search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உணவு, உறைவிட செலவிற்கான உச்சவரம்பை 66 சதவீதமாக உயர்த்தியது
    X

    உணவு, உறைவிட செலவிற்கான உச்சவரம்பை 66 சதவீதமாக உயர்த்தியது

    • சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வருகிறது.
    • அமெரிக்க டாலர் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். ஏற்கனவே வழங்கப்பட்ட 150 டாலரிலிருந்து இது 66 சதவீதம் அதிகமாகும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இந்திய அரசுக்கு சொந்தமான இந்தியா விளையாட்டு ஆணையம் (சாய்) மற்றும் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு பல்வேறு விளை யாட்டு போட்டிகளுக்கு சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், விளை யாட்டு வீரர்கள் மற்றும் அணி அலுவலர்களின் உணவு மற்றும் உறைவிட செலவிற்கான உச்சவரம்பை இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுக்கள் அமைச்சகம் 66 சதவீதம் உயர்த்தியுள்ளது.

    தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கான அமைச்சக உதவித்திட்டத் தின் கீழ், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

    திருத்தப்பட்ட புதிய விதியின்படி, அங்கீரிக்கப்பட்டப் போட்டிகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அலுவலர்கள் நாள் ஒன்றுக்கு 250 அமெரிக்க டாலர் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். ஏற்கனவே வழங்கப்பட்ட 150 டாலரிலிருந்து இது 66 சதவீதம் அதிகமாகும்.

    உணவு, உறைவிடம், உள்ளூர் போக்குவரத்து, சில நேரங்களில் நுழைவுக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த செலவு உச்சவரம்பு இருக்கும். ஏற்கனவே 2015-ம் ஆண்டு நவம்பரில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 8 ஆண்டுகள் ஆகிவிட்டதால் உச்சவரம்பு திருத்தியமைக்கப்ப ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×