என் மலர்
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய 23 முன்னணி வீரர், வீராங்கனைகள்
- ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட பலர் முதல் சுற்றில் வெளியேறினர்.
- பெண்கள் ஒற்றையரிலும் அமெரிக்காவின் கோகோ காப் உள்பட பலர் முதல் சுற்றுடன் வெளியேறினர்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர், இத்தாலியின் மேட்டியோ பிரெட்டேனி, டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே, கிரீசின் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரென்சோ முசெட்டி உள்ளிட்ட பலர் முதல் சுற்றில் வெளியேறினர்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நம்பர் 2 வீராங்கனையும், சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் பட்டம் வென்றவரான அமெரிக்காவைச் சேரந்த கோகோ காப் முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.
தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சீனாவின் குயின்வென் ஜெங், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, துனீசியாவின் ஒன்ஸ் ஜபேர், பெலாரசின் விக்டோரியா அசரென்கா உள்பட பலர் முதல் சுற்றில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினர்.






