கூடைப்பந்து போட்டி நேற்று மாலை தஞ்சாவூர் அன்னை சத்தியா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் எஸ்.எஸ். ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

    செயலாளர் கதிரவன், பொருளாளர் சதீஷ் ஆனந்த் , துணைத் தலைவர்கள் ஜவஹர் பாபு, டாக்டர் நியூட்டன், சந்தோஷ் குமார், கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக இந்திய அணி வீராங்கனைகள் தர்ஷினி, பார்த்திபாப்ரியா, மோனிகா ஜெயசீலி, கிருஷ்மிகா, நடுவர் பச்சைய ப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் வரவேற்றார்.

    இதில் தஞ்சை ,கும்பகோணம், பட்டுக்கோட்டையில் இருந்து தலா 2 பெண்கள் அணிகள் வீதம் 6 அணிகள் கலந்து கொண்டனர். 17 வயதுக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    முதல் போட்டியில் தஞ்சை தூய வளனார் பள்ளி அணியும், பட்டுக்கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதினர். போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றது.

    தொடர்ந்து வருகிற 6-ம் தேதி வரை மின்னொலி கூடை பந்து போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு ,கோப்பைகள் வழங்கப்படும்.

    இந்நிகழ்வில் இணை செயலாளர்கள் மனோகரன், முருகானந்தம், துரைராஜூ ரமேஷ் குமார், மாவட்ட விளையாட்டு பயிற்றுனர் பாபு, மாநகராட்சி கவுன்சிலர் தமிழ்வாணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்த், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் தூய இதய மகளிர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.

    தொடர்ந்து இன்றும் கூடைபந்து போட்டி நடைபெறும்.

    • ராமநாதபுரத்தில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
    • இதன் ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    மேஜர் தயான் சந்த் 123-வது பிறந்தநாள் ஆகஸ்ட் 29-ந்தேதி (இன்று) இந்திய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக தேசிய விளையாட்டு தினம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தயான் சந்த் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி கேக் வெட்டி விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

    இதில் ஹாக்கி, 100 மீட்டர் ஓட்டப்போட்டி, சதுரங்கம், கேரம், நடை போட்டி ஆகியய விளையாட்டுகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் சுங்க இலாகா துறை ஆய்வாளர் சத்யராஜ், இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சட்டக் ராமநாதபுரம் சட்டக் கல்லூரி முதல்வர், ராமநாதபுரம் மாவட்ட ஆக்கி சங்கம் செயலாளர் கிழவன் சேதுபதி, மாவட்ட ஹாக்கி பயிற்சியாளர் மணிகண்டன், உடற்கல்வி ஆசிரியர் இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.

    ×