என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கவனத்திற்கு... 3% ஒதுக்கீட்டின் கீழ் தமிழக அரசு பணியில் சேர விண்ணப்பிக்கலாம்
- விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 24-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சான்றிதழ்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
சென்னை:
தமிழக அரசு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கான 3% இடஒதுக்கீட்டின் கீழ் பணியிடங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழக அரசு பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 24-ந்தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள்:-
தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் (Group I, II, IV, காவல்துறை, ஆசிரியர், கிளார்க், முதலியன) மொத்த பணியிடங்களில் 3 சதவீத இடங்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தேசிய / மாநில / பல்கலைக்கழக / பள்ளி மட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ்கள் கொண்டவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் போது விளையாட்டு சான்றிதழின் தரம், அளவு, பெற்ற இடம் ஆகியவை மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:-
தேர்வு அறிவிப்பு (Recruitment Notification) வெளியிடும் போது, அதில் "Sports Quota / 3% Reservation for Sports Persons" என்று குறிப்பிடப்படும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் "Sports Quota" என தேர்வு செய்து சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சான்றிதழ்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.






